ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரை – அனுப்பு: வத்ஸலா சங்கரன்.

 குசேலன் பகவானுடைய ஸந்நிதிக்குச் சென்றபோது தனக்கு "இது வேண்டும், அது வேண்டும்" என்றெல்லாம் சொல்லவில்லை..ஒரு பிடி அவலை பகவானிடம் கொடுத்தான், "இதனால் கிருஷ்ண பரமாத்மா ஸந்தோஷமாகட்டும்" என்ற ஒரே எண்ணத்தில் கொடுத்தான்..பகவான் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு " தனக்கு திருப்தியாய்விட்டது" என்றார்..அதே ஸமயத்தில் குசேலன் குபேரனாகிவிட்டான்..ஸர்வக்யனான பகவானிடம் நாம் ஒன்றும் கேட்கவேண்டியதில்லை, என்பதற்கு இது ஒன்று போதாதா..! அதனால் நாம் செய்யும் நல்ல காரியமோ பூஜையோ ப்ரசாரத்திற்காக அல்ல..அதனால் ஈசுவரன் திருப்தி அடைய வேண்டும்..அதனால் தான் பீஷ்மர் " யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா" என்று கூறி, பக்தியினால் ஒருவன் பகவான் நாமத்தை ஜபித்தால், அதுவே பெரிய தர்மம், என்று சுட்டிக் காட்டினார்.

 


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017