யாக்யவல்கியரின் விளக்கங்கள்
யாக்யவல்கியரின்
விளக்கங்கள்எழுத்து: ஜயந்திநாதன்
மஹா பாரத்தில் பகவத்கீதைக்குப் பிறகு வாழ்க்கைக்கு உபயோகமான எந்தக் காலத்திற்கும் ஏற்ற மிகவும் உயர்ந்த தத்துவங்கள், கருத்துக்கள், நீதிகள் ஆகியவைகளைக் குறள்போல் மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகும் சொன்ன சருக்கம் 'யக்ஷனின் கேள்விகளுக்கு யுதிஷ்டிரர் சொல்லிய பதில்களைச்' சொல்ல வேண்டும். தனது நான்கு சகோதரர்களும் ஒரு தடாகக் கரையிலே இறந்து கிடப்பதைப் பார்த்தும் மனம் தளராமல் தர்மத்தை யக்ஷனின் கேள்விகளுக்குப் பதில்களாகத் தெரிவித்தார் தருமர். யக்ஷனே தர்மதேவதையாக வந்தாகச் சொல்லப் படுகிறது.
பாண்டவர்கள் வனவாசம் செய்யும் பொழுது, ஒரு பிராமணனின் ஆச்ரமத்திலிருந்த ஹோமம் செய்ய அக்னி மூட்டுவதற்கான ஆரணிக் கட்டைகளை ஒரு கலைமான் தன் கொம்புகளில் மாட்டிக் கொண்டு, காற்றைப் போல் ஓடியது. இதைப் பார்த்த அந்த பிராமண சந்நியாசி பாண்டவர்களிடம் அந்த ஆரணிக்கட்டைகளை மீட்டுக் கொடுக்க வேண்டினான். ஆனால், அந்த மான் மாயமாய் மறைந்து விட்டது. மானைப் பிடிக்க கானகத்தில் ஓடி அலைந்த பாண்டவர்களுக்குக் களைப்பும் தாகமாகவும் இருந்தது. தண்ணீர் தடாகத்தைத் தேடி ஒவ்வொருவராக வந்து, 'தண்ணீரைப் பருகும் முன் என் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும்' என்று ஒரு குரல் தடாகத்திலிருந்து கேட்டும் அதை மதிக்காமல் பாண்டவர்கள் நால்வரும் பதில் சொல்லாமல் தடாகத்தின் தண்ணீரைப் பருகியதால் இறந்து விட்டதாக மஹாபாரதம் சொல்லுகிறது. தர்மர் தான் தகுந்த பதில்கள் சொல்லி யக்ஷன் வரத்தால் தன் தம்பிமார்கள் அனைவரையும் காப்பாற்றியதாக பாரதத்தின் கதை செல்கிறது. அந்தக் கேள்விகளும் பதில்களும் சிறந்தவை என்று சொல்லப்படுகிறது.அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி யாக்யவல்கியர் பல ரிஷிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். அந்த கேள்வி-பதில்களில் பல உயர்ந்த தத்துவங்கள் பொதுந்துள்ளன. அவைகளைப் பற்றி எளிய தமிழில் புரியும் படி சில கட்டுரைகளாக எழுதுவதாக உத்தேசம். அதற்கு முன்னோட்டமாக எழுதும் முதல் முன்னுரைக் கட்டுரை தான் இது.
விதேஹ நாட்டின் சக்ரவர்த்தி ஜனகர். அவர் ஒரு யாகம் செய்வதற்காக பல தானங்களைச் செய்தார். குரு மற்றும் பங்களா நகரங்களிலிருந்தெல்லாம் பண்டிதர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் ஜனகர் கூட்டிய பெரிய சபையில் கூடி இருந்தார்கள். அந்தச் சபையில் யாக்யவல்கியரும் தன் சீடர்களுடன் வந்திருந்தார்.ஜனகருக்கு தன் சபையில் கூடி உள்ளவர்களில் யார் மிகவும் வேதத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதைஅறிய மிகவும் ஆவலாக இருந்தது. அதற்காக ஜனகர் 1000 பசுக்களை ஒரு மைதானத்தில் வேலிக்குள் அடைத்து, ஒவ்வொரு பசுவின் கொம்புகளிலும் பத்து வராகன் தங்கக் காசுகளையும் கட்டி வைத்திருந்தார்.
'யார் உங்களில் வேத வித்தகரோ அவர் இந்தப் பசுக்களையும், தங்கக்காசுகளையும் பரிசாகப் பெற்றுக் கொள்ளலாம்' என்று அறிவித்தார். ஆனால் சபையில் உள்ள யாரும் இந்தப் பரிசைப் பெற முயலவில்லை.
யாக்யவல்கர், சமஸ்ரவாஸ் என்ற தம் சீடனை பசுக்களை தன் ஆசிரமத்திற்கு ஓட்டிக் கொண்டு செல்ல உத்திரவிட்டார். இதைப் பார்த்த பல பண்டிதர்கள் கோபப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஜனகரிடம் முறை இட்டார்கள்: 'எப்படி யாக்யவல்கர் தன்னை எல்லோரையும் விட சிறந்த வேத வித்தகர் என்று சொல்லாம்?'
ஜனகர் சபையில் இருந்த தலைமைக் குருவான அஸ்வலா எழுந்திருந்து, யாக்யவல்கரை ஜனகராஜவின் முன்னிலையில் கேட்டார்: நீர் தான் எங்கள் எல்லோரையும் விட சிறந்த வேத பண்டிதரோ?
யாக்யவல்கர்: நான் அப்படி நினைக்க வில்லை. இங்குள்ள மிகவும் சிறந்த பண்டிதர்களை வணங்குகிறேன். என் ஆச்சிரமத்திற்குப் பசுக்கள் தேவை. அதனால் தான் நான் பசுக்களைப் பரிசாகப் பெற விழைந்தேன்!
என்றாலும், யாக்யவல்கர் தன் வேத மேதாவிலாசத்தை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவர் அதற்கும் தயாராக இருந்தார் என்பதும் தெளிவு. அவரை ஒவ்வொருவராக தொடர்ந்து 8 பண்டிதர்கள் பலவிதமான கேள்விகள் கேட்டார்கள். மேலே குறிப்பிட்ட அஸ்வலாவில் ஆரம்பித்து, அர்த்தபாஹா, பூஜ்யா, உசஸ்தா, கஹோலா, கார்க்கி. உட்டலாகா, சகல்யா என்ற பண்டிதர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டார்கள். அதற்கெல்லாம் சலிக்காமல் பதில் சொன்னார் யாக்யவல்கர். இதில் கார்க்கி என்பவர் பெண் பண்டிதர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த பெண் பண்டிதர் பல கேள்விகள் கேட்டு, பிறகு முடிவாக இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொன்னால், யாகயவல்கியர் பெரிய வேத வித்து என்று தெரிவித்தார். அதற்கும் யாக்யவல்கியர் சரியாகப் பதில்கள் அளித்தார்.
அதைக் கேட்ட கார்க்கியும் 'இனி அவரைச் சோதிக்க வேண்டாம்' என்று சொல்லியும் அவரை மேலும் கேள்விகள் கேட்டு பதிலைப் பெற்றனர்.இதில் கடைசியாகக் கேள்விகளைக் கேட்ட சகல்யாதான் யாக்யவல்கரை ரொம்பவும் அதிகமான கேள்விகள் கேட்டவர். அத்துடன் தத்துவ விளக்கத்திற்காகக் கேள்விகள் கேட்காமல், யாக்யவல்கியரைத் தேற்கடிக்க வேண்டும் என்ற அவாவுடன் கேள்விக் கணைகளைத் தொடுப்பதாகவே தெரிந்தது. இதை உணர்ந்த யாக்யவல்கியர் தானே ஒரு கேள்வியை சகல்யாவிடம் கேட்டு, 'நீங்கள் இதற்குச் சரியாகப் பதில் சொல்லாவிட்டால், உங்கள் தலை வெடித்து விடும்' என்று சொல்லும் அளவிற்கு யாக்யவல்கரை மனம் புண்படும் படிச் செய்து விட்டார். சகல்யாவினால் யாக்யவல்கியர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததனால், அவர் தலை வெடித்து இறந்து போனார்.அதன் பிறகு, யாக்யவல்கரை யாரும் கேள்விகள் கேட்கவில்லை. அதனால் அவரே ஒரு சிறந்த வேத வித்தாக அறிவிக்கப் பட்டார்.
இருப்பினும், முத்தாய்ப்பாய் யாக்யவல்கர் உயிர்த் தத்துவத்தை மேலும் ஏழு சுலோகங்களில் விளக்கினார்.யாக்யவல்கியரிடம் மற்ற பண்டிதர்கள் கேள்விகள் கேட்காவிட்டாலும், ஜனக மஹாராஜாவே அவையில் இல்லாத தனக்குத் தெரிந்த பல வேத விற்பனர்கள் தன்னிடம் முன்பு தெரிவித்த பல தத்துவங்களுக்கு விளக்கம் கேட்கும் முகத்தான் பல கேள்விகள் கேட்கிறார். அந்த விற்பனர்கள் ஆறு பேர்கள். அவர்களின் பெயர்கள் வருமாறு: ஜிட்வன், யுதங்கா, பார்க்கு, கார்த்தாபி விபிதா, சக்தியகாமா, விதாக்தா.அதன் பிறகு, தனிப்பட்ட முறையில் ஜனக மஹாராஜாவும், யாக்யவல்கியரும் தங்கள் கருத்துக்களை மிக நீண்ட அளவில் பரிமாறிக்கொள்கிறார்கள். இதை யெல்லாம் பார்க்கும் பொழுது, பிரஹதாரண்ய உபநிஷத்தை, யாக்யவல்கியர் உபநிஷத் என்று சொல்ல வேண்டும் என்று நான் முன்பே குறிப்பிட்டது ரொம்பவும் சரியானது என்று இப்பொழுது நீங்கள் ஒப்புக்கொள்ளக் கூடும். ஏனென்றால், யாக்யவல்கியரின் கருத்துக்கள் இந்த உபநிஷத்தில் மிகவும் பரவலாக இருக்கின்றன. இனி வரும் கட்டுரைகளில் சுருக்கமாக மேலே குறிப்பிடுள்ளவர்களின் கேள்விகளுக்கு யாக்யவல்கியர் கூறிய பதில்கள் தொகுத்து அளிக்கப் படும். கூடிய மட்டும் மூலக்கருத்து சிதையாமல் கொடுக்க முயலுகிறேன்.
விளக்கங்கள்எழுத்து: ஜயந்திநாதன்
மஹா பாரத்தில் பகவத்கீதைக்குப் பிறகு வாழ்க்கைக்கு உபயோகமான எந்தக் காலத்திற்கும் ஏற்ற மிகவும் உயர்ந்த தத்துவங்கள், கருத்துக்கள், நீதிகள் ஆகியவைகளைக் குறள்போல் மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகும் சொன்ன சருக்கம் 'யக்ஷனின் கேள்விகளுக்கு யுதிஷ்டிரர் சொல்லிய பதில்களைச்' சொல்ல வேண்டும். தனது நான்கு சகோதரர்களும் ஒரு தடாகக் கரையிலே இறந்து கிடப்பதைப் பார்த்தும் மனம் தளராமல் தர்மத்தை யக்ஷனின் கேள்விகளுக்குப் பதில்களாகத் தெரிவித்தார் தருமர். யக்ஷனே தர்மதேவதையாக வந்தாகச் சொல்லப் படுகிறது.
பாண்டவர்கள் வனவாசம் செய்யும் பொழுது, ஒரு பிராமணனின் ஆச்ரமத்திலிருந்த ஹோமம் செய்ய அக்னி மூட்டுவதற்கான ஆரணிக் கட்டைகளை ஒரு கலைமான் தன் கொம்புகளில் மாட்டிக் கொண்டு, காற்றைப் போல் ஓடியது. இதைப் பார்த்த அந்த பிராமண சந்நியாசி பாண்டவர்களிடம் அந்த ஆரணிக்கட்டைகளை மீட்டுக் கொடுக்க வேண்டினான். ஆனால், அந்த மான் மாயமாய் மறைந்து விட்டது. மானைப் பிடிக்க கானகத்தில் ஓடி அலைந்த பாண்டவர்களுக்குக் களைப்பும் தாகமாகவும் இருந்தது. தண்ணீர் தடாகத்தைத் தேடி ஒவ்வொருவராக வந்து, 'தண்ணீரைப் பருகும் முன் என் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும்' என்று ஒரு குரல் தடாகத்திலிருந்து கேட்டும் அதை மதிக்காமல் பாண்டவர்கள் நால்வரும் பதில் சொல்லாமல் தடாகத்தின் தண்ணீரைப் பருகியதால் இறந்து விட்டதாக மஹாபாரதம் சொல்லுகிறது. தர்மர் தான் தகுந்த பதில்கள் சொல்லி யக்ஷன் வரத்தால் தன் தம்பிமார்கள் அனைவரையும் காப்பாற்றியதாக பாரதத்தின் கதை செல்கிறது. அந்தக் கேள்விகளும் பதில்களும் சிறந்தவை என்று சொல்லப்படுகிறது.அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி யாக்யவல்கியர் பல ரிஷிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். அந்த கேள்வி-பதில்களில் பல உயர்ந்த தத்துவங்கள் பொதுந்துள்ளன. அவைகளைப் பற்றி எளிய தமிழில் புரியும் படி சில கட்டுரைகளாக எழுதுவதாக உத்தேசம். அதற்கு முன்னோட்டமாக எழுதும் முதல் முன்னுரைக் கட்டுரை தான் இது.
விதேஹ நாட்டின் சக்ரவர்த்தி ஜனகர். அவர் ஒரு யாகம் செய்வதற்காக பல தானங்களைச் செய்தார். குரு மற்றும் பங்களா நகரங்களிலிருந்தெல்லாம் பண்டிதர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் ஜனகர் கூட்டிய பெரிய சபையில் கூடி இருந்தார்கள். அந்தச் சபையில் யாக்யவல்கியரும் தன் சீடர்களுடன் வந்திருந்தார்.ஜனகருக்கு தன் சபையில் கூடி உள்ளவர்களில் யார் மிகவும் வேதத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதைஅறிய மிகவும் ஆவலாக இருந்தது. அதற்காக ஜனகர் 1000 பசுக்களை ஒரு மைதானத்தில் வேலிக்குள் அடைத்து, ஒவ்வொரு பசுவின் கொம்புகளிலும் பத்து வராகன் தங்கக் காசுகளையும் கட்டி வைத்திருந்தார்.
'யார் உங்களில் வேத வித்தகரோ அவர் இந்தப் பசுக்களையும், தங்கக்காசுகளையும் பரிசாகப் பெற்றுக் கொள்ளலாம்' என்று அறிவித்தார். ஆனால் சபையில் உள்ள யாரும் இந்தப் பரிசைப் பெற முயலவில்லை.
யாக்யவல்கர், சமஸ்ரவாஸ் என்ற தம் சீடனை பசுக்களை தன் ஆசிரமத்திற்கு ஓட்டிக் கொண்டு செல்ல உத்திரவிட்டார். இதைப் பார்த்த பல பண்டிதர்கள் கோபப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஜனகரிடம் முறை இட்டார்கள்: 'எப்படி யாக்யவல்கர் தன்னை எல்லோரையும் விட சிறந்த வேத வித்தகர் என்று சொல்லாம்?'
ஜனகர் சபையில் இருந்த தலைமைக் குருவான அஸ்வலா எழுந்திருந்து, யாக்யவல்கரை ஜனகராஜவின் முன்னிலையில் கேட்டார்: நீர் தான் எங்கள் எல்லோரையும் விட சிறந்த வேத பண்டிதரோ?
யாக்யவல்கர்: நான் அப்படி நினைக்க வில்லை. இங்குள்ள மிகவும் சிறந்த பண்டிதர்களை வணங்குகிறேன். என் ஆச்சிரமத்திற்குப் பசுக்கள் தேவை. அதனால் தான் நான் பசுக்களைப் பரிசாகப் பெற விழைந்தேன்!
என்றாலும், யாக்யவல்கர் தன் வேத மேதாவிலாசத்தை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவர் அதற்கும் தயாராக இருந்தார் என்பதும் தெளிவு. அவரை ஒவ்வொருவராக தொடர்ந்து 8 பண்டிதர்கள் பலவிதமான கேள்விகள் கேட்டார்கள். மேலே குறிப்பிட்ட அஸ்வலாவில் ஆரம்பித்து, அர்த்தபாஹா, பூஜ்யா, உசஸ்தா, கஹோலா, கார்க்கி. உட்டலாகா, சகல்யா என்ற பண்டிதர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டார்கள். அதற்கெல்லாம் சலிக்காமல் பதில் சொன்னார் யாக்யவல்கர். இதில் கார்க்கி என்பவர் பெண் பண்டிதர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த பெண் பண்டிதர் பல கேள்விகள் கேட்டு, பிறகு முடிவாக இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொன்னால், யாகயவல்கியர் பெரிய வேத வித்து என்று தெரிவித்தார். அதற்கும் யாக்யவல்கியர் சரியாகப் பதில்கள் அளித்தார்.
அதைக் கேட்ட கார்க்கியும் 'இனி அவரைச் சோதிக்க வேண்டாம்' என்று சொல்லியும் அவரை மேலும் கேள்விகள் கேட்டு பதிலைப் பெற்றனர்.இதில் கடைசியாகக் கேள்விகளைக் கேட்ட சகல்யாதான் யாக்யவல்கரை ரொம்பவும் அதிகமான கேள்விகள் கேட்டவர். அத்துடன் தத்துவ விளக்கத்திற்காகக் கேள்விகள் கேட்காமல், யாக்யவல்கியரைத் தேற்கடிக்க வேண்டும் என்ற அவாவுடன் கேள்விக் கணைகளைத் தொடுப்பதாகவே தெரிந்தது. இதை உணர்ந்த யாக்யவல்கியர் தானே ஒரு கேள்வியை சகல்யாவிடம் கேட்டு, 'நீங்கள் இதற்குச் சரியாகப் பதில் சொல்லாவிட்டால், உங்கள் தலை வெடித்து விடும்' என்று சொல்லும் அளவிற்கு யாக்யவல்கரை மனம் புண்படும் படிச் செய்து விட்டார். சகல்யாவினால் யாக்யவல்கியர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததனால், அவர் தலை வெடித்து இறந்து போனார்.அதன் பிறகு, யாக்யவல்கரை யாரும் கேள்விகள் கேட்கவில்லை. அதனால் அவரே ஒரு சிறந்த வேத வித்தாக அறிவிக்கப் பட்டார்.
இருப்பினும், முத்தாய்ப்பாய் யாக்யவல்கர் உயிர்த் தத்துவத்தை மேலும் ஏழு சுலோகங்களில் விளக்கினார்.யாக்யவல்கியரிடம் மற்ற பண்டிதர்கள் கேள்விகள் கேட்காவிட்டாலும், ஜனக மஹாராஜாவே அவையில் இல்லாத தனக்குத் தெரிந்த பல வேத விற்பனர்கள் தன்னிடம் முன்பு தெரிவித்த பல தத்துவங்களுக்கு விளக்கம் கேட்கும் முகத்தான் பல கேள்விகள் கேட்கிறார். அந்த விற்பனர்கள் ஆறு பேர்கள். அவர்களின் பெயர்கள் வருமாறு: ஜிட்வன், யுதங்கா, பார்க்கு, கார்த்தாபி விபிதா, சக்தியகாமா, விதாக்தா.அதன் பிறகு, தனிப்பட்ட முறையில் ஜனக மஹாராஜாவும், யாக்யவல்கியரும் தங்கள் கருத்துக்களை மிக நீண்ட அளவில் பரிமாறிக்கொள்கிறார்கள். இதை யெல்லாம் பார்க்கும் பொழுது, பிரஹதாரண்ய உபநிஷத்தை, யாக்யவல்கியர் உபநிஷத் என்று சொல்ல வேண்டும் என்று நான் முன்பே குறிப்பிட்டது ரொம்பவும் சரியானது என்று இப்பொழுது நீங்கள் ஒப்புக்கொள்ளக் கூடும். ஏனென்றால், யாக்யவல்கியரின் கருத்துக்கள் இந்த உபநிஷத்தில் மிகவும் பரவலாக இருக்கின்றன. இனி வரும் கட்டுரைகளில் சுருக்கமாக மேலே குறிப்பிடுள்ளவர்களின் கேள்விகளுக்கு யாக்யவல்கியர் கூறிய பதில்கள் தொகுத்து அளிக்கப் படும். கூடிய மட்டும் மூலக்கருத்து சிதையாமல் கொடுக்க முயலுகிறேன்.
Comments