Posts

கண்ணகியின் மதுரை எரித்த பிரம்மாண்ட பிழை

Image
  முன்னுரை: இந்த நீண்ட பதிவு எழுத பல உதவினாலும், சிலம்புச் செல்வரின் சிலப்பதிகார ஆய்வுரையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அந்த ஆய்வுரையைப் படிக்க விழைபவர்கள் மேலே உள்ள தலிப்பினைச் சொடுக்கிப் படிக்கவும்.   கண்ணகியின் கதையை இளங்கோவடிகள் என்பவர் சிலப்பதிகாரம் என்று தலைப்பிட்டு இயற்றிய இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் கொண்ட ஐபெரும் காப்பியங்களில் இது ஒன்றாகும். (மற்றவை – மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி). இந்நூலில் இயல் இசை நாடகம் ஆகியவைகள் இருப்பதால், சிலப்பதிகாரம் நாடகக் காப்பிய மென்றும் புகழப்படுகிறது. அத்துடன் உரைப் பாட்டும் இசைப்பாட்டும் இடையிடையே இயற்றப்பட்டுள்ளதால், சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்னும் பெருமையையும் உடைத்து. இளங்கோவடிகள் ஒரு சமணமத்ததுறவி. அவர் துறவி ஆனதே தம் அண்ணாவான சேரன் செங்குட்டுவனுக்கு அரச பதவி கிடைக்காது – அது இளைவனான இளங்கோவிற்கே கிடைக்கும் என்று நிமித்தக்காரர் சொல்லவும் அதைப் பொய்யாக்க துறவு பூண்டு, தியாகச் செம்மலாகி, இளங்கோவடிகளானார். கண்ணகியின் கதையுடன் தொடர்புடையது மாதவியின் மகளான மணிமேகலையின் கதையாகும். அ...

அயோத்தியில் ராம ஜென்ம பூமி கோயிலில் பால ராம சிலை பிரதிக்ஷை

Image
ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டி, பால ராமர் சிலையை அங்கு நிறுவ முடியுமா? – என்ற 500 ஆண்டுகால ஏக்கம் 22-ம் தேதி ஜனவரி 2024 அன்றோடு முடிவுக்கு வந்து இந்தியாவில் வாழும் ஹிந்து மக்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷங்கள் எழுப்பி ஆனந்த சாகரத்தில் மூழ்கினர் என்றால் மிகையாகாது. இதற்குக் காரணமான கோடானு கோடி மக்கள் கடந்த 500 ஆண்டுகளாகப் போராடி, உயிர் நீத்த ராம பக்தர்கள் அனைவரின் பாதங்களைத் தொட்டு வணங்குவோமாக. இந்த உன்னதமான காரியம் நமது கர்ம யோகி, தர்ம யோகி, பக்தி யோகியான பாரதப் பிரதமர் மோடி அவர்களால் முடிக்க வேண்டும் என்பது ராமனின் சித்தம் போலும். வாய்மை அத்துனை ராம பக்தர்களுக்கும் வந்தனை செய்து அவர்களுக்கு அனைத்து கல்யாண குணங்களும் கிடைக்கப் பெற்று நலமுடன் வாழ அந்த ராம் லாலவை வேண்டுகிறோம். ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்  

பரசுராமர் தன் தாய்க்கு இழைத்த பெரும் பிழை

Image
பரசுராமர் என்பது பரசு + ராமர் என்ற இரண்டு பதங்களைக் கொண்டதாகும். பரசு என்றால் கோடலி. பரசுராமர் என்றால் கோடலி ஆயுதத்தை ஏந்திய ராமர் என்று பொருள் படும். பரசுராமர் திரேதா யுகத்தில் பாதி பிராமண குணமும், பாதி க்ஷத்திரிய குணமும் கொண்டு பத்து அவதாரங்கள் எடுத்த விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகும். ஆகையால் பரசுராமர் பிராமணக்ஷத்திரியர் என்றும் அழைக்கப்படுகிறார். பரசுராமர் சிரஞ்சீயாவார். பரசுராமர் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களிலும் வருகிறார். அவர் கலியுகத்தின் இறுதியில் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தின் போது கல்கிக்குக் குருவாக வந்து சகல யுத்தக் கலைகளையும் கற்றுக் கொடுப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன. பரசுராமருக்கு குருவாக இருந்து அவருக்குச் சகல யுத்த வித்தைகளையும் கற்றுக் கொடுத்தவர் மஹரிஷி விஸ்வாமித்திரர். விஸ்வாமித்திரர் க்ஷத்திரிய அரசராக இருந்து தவம் செய்து பிராமணராக பிரம்மரிஷிப் பட்டம் பெற்றவர். சத்யவதியின் பேரன் தான் பரசுராமர். சத்யவதியின் தாய்க்குப் பிறந்தவர் தான் விஸ்வாமித்திரர். பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரரிடம் க்ஷத்திரியப்ராமணரான பரசுராமர் ஆயுதப் பயிற்சி பெற்றார். ஆனா...