குரு அஷ்டகம் ஆக்கம்: ஆதி சங்கர பகவத் பாதாள் ‘குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ - என்று மூன்று முறை ஆதி சங்கரர் திரும்பத் திரும்ப சிஷ்யனுக்குச் சொல்லி, குரு பக்தியின் அவசியத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இந்த குரு அஷ்டகம் ஒன்பது ஸ்லோகங்களைக் கொண்டது. உண்மையில் அது எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது என்று தான் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒன்பாதாவது ஸ்லோகம் ‘பலஸ்ருதி’யாக உள்ளது. மேலும், ‘குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ என்ற வரிகள் முதல் எட்டு ஸ்லோகங்களின் கடைசி வரிகளாக பொதுவாக உள்ளன. இதிலிருந்தும், ஆதி சங்கரர் குருஸ்தானத்திற்கு எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதும், சிருஷ்யர்கள் குருவை அடிபணிந்து, பணிவிடை செய்து, வேதம் படிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, அப்பொழுதான் ‘பயன்’ உண்டாகும் என்பதையும் அறிவுறுத்துகிறார் என்பதை உணரவேண்டும். குரு அஷ்டகம் – தமிழில் – தழுவலான மொழிபெயர்ப்பில் 1. சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம்...
Comments