ராஹுல் இடும் ஓலங்கள்
ராஹுலிடம் முன்பு எதைப் பற்றிக் கேட்டாலும், ‘சிஸ்டம் சரியில்லை’, ‘சிஸ்டத்தை மாற்ற வேண்டும்’, ‘மகளிர் எம்பவர்மெண்ட் தான் எல்லாவற்றிற்கும் தீர்வு’ – என்று கிளிப்பிள்ளை போல் காங்கிரஸ் ஐக்கிய முற்போற்குக் கூட்டணியின் மன்மோஹன் சிங் ஆட்சியின் இறுதி நாட்களில் சொல்லி தன்னையும், மீடியாவையும், அரசையும், மக்களையும் குழப்பியதால் சென்ற லோக்சபா தேர்தலில் 44 தொகுதியாக காங்கிரசை முடக்கி விட்டார். ஆனால், அதற்குக் காரணமான அவரது தாய் சோனியாவையோ, மகன் ராஹுலையோ காங்கிரஸ்காரர்கள் குற்றம் சொல்ல வில்லை. இந்த இமாலயப் படுதோல்விக்கு தலைவர்கள் யாரையும் குற்றம் சாட்டும் ஜனநாயக தர்மம் காங்கிரசில் இல்லை. மன்மோஹன் சிங் தான் காரணம் என்ற முனு முனுப்பும் எழுந்த வேகத்திலேயே அடங்கி விட்டது. புல்வாமாவின் தீவிரவாதியின் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜாய்ஸ்-இ-முஹமதின் தீவிரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் ஆசார் தான் இதற்குக் காரணம் என்பதை அந்த இயக்கமே மார்தட்டி உள்ளது. இந்த ஜாய்ஸ்-இ-முஹமதுவின் தலைவன் மசூத் ஆசாரை வாஜ்பாய் அரசு டிசம்பர் 1999 அன்று 154 விமானப் பயணிகள் – மற்றும் 15-க்கும் மேற்பட்ட...