பண், அச்சு, காவடி
பண், அச்சு, காவடி
பண், அச்சு, காவடி இந்த மூன்றையும் வள்ளுவர் தம் மூன்று குறட்பாக்களில் எவ்வாறு உபயோகிக்கிறார் என்பது தான் இச் சிறு கட்டுரையின் நோக்கம்.
முதலில் பண் என்ற பொருளைப் பார்ப்போம். பண் என்றால் இசையோடு அதாவது ராகத்தோடு பாடுவதாகும். அந்த இசைக்கு அழகூட்ட இசைக் கருவிகளும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பாடப்படும் பாடல்கள் காதுக்கு இனிமையாக சிறந்த சங்கீதமாக அமையும். அபபடி இல்லாமல் பண்ணானது பாடலுக்குப் பொருத்தமாக இருக்காவிட்டால், அதனால் சங்கீதமே கெட்டுவிடும். இந்த அவல நிலையை எடுத்துக் காட்ட 'கண்ணோட்டம் இல்லாத கண்' போல் அந்தச் சங்கீதம் இருக்கும் என்கிறார் வள்ளுவர்.
கண்களுக்கு அழகு கனிவு. அதாவது அன்பாக அருளுடன் கருணை உள்ளத்துடன் நோக்குதல். அதுதான் கண்ணோட்டம் என்று வள்ளுவர் குறிக்கிறார். பண் கண்ணோட்டத்திற்கும், கண்களை பாட்டிற்கும் உபமானமாக வள்ளுவர் தருகிறார். கோபத்தோடு ஒருவன் பார்ப்பானாகில், அது கண்களின் அழகையே கெடுத்து, அந்த மனிதனை கொடியவனாகத் தான் சிந்திரிக்கும். அவனை அண்டுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். கோபப்படும் பொழுது கண்கள் சிவப்பாகிவிடுவதை நாம் பார்க்கிறோம். அது தான் கண்ணிற்கு இசையாத தவிர்க்கப் படவேண்டிய ஒன்றாகும். இசைக்கு அபஸ்சுரம் எப்படியோ அது போல் தான் கண்களுக்கு கண்ணோட்டம் இல்லாத நிலை. பாடல்களுக்கு இசைந்த பண் போல கண்களுக்கு கண்ணோட்டம் அமையவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் கருத்து.
அடுத்து அச்சு என்ற பொருளைப் பற்றியது. உருளும் பெரிய தேரைப் பார்திருப்பீர்கள். அதன் சக்கரங்கள் பெரிது. அதன் உடல் பாகம் பெரியது. அதில் உள்ள கோபுரம் பெரியது. இப்படிப் பட்ட பெரிய பெரிய பாகங்களைக் கொண்ட தேருக்கு அச்சு - அதாவது அச்சாணி மிக மிகச் சிறியது. அந்தப் மிகப் பெரிய உருவம் கொண்ட தேராக இருந்தாலும் அதன் முழு பாரத்தையும் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து அந்த மிகச் சிறிய அச்சாணிகள். அந்த சிறு உருவம் படைத்த அச்சாணியில்லாமல் தேர் உருளமுடியாது. அது போல, வடிவாற் சிறியவாரியிருந்தே பெரிய வினகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சர்களும் உளர். ஆகையால் அவரை அவரது சிறிய உருவத்தால் மதிப்பிடாமல், அவர் சொல்லும் திட்பம் நோக்கி மதித்து அரசன் செயல்பட வேண்டுவது அவசியம் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அச்சாணி கழன்றால் தேர் பெரிய விபத்தில் வந்து முடியும். ஆகையால் ஆலோசனைத் திட்டத்தின் தன்மையை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் கருத்து.
கடைசியாக ஆராயும் பொருள் காவடி. காவடியில் கம்பின் நுனியில் இரண்டு பாரங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் பாரம் சமஅளவில் இருந்தால், அதைத் தூக்குவதில் எந்தவித சிரமமும் படவேண்டியது இல்லை. அப்படி இல்லாமல், ஒருபக்கம் பாரம் அதிகமாகவும் மறுபக்கம் பரம் குறையாகவும் இருப்பின் இந்த வேறு பட்ட பாரங்களினால் காவடியைத் தூக்குவதில் ஒருவன் மிகவும் சிரமப் படவேண்டியிருக்கும். இந்த உவமையைத் தான் காதல் வயப்ப்ட்டவர்களுக்கு ஒப்பிட்டு ஒரு உண்மையைத் தெளியுருத்துகிறார்.காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சமஅளவில் காதலித்தால் அது சமஅளவுக் காவடிக்குச் சமம். அப்படி இல்லாமல், ஒரு தலைக் காதலாக இருப்பின், அந்த நிலை இனிது இல்லை. கொடிது. துன்பம் தான். அந்த சமஅளவு பாரம் இல்லாத காவடியை கீழே இறக்கும் பொழுது தான் அதைச் சுமப்பவனின் துன்பம் நீங்கும். அது போல் தான் இப்படிப்பட்ட ஒருதலைக் காதல் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.(குறள் எண்கள்: 573,667 & 1196)
பண், அச்சு, காவடி இந்த மூன்றையும் வள்ளுவர் தம் மூன்று குறட்பாக்களில் எவ்வாறு உபயோகிக்கிறார் என்பது தான் இச் சிறு கட்டுரையின் நோக்கம்.
முதலில் பண் என்ற பொருளைப் பார்ப்போம். பண் என்றால் இசையோடு அதாவது ராகத்தோடு பாடுவதாகும். அந்த இசைக்கு அழகூட்ட இசைக் கருவிகளும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பாடப்படும் பாடல்கள் காதுக்கு இனிமையாக சிறந்த சங்கீதமாக அமையும். அபபடி இல்லாமல் பண்ணானது பாடலுக்குப் பொருத்தமாக இருக்காவிட்டால், அதனால் சங்கீதமே கெட்டுவிடும். இந்த அவல நிலையை எடுத்துக் காட்ட 'கண்ணோட்டம் இல்லாத கண்' போல் அந்தச் சங்கீதம் இருக்கும் என்கிறார் வள்ளுவர்.
கண்களுக்கு அழகு கனிவு. அதாவது அன்பாக அருளுடன் கருணை உள்ளத்துடன் நோக்குதல். அதுதான் கண்ணோட்டம் என்று வள்ளுவர் குறிக்கிறார். பண் கண்ணோட்டத்திற்கும், கண்களை பாட்டிற்கும் உபமானமாக வள்ளுவர் தருகிறார். கோபத்தோடு ஒருவன் பார்ப்பானாகில், அது கண்களின் அழகையே கெடுத்து, அந்த மனிதனை கொடியவனாகத் தான் சிந்திரிக்கும். அவனை அண்டுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். கோபப்படும் பொழுது கண்கள் சிவப்பாகிவிடுவதை நாம் பார்க்கிறோம். அது தான் கண்ணிற்கு இசையாத தவிர்க்கப் படவேண்டிய ஒன்றாகும். இசைக்கு அபஸ்சுரம் எப்படியோ அது போல் தான் கண்களுக்கு கண்ணோட்டம் இல்லாத நிலை. பாடல்களுக்கு இசைந்த பண் போல கண்களுக்கு கண்ணோட்டம் அமையவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் கருத்து.
அடுத்து அச்சு என்ற பொருளைப் பற்றியது. உருளும் பெரிய தேரைப் பார்திருப்பீர்கள். அதன் சக்கரங்கள் பெரிது. அதன் உடல் பாகம் பெரியது. அதில் உள்ள கோபுரம் பெரியது. இப்படிப் பட்ட பெரிய பெரிய பாகங்களைக் கொண்ட தேருக்கு அச்சு - அதாவது அச்சாணி மிக மிகச் சிறியது. அந்தப் மிகப் பெரிய உருவம் கொண்ட தேராக இருந்தாலும் அதன் முழு பாரத்தையும் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து அந்த மிகச் சிறிய அச்சாணிகள். அந்த சிறு உருவம் படைத்த அச்சாணியில்லாமல் தேர் உருளமுடியாது. அது போல, வடிவாற் சிறியவாரியிருந்தே பெரிய வினகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சர்களும் உளர். ஆகையால் அவரை அவரது சிறிய உருவத்தால் மதிப்பிடாமல், அவர் சொல்லும் திட்பம் நோக்கி மதித்து அரசன் செயல்பட வேண்டுவது அவசியம் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அச்சாணி கழன்றால் தேர் பெரிய விபத்தில் வந்து முடியும். ஆகையால் ஆலோசனைத் திட்டத்தின் தன்மையை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் கருத்து.
கடைசியாக ஆராயும் பொருள் காவடி. காவடியில் கம்பின் நுனியில் இரண்டு பாரங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் பாரம் சமஅளவில் இருந்தால், அதைத் தூக்குவதில் எந்தவித சிரமமும் படவேண்டியது இல்லை. அப்படி இல்லாமல், ஒருபக்கம் பாரம் அதிகமாகவும் மறுபக்கம் பரம் குறையாகவும் இருப்பின் இந்த வேறு பட்ட பாரங்களினால் காவடியைத் தூக்குவதில் ஒருவன் மிகவும் சிரமப் படவேண்டியிருக்கும். இந்த உவமையைத் தான் காதல் வயப்ப்ட்டவர்களுக்கு ஒப்பிட்டு ஒரு உண்மையைத் தெளியுருத்துகிறார்.காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சமஅளவில் காதலித்தால் அது சமஅளவுக் காவடிக்குச் சமம். அப்படி இல்லாமல், ஒரு தலைக் காதலாக இருப்பின், அந்த நிலை இனிது இல்லை. கொடிது. துன்பம் தான். அந்த சமஅளவு பாரம் இல்லாத காவடியை கீழே இறக்கும் பொழுது தான் அதைச் சுமப்பவனின் துன்பம் நீங்கும். அது போல் தான் இப்படிப்பட்ட ஒருதலைக் காதல் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.(குறள் எண்கள்: 573,667 & 1196)
Comments