யாக்யவல்கியரின் விளக்கங்கள்
யாக்யவல்கியரின் விளக்கங்கள்
ஜனகர் சபையில் உள்ள உசஸ்தா என்ற ரிஷி யாக்யவல்கியரிடம் சில கேள்விகள் கேட்கிறார். இவர் காக்கிராவின் புத்திரர்.
ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உயிர் மூச்சு. அதைப் பற்றிய மிகவும் நுணுக்கமான விளக்கத்தைக் கேட்டு உசஸ்தா அறிகிறார். மேலும் அறிவிற்கு எளிதில் பிடிபடாத தத்துமான பரப்பிரம்மத்தைப் பற்றியும், எல்லா உயிர்களின் ஆதார சுருதியாக குடியிருக்கும் ஆத்மாவைப் பற்றியும் விளக்கம் கேட்டு அறிகிறார்.
உசஸ்தா: யாக்யவல்கியரே! பிரம்மத்தைப் பற்றி நேரடியாக, தெளிவான விளக்கம் தேவை. அத்துடன் எல்லாரிடமும் குடிகொண்டிருக்கும் ஆத்மாவைப் பற்றிய விளக்கமும் சொல்ல வேண்டும்.
யாக்யவல்கியர்: எங்கும் பரவி நிறைந்துள்ளது எதுவோ அதுதான் பரப்பிரம்மம். எல்லோர் உடம்பிலும் குடிகொண்டிருக்கும் 'வஸ்து'தான் ஆத்மா.
உசஸ்தா: எல்லோரிடம் குடிகொண்டிருக்கும் 'வஸ்து'வான ஆத்மாவைப் பற்றித் தெரிய விழைகிறேன்.
யாக்யவல்கியர்: உடலில் இருக்கும் உயிரின் மூலக் கூறுதான் ஆத்மா. உயிரின் ஆதார சுருதிதான் மூச்சுக் காற்று. ஒவ்வொரு ஜீவனும் சுவாசிக்கும் காற்றுத்தான் இந்த உலகில் உயிர் வாழும் சக்தியினைக் கொடுக்கின்றது. சுவாசிக்கும் காற்று நான்கு வகைப்படும். பிராணவாயு, அபாண வாயு, வியாண வாயு, உதாண வாயு என்பனவைகள்தான் அந்த நான்கு சுவாசிக்கும் காற்றாகும்.
உசஸ்தா: அந்த நான்கு வாயுக்களைப் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.
யாக்யவல்கியர்: மேலே நகரும் மூச்சுக் காற்றுத்தான் பிராணவாயு என்பதாகும். கீழே நகரும் மூச்சுக் காற்றுத் தான் அபாணவாயுவாகும். உடலிலுள் எங்கும் வெளிப்புறமாக நகரும் மூச்சுக் காற்று வியாண வாயுவாகும். மேல்பக்கமாக நகரும் மூச்சுக் காற்றுத் தான் உதாண வாயுவாகும்.
உசஸ்தா: ஆத்மாவைப் பற்றி மிகவும் தெளிவாகவும், புரியும்படியும் விளக்கி விட்டீர்கள். ஒரு பசு அல்லது ஒரு குதிரை - இவைகளைப் பற்றி அறிய அவைகளை என் கண்முன்னிலையிலேயே கொண்டு நிறுத்தும் அளவில் உங்கள் விளக்கம் சிறப்பாக அமைந்து விட்டது போன்று, ஆத்மாவையை நான் நேரில் பார்த்த தெளிவான சிந்தனையை அடைந்துள்ளேன். இதே போன்று பிரம்மத்தைப் பற்றியும் தாங்கள் விளக்க வேண்டும். பிரம்மம் என்பது ஆத்மாவில் உள்ளும், வெளி எங்கும் பரவுள்ள சக்தி என்பது பொதுவான கருத்து. அந்தக் கருத்தை விரிவாகவும், நேரிடையாகவும், உடனே புரியும்படியாகவும் விளக்கும் படி நான் தங்களிடம் வேண்டுகிறேன்.
யாக்யவல்கியர்: உலகக் காட்சிகளுக்கு எல்லாம் சாட்சியாக நீ காணும் காட்சிகளுக்கு ஆதாரமாக விளங்கும் சக்தியை உன்னால் காணமுடியாது. அதேபோல் கேட்கப்படும் சப்தங்களுக்கெல்லாம் மூலகர்த்தாவான சக்திவாய்ந்த கேட்பவரையும் உன்னால் காணமுடியாது. எண்ணங்கள் எழுவதற்கெல்லாம் ஆதிகர்த்தாவான எண்ணும் சக்திதேவனை உன்னால் நினைத்துப் பார்க்க முடியாது. ஞானத்தின் ஞானியாக இருக்கும் தேவதையையும் உன்னால் அறியமுடியாது. ஆனால், இந்த சக்தி எல்லாயிடத்திலும் பரவி உள்ளது. அந்த சக்திதான் பரப்பிரம்மம். அது - அந்த எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ள பரமாத்மா உன் உடம்பில் குடிகொண்டிருக்கும் உன் ஆத்மாவிலும் குடிகொண்டுள்ளது என்பதை அறிவாயாக. அந்த சக்தி சாஸ்வதமானது, அழிவற்றது. ஆனால், மற்ற அனைத்தும் அழிடையும் தன்மை உள்ளது.
ஆசிரியரின் பின் உரை:இந்த யாக்யவல்கியரின் விளக்கத்திற்கு மேலும் சிறிது விளக்கம் வேண்டும் என்று நினைக்கிறேன். யாக்ய வல்கியரால் மூச்சுக் காற்று நான்கு வகையாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் யோக சாஸ்திரப்படி, மூச்சுக்காற்றானது ஐந்தாக வகைப்படுத்தப் பட்டுள்ளது: மேலே குறிப்பிட்டுள்ள நான்கு வகைகளுடன், (பிராணவாயு, அபாணவாயு, வியாணவாயு, உதாணவாயு), ஐந்தாவதாக சமாணவாயுவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஐந்து மூச்சுக் காற்றைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிவது அவசியம்.
1. பிராணவாயு மையம் கொண்டுள்ள இடம் இருதயம். அதன் வர்ணம் மஞ்சள். மூச்சுவிடுவது அதன் இயக்கம்.
2. அபாணவாயு மையம் கொண்டுள்ள இடம் மலம் கழிக்கும் வாய். அதன் வர்ணம் ஆரஞ்சு - சிவப்பு. மலம் சிறுநீர் வெளியேற்றம் அதன் இயக்கம்.
3. சமாணவாயு மையம் கொண்டுள்ள இடம் நாபி. அதன் வர்ணம் பச்சை. ஜீரணிப்பது அதன் இயக்கம்.
4. உதாணவாயு மையம் கொண்டுள்ள இடம் தொண்டை. அதன் வர்ணம் வயலட் - நீலம். விழுங்குதல் அதன் இயக்கம்.
5. வியாணவாயு மையம் கொண்டுள்ள இடம் உடல் முழுமையும். அதன் வர்ணம் ரோஸ். ரத்த ஓட்டம் அதன் இயக்கம்.
வாயு அல்லது காற்று ஒன்றுதான். ஆனால், அவைகள் எப்படி ஐந்தாக உருவாகின்றன என்ற சந்தேகம் ஏற்படும். சைக்கிள் சக்கரத்தில் உள்ள காற்று, இரு சக்கர மோட்டார் வண்டிச் சக்கரத்திலுள்ள காற்று, கார் சக்கரத்திலுள்ள காற்று, டிராக்டர் சக்கரத்தில் உள்ள காற்று, பிளேன் சக்கரத்தில் உள்ள காற்று அனைத்தும் ஒன்றானாலும், அந்த வாகனத்தின் இயக்கத்திற்கு ஏற்ப பளு, மற்றும் ஓட்டத்திற்கு ஏதுவாக அந்தந்த வாகனங்களின் காற்றின் தன்மை மாறுபடும். அதைப் போல் தான் மூச்சுக் காற்று உடம்பின் இயக்கத்திற்கு ஏற்ப குணத்திலும், சக்தியிலும் மாறுபட்டு இருக்கின்றன. பெயரில் மட்டுமல்லாது, அதன் இயல்பிலும் மூச்சுக் காற்று மாறுபட்டு, உயிருக்கு ஒரு உந்து சக்தியாக பல வழிகளில் உதவிகரமாக இருக்கின்றது.
மூச்சுக்காற்று உலகத்தில் இருக்கும் ஒரு மொத்த சக்தியின் உருவமாகும். அது உயிரின் மூலக் கூறு என்றால் மிகையாகாது. அது ஒரு முக்கிய உந்து சக்தி, சூட்சும சக்தி. நாம் சுவாசிப்பது என்பது அந்த 'பிராணா' என்ற காற்றின் வெளிப்படையான தோற்றமாகும். சுவாசிக்கும் காற்றை அல்லது மூச்சை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அது அவர் மனதைக் கட்டுப்படுத்த உதவும் உபாயமாகும். உலகத்தில் உள்ள பல சக்திகள் அனைத்தும் இந்த காற்றின் பல பரிமாணங்களாகும். அதாவது, உஷ்ணம், வெளிச்சம், மின்சாரம், காந்தம் இவைகள் அனைத்தும் காற்றுச் சக்தியின் பல அவதாரங்கள் என்பது தான் உண்மை.
பிராணா என்ற காற்றுச் சக்தி மனித மனத்தைச் சார்ந்தது. மனதின் மூலம் மனத்திடம் பெறவேண்டும். இந்த மனத்திடத்தில் மூலம் தனி மனித ஆத்மாவை அறிந்து, அடையவேண்டும். தனி மனித ஆத்மா மூலம் பரமாத்வாவை அடைய வேண்டும். ஆகையால் இதற்கெல்லாம் மூலமாக இருக்கும் மூச்சுக் காற்றை யோகா வழி மூலம் கட்டுப்படுத்தி அக-புற வாழ்வில் வெற்றிவாகை சூடவேண்டும். ஆகையால், ஆத்மாவை அறிவதற்கும், பரமாத்மாவை அடைவதற்கும், சுவாசிக்கும் காற்றை பல யோகாசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்துவது அவசியமாகும். அதில் முக்கியமாக நாம் கடைப்பிடிக்க வேண்டியது பிராணாயாமம் ஆகும்.
ஜனகர் சபையில் உள்ள உசஸ்தா என்ற ரிஷி யாக்யவல்கியரிடம் சில கேள்விகள் கேட்கிறார். இவர் காக்கிராவின் புத்திரர்.
ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உயிர் மூச்சு. அதைப் பற்றிய மிகவும் நுணுக்கமான விளக்கத்தைக் கேட்டு உசஸ்தா அறிகிறார். மேலும் அறிவிற்கு எளிதில் பிடிபடாத தத்துமான பரப்பிரம்மத்தைப் பற்றியும், எல்லா உயிர்களின் ஆதார சுருதியாக குடியிருக்கும் ஆத்மாவைப் பற்றியும் விளக்கம் கேட்டு அறிகிறார்.
உசஸ்தா: யாக்யவல்கியரே! பிரம்மத்தைப் பற்றி நேரடியாக, தெளிவான விளக்கம் தேவை. அத்துடன் எல்லாரிடமும் குடிகொண்டிருக்கும் ஆத்மாவைப் பற்றிய விளக்கமும் சொல்ல வேண்டும்.
யாக்யவல்கியர்: எங்கும் பரவி நிறைந்துள்ளது எதுவோ அதுதான் பரப்பிரம்மம். எல்லோர் உடம்பிலும் குடிகொண்டிருக்கும் 'வஸ்து'தான் ஆத்மா.
உசஸ்தா: எல்லோரிடம் குடிகொண்டிருக்கும் 'வஸ்து'வான ஆத்மாவைப் பற்றித் தெரிய விழைகிறேன்.
யாக்யவல்கியர்: உடலில் இருக்கும் உயிரின் மூலக் கூறுதான் ஆத்மா. உயிரின் ஆதார சுருதிதான் மூச்சுக் காற்று. ஒவ்வொரு ஜீவனும் சுவாசிக்கும் காற்றுத்தான் இந்த உலகில் உயிர் வாழும் சக்தியினைக் கொடுக்கின்றது. சுவாசிக்கும் காற்று நான்கு வகைப்படும். பிராணவாயு, அபாண வாயு, வியாண வாயு, உதாண வாயு என்பனவைகள்தான் அந்த நான்கு சுவாசிக்கும் காற்றாகும்.
உசஸ்தா: அந்த நான்கு வாயுக்களைப் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.
யாக்யவல்கியர்: மேலே நகரும் மூச்சுக் காற்றுத்தான் பிராணவாயு என்பதாகும். கீழே நகரும் மூச்சுக் காற்றுத் தான் அபாணவாயுவாகும். உடலிலுள் எங்கும் வெளிப்புறமாக நகரும் மூச்சுக் காற்று வியாண வாயுவாகும். மேல்பக்கமாக நகரும் மூச்சுக் காற்றுத் தான் உதாண வாயுவாகும்.
உசஸ்தா: ஆத்மாவைப் பற்றி மிகவும் தெளிவாகவும், புரியும்படியும் விளக்கி விட்டீர்கள். ஒரு பசு அல்லது ஒரு குதிரை - இவைகளைப் பற்றி அறிய அவைகளை என் கண்முன்னிலையிலேயே கொண்டு நிறுத்தும் அளவில் உங்கள் விளக்கம் சிறப்பாக அமைந்து விட்டது போன்று, ஆத்மாவையை நான் நேரில் பார்த்த தெளிவான சிந்தனையை அடைந்துள்ளேன். இதே போன்று பிரம்மத்தைப் பற்றியும் தாங்கள் விளக்க வேண்டும். பிரம்மம் என்பது ஆத்மாவில் உள்ளும், வெளி எங்கும் பரவுள்ள சக்தி என்பது பொதுவான கருத்து. அந்தக் கருத்தை விரிவாகவும், நேரிடையாகவும், உடனே புரியும்படியாகவும் விளக்கும் படி நான் தங்களிடம் வேண்டுகிறேன்.
யாக்யவல்கியர்: உலகக் காட்சிகளுக்கு எல்லாம் சாட்சியாக நீ காணும் காட்சிகளுக்கு ஆதாரமாக விளங்கும் சக்தியை உன்னால் காணமுடியாது. அதேபோல் கேட்கப்படும் சப்தங்களுக்கெல்லாம் மூலகர்த்தாவான சக்திவாய்ந்த கேட்பவரையும் உன்னால் காணமுடியாது. எண்ணங்கள் எழுவதற்கெல்லாம் ஆதிகர்த்தாவான எண்ணும் சக்திதேவனை உன்னால் நினைத்துப் பார்க்க முடியாது. ஞானத்தின் ஞானியாக இருக்கும் தேவதையையும் உன்னால் அறியமுடியாது. ஆனால், இந்த சக்தி எல்லாயிடத்திலும் பரவி உள்ளது. அந்த சக்திதான் பரப்பிரம்மம். அது - அந்த எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ள பரமாத்மா உன் உடம்பில் குடிகொண்டிருக்கும் உன் ஆத்மாவிலும் குடிகொண்டுள்ளது என்பதை அறிவாயாக. அந்த சக்தி சாஸ்வதமானது, அழிவற்றது. ஆனால், மற்ற அனைத்தும் அழிடையும் தன்மை உள்ளது.
ஆசிரியரின் பின் உரை:இந்த யாக்யவல்கியரின் விளக்கத்திற்கு மேலும் சிறிது விளக்கம் வேண்டும் என்று நினைக்கிறேன். யாக்ய வல்கியரால் மூச்சுக் காற்று நான்கு வகையாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் யோக சாஸ்திரப்படி, மூச்சுக்காற்றானது ஐந்தாக வகைப்படுத்தப் பட்டுள்ளது: மேலே குறிப்பிட்டுள்ள நான்கு வகைகளுடன், (பிராணவாயு, அபாணவாயு, வியாணவாயு, உதாணவாயு), ஐந்தாவதாக சமாணவாயுவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஐந்து மூச்சுக் காற்றைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிவது அவசியம்.
1. பிராணவாயு மையம் கொண்டுள்ள இடம் இருதயம். அதன் வர்ணம் மஞ்சள். மூச்சுவிடுவது அதன் இயக்கம்.
2. அபாணவாயு மையம் கொண்டுள்ள இடம் மலம் கழிக்கும் வாய். அதன் வர்ணம் ஆரஞ்சு - சிவப்பு. மலம் சிறுநீர் வெளியேற்றம் அதன் இயக்கம்.
3. சமாணவாயு மையம் கொண்டுள்ள இடம் நாபி. அதன் வர்ணம் பச்சை. ஜீரணிப்பது அதன் இயக்கம்.
4. உதாணவாயு மையம் கொண்டுள்ள இடம் தொண்டை. அதன் வர்ணம் வயலட் - நீலம். விழுங்குதல் அதன் இயக்கம்.
5. வியாணவாயு மையம் கொண்டுள்ள இடம் உடல் முழுமையும். அதன் வர்ணம் ரோஸ். ரத்த ஓட்டம் அதன் இயக்கம்.
வாயு அல்லது காற்று ஒன்றுதான். ஆனால், அவைகள் எப்படி ஐந்தாக உருவாகின்றன என்ற சந்தேகம் ஏற்படும். சைக்கிள் சக்கரத்தில் உள்ள காற்று, இரு சக்கர மோட்டார் வண்டிச் சக்கரத்திலுள்ள காற்று, கார் சக்கரத்திலுள்ள காற்று, டிராக்டர் சக்கரத்தில் உள்ள காற்று, பிளேன் சக்கரத்தில் உள்ள காற்று அனைத்தும் ஒன்றானாலும், அந்த வாகனத்தின் இயக்கத்திற்கு ஏற்ப பளு, மற்றும் ஓட்டத்திற்கு ஏதுவாக அந்தந்த வாகனங்களின் காற்றின் தன்மை மாறுபடும். அதைப் போல் தான் மூச்சுக் காற்று உடம்பின் இயக்கத்திற்கு ஏற்ப குணத்திலும், சக்தியிலும் மாறுபட்டு இருக்கின்றன. பெயரில் மட்டுமல்லாது, அதன் இயல்பிலும் மூச்சுக் காற்று மாறுபட்டு, உயிருக்கு ஒரு உந்து சக்தியாக பல வழிகளில் உதவிகரமாக இருக்கின்றது.
மூச்சுக்காற்று உலகத்தில் இருக்கும் ஒரு மொத்த சக்தியின் உருவமாகும். அது உயிரின் மூலக் கூறு என்றால் மிகையாகாது. அது ஒரு முக்கிய உந்து சக்தி, சூட்சும சக்தி. நாம் சுவாசிப்பது என்பது அந்த 'பிராணா' என்ற காற்றின் வெளிப்படையான தோற்றமாகும். சுவாசிக்கும் காற்றை அல்லது மூச்சை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அது அவர் மனதைக் கட்டுப்படுத்த உதவும் உபாயமாகும். உலகத்தில் உள்ள பல சக்திகள் அனைத்தும் இந்த காற்றின் பல பரிமாணங்களாகும். அதாவது, உஷ்ணம், வெளிச்சம், மின்சாரம், காந்தம் இவைகள் அனைத்தும் காற்றுச் சக்தியின் பல அவதாரங்கள் என்பது தான் உண்மை.
பிராணா என்ற காற்றுச் சக்தி மனித மனத்தைச் சார்ந்தது. மனதின் மூலம் மனத்திடம் பெறவேண்டும். இந்த மனத்திடத்தில் மூலம் தனி மனித ஆத்மாவை அறிந்து, அடையவேண்டும். தனி மனித ஆத்மா மூலம் பரமாத்வாவை அடைய வேண்டும். ஆகையால் இதற்கெல்லாம் மூலமாக இருக்கும் மூச்சுக் காற்றை யோகா வழி மூலம் கட்டுப்படுத்தி அக-புற வாழ்வில் வெற்றிவாகை சூடவேண்டும். ஆகையால், ஆத்மாவை அறிவதற்கும், பரமாத்மாவை அடைவதற்கும், சுவாசிக்கும் காற்றை பல யோகாசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்துவது அவசியமாகும். அதில் முக்கியமாக நாம் கடைப்பிடிக்க வேண்டியது பிராணாயாமம் ஆகும்.
Comments