உயிர்மூச்சு உயர்ந்தது
உயிர்மூச்சு உயர்ந்தது
குறிப்பு:
நமது உபநிடத்தில் பல உயர்ந்த கருத்துக்களைப் புரிய வைப்பதற்கு பலவிதமான சம்பவக் கதைகளையும், உருவகக் கதைகளையும் ஆங்காங்கே பரவலாகச் சொல்லி இருக்கிறார்கள். அவைகளை என் பாணியில் சுவை குன்றாது உங்களுக்குத் தொடர்ந்து அளிக்க முன் வந்துள்ளேன். உபநிடதக் கருத்தை முக்கிய கருவாகக் கொண்டு நான் எழுத விழைவதால், இது உபநிடத்தை ஒட்டியதாக இருந்தாலும், விளக்கம் குறித்துச் சில பல அதில் இல்லாத ஆனால் பொருத்தமான கருத்துக்களையும் சொல்ல விழைகிறேன். சுவையுடன், சுலபமாகப் புரியும் தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோள்.
உடம்பில் உள்ள உறுப்புக்களில் உயிர் மூச்சுதான் புராதனமானதும், மிகச் சிறந்ததுமாகும். ஆனால், பேசும் தன்மை கொண்ட வாயுவும் மிகச் சிறந்தது தான். தீர்க்கமான பார்வைகொண்ட கண்களும் சிறந்தது தான். கேட்கும் திறன் கொண்ட காதுகளும் சிறந்த செல்வத்தைப் போல் ஆகும்.
நினைக்கும் திறன் கொண்ட மனது 'தான் தான் எல்லோருக்கும் வழிகாட்டும் குரு' என்று நினைத்து, தான் தான் சிறந்த மனிதனின் உறுப்பு என்றது. உடம்பிலுள்ள வாய், கண்கள், காதுகள், மனம், உயிர் மூச்சு இவைகள் ஒவ்வொன்றும், 'தான் தான் சிறந்த உறுப்பு' என்று ஒன்றுக்கொன்று வாதிட்டன.அவைகள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல், வாதிட்டன.
'ஏன், நாமே சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். நமது ஆதி தந்தையான பிராஜாபதியிடம் சென்று, இதற்கு விடை காண்போம்' என்று அந்தப் புலன் உறுப்புகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்தன. அதன்படி அந்த உறுப்புகளான வாய், கண், காது, மனம் மற்றும் சுவாசம் ஆகியவைகள் பிராஜாபதியிடம் சென்று முறையிட்டன.'எங்களில் யார் மிகவும் அவசியமான, சிறந்த உறுப்பு என்பதைத் தெரிவிக்க வேண்டும்' என்று கேட்டன.
'இதில் தர்க்கம் செய்வதற்கோ, சண்டை போடுவதற்கோ, சந்தேகப்படுவதற்கோ ஒன்றுமில்லை. எந்த உறுப்பு உடலை விட்டுச் செல்லும் பொழுது, உடல் மிகவும் அதிகமாகப் பாதிக்கப் படுகிறதோ, அந்த உறுப்புத் தான் சிறந்தது' என்று பிராஜாபதி விளக்கிச் சொன்னார்.
உடனே பேச்சுத் திறனை வெளிப்படுத்தும் உறுப்பு உடலை விட்டுச் சென்றது. ஒரு வருடம் சென்றபிறகு, 'பேச்சுத்திறன் இல்லாமல், உங்களால் எப்படி உயிர் வாழ முடிந்தது?' என்று மற்ற உறுப்புக்களைப் பார்த்துக் கேட்டது.
மற்ற உறுப்புக்கள் ஒன்றாகச் சேர்ந்து சொன்னது:'வாய் பேசாத ஊமையாக நாங்கள் வாழ்ந்தோம். எங்களால் பேசமட்டும் தான் முடியவில்லை. ஆனால், மூச்சு விட்டபடி, கண்களால் பார்த்தும், காதுகளால் கேட்டும், மனசால் சிந்தித்தும் நாங்கள் வாழமுடிந்தது.'
இதைக் கேட்ட பேசும் உறுப்பு தோல்வியை ஒப்புக் கொண்டு, உடலில் மறுபடியும் புகுந்து கொண்டது.பிறகு கண் உடலிருந்து வெளியேறி, மீண்டும் ஒரு வருடம் கழித்து வந்தது. அதன் வெளியேற்றமும் உடலுக்கு பார்க்கும் திறனை இழத்தது மட்டும் தான் பாதிப்பு. மற்ற அவயவங்களின் துணைகொண்டு உடல் செயல்பட முடிந்ததை கண் அறிந்து கொண்டு, தோல்வியை அதுவும் ஒத்துக் கொண்டு, உடலில் மீண்டும் புகுந்தது.இதேபோல், காது வெளியேற்றமும் உடலுக்கு காது கேட்காத செவிடாக இருக்கும் பாதிப்பைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் உடல் இயக்கத்தைப் பாதிக்க வில்லை. கேட்கும் செவியும் தோல்வியை ஒப்புக் கொண்டு, மீண்டும் உடலில் புகுந்தது. பிறகு மனதும் உடலை விட்டு ஒரு வருடம் சென்றும், உடலுக்கு நினைக்கும் திறன் மட்டும் தான் செயலிழந்தது. 'மனசு உடலை விட்டுச் சென்றதும், நாங்கள் யோசிக்கத் திறனில்லாத ஒரு குழந்தையைப் போல் தான் வாழ்ந்தோம். மூக்கால் மூச்சு விட்டோம். நாக்கால் பேசினோம். கண்களால் பார்த்தோம். காதுகளால் கேட்டோம்' என்று மற்ற உறுப்புக்கள் விளக்கமாகப் பதில் அளித்தன. தன் துணையில்லாமல் உடல் செயல்பட்டதால், மனதும் தோல்வியைத் தழுவியது. பிறகு மனதும் உடலுக்குள் புகுந்தது.
இறுதியாக, உயிர் மூச்சு உடலை விட்டுப் போவதற்கு முயன்றது. அந்தத் தருணத்தில் மற்ற எல்லா உறுப்புகளும் தங்கள் தங்கள் சக்தியினை இழப்பதை உணர்ந்தன. மரஆணிகளில் கட்டப் பட்டிருக்கும் சாந்தமான குதிரைகள் அனைத்தும் மூர்க்கமாகத் திமிறி நாளாபக்கமும் ஓடப்பார்க்கும் நிலையில் மற்ற உடல் உறுப்புக்கள் பாதிக்கப் பட்டன.உடனே மற்ற எல்லா உறுப்புகளும், உயிர் மூச்சை வேண்டின: 'உயிர் மூச்சே! நீ தான் எல்லோரையும் விட சக்தி வாய்ந்தவன். நீ தான் எங்களது தலைவன். தயவு செய்து, இந்த உடலிருந்து நீ எங்களை விட்டுச் செல்ல வேண்டாம்' என்று வேண்டிக் கொண்டன.
'பிராணன் என்ற உயிர் மூச்சுத்தான், பேச்சு, பார்வை, கேட்டல், நினைத்தல் ஆகியவைகளைக் காட்டிலும் மிகவும் சிறந்தது!' என்று உடலின் மற்ற எல்லா உறுப்புகளும் ஒப்புக் கொண்டன.
குறிப்பு:
நமது உபநிடத்தில் பல உயர்ந்த கருத்துக்களைப் புரிய வைப்பதற்கு பலவிதமான சம்பவக் கதைகளையும், உருவகக் கதைகளையும் ஆங்காங்கே பரவலாகச் சொல்லி இருக்கிறார்கள். அவைகளை என் பாணியில் சுவை குன்றாது உங்களுக்குத் தொடர்ந்து அளிக்க முன் வந்துள்ளேன். உபநிடதக் கருத்தை முக்கிய கருவாகக் கொண்டு நான் எழுத விழைவதால், இது உபநிடத்தை ஒட்டியதாக இருந்தாலும், விளக்கம் குறித்துச் சில பல அதில் இல்லாத ஆனால் பொருத்தமான கருத்துக்களையும் சொல்ல விழைகிறேன். சுவையுடன், சுலபமாகப் புரியும் தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோள்.
உடம்பில் உள்ள உறுப்புக்களில் உயிர் மூச்சுதான் புராதனமானதும், மிகச் சிறந்ததுமாகும். ஆனால், பேசும் தன்மை கொண்ட வாயுவும் மிகச் சிறந்தது தான். தீர்க்கமான பார்வைகொண்ட கண்களும் சிறந்தது தான். கேட்கும் திறன் கொண்ட காதுகளும் சிறந்த செல்வத்தைப் போல் ஆகும்.
நினைக்கும் திறன் கொண்ட மனது 'தான் தான் எல்லோருக்கும் வழிகாட்டும் குரு' என்று நினைத்து, தான் தான் சிறந்த மனிதனின் உறுப்பு என்றது. உடம்பிலுள்ள வாய், கண்கள், காதுகள், மனம், உயிர் மூச்சு இவைகள் ஒவ்வொன்றும், 'தான் தான் சிறந்த உறுப்பு' என்று ஒன்றுக்கொன்று வாதிட்டன.அவைகள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல், வாதிட்டன.
'ஏன், நாமே சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். நமது ஆதி தந்தையான பிராஜாபதியிடம் சென்று, இதற்கு விடை காண்போம்' என்று அந்தப் புலன் உறுப்புகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்தன. அதன்படி அந்த உறுப்புகளான வாய், கண், காது, மனம் மற்றும் சுவாசம் ஆகியவைகள் பிராஜாபதியிடம் சென்று முறையிட்டன.'எங்களில் யார் மிகவும் அவசியமான, சிறந்த உறுப்பு என்பதைத் தெரிவிக்க வேண்டும்' என்று கேட்டன.
'இதில் தர்க்கம் செய்வதற்கோ, சண்டை போடுவதற்கோ, சந்தேகப்படுவதற்கோ ஒன்றுமில்லை. எந்த உறுப்பு உடலை விட்டுச் செல்லும் பொழுது, உடல் மிகவும் அதிகமாகப் பாதிக்கப் படுகிறதோ, அந்த உறுப்புத் தான் சிறந்தது' என்று பிராஜாபதி விளக்கிச் சொன்னார்.
உடனே பேச்சுத் திறனை வெளிப்படுத்தும் உறுப்பு உடலை விட்டுச் சென்றது. ஒரு வருடம் சென்றபிறகு, 'பேச்சுத்திறன் இல்லாமல், உங்களால் எப்படி உயிர் வாழ முடிந்தது?' என்று மற்ற உறுப்புக்களைப் பார்த்துக் கேட்டது.
மற்ற உறுப்புக்கள் ஒன்றாகச் சேர்ந்து சொன்னது:'வாய் பேசாத ஊமையாக நாங்கள் வாழ்ந்தோம். எங்களால் பேசமட்டும் தான் முடியவில்லை. ஆனால், மூச்சு விட்டபடி, கண்களால் பார்த்தும், காதுகளால் கேட்டும், மனசால் சிந்தித்தும் நாங்கள் வாழமுடிந்தது.'
இதைக் கேட்ட பேசும் உறுப்பு தோல்வியை ஒப்புக் கொண்டு, உடலில் மறுபடியும் புகுந்து கொண்டது.பிறகு கண் உடலிருந்து வெளியேறி, மீண்டும் ஒரு வருடம் கழித்து வந்தது. அதன் வெளியேற்றமும் உடலுக்கு பார்க்கும் திறனை இழத்தது மட்டும் தான் பாதிப்பு. மற்ற அவயவங்களின் துணைகொண்டு உடல் செயல்பட முடிந்ததை கண் அறிந்து கொண்டு, தோல்வியை அதுவும் ஒத்துக் கொண்டு, உடலில் மீண்டும் புகுந்தது.இதேபோல், காது வெளியேற்றமும் உடலுக்கு காது கேட்காத செவிடாக இருக்கும் பாதிப்பைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் உடல் இயக்கத்தைப் பாதிக்க வில்லை. கேட்கும் செவியும் தோல்வியை ஒப்புக் கொண்டு, மீண்டும் உடலில் புகுந்தது. பிறகு மனதும் உடலை விட்டு ஒரு வருடம் சென்றும், உடலுக்கு நினைக்கும் திறன் மட்டும் தான் செயலிழந்தது. 'மனசு உடலை விட்டுச் சென்றதும், நாங்கள் யோசிக்கத் திறனில்லாத ஒரு குழந்தையைப் போல் தான் வாழ்ந்தோம். மூக்கால் மூச்சு விட்டோம். நாக்கால் பேசினோம். கண்களால் பார்த்தோம். காதுகளால் கேட்டோம்' என்று மற்ற உறுப்புக்கள் விளக்கமாகப் பதில் அளித்தன. தன் துணையில்லாமல் உடல் செயல்பட்டதால், மனதும் தோல்வியைத் தழுவியது. பிறகு மனதும் உடலுக்குள் புகுந்தது.
இறுதியாக, உயிர் மூச்சு உடலை விட்டுப் போவதற்கு முயன்றது. அந்தத் தருணத்தில் மற்ற எல்லா உறுப்புகளும் தங்கள் தங்கள் சக்தியினை இழப்பதை உணர்ந்தன. மரஆணிகளில் கட்டப் பட்டிருக்கும் சாந்தமான குதிரைகள் அனைத்தும் மூர்க்கமாகத் திமிறி நாளாபக்கமும் ஓடப்பார்க்கும் நிலையில் மற்ற உடல் உறுப்புக்கள் பாதிக்கப் பட்டன.உடனே மற்ற எல்லா உறுப்புகளும், உயிர் மூச்சை வேண்டின: 'உயிர் மூச்சே! நீ தான் எல்லோரையும் விட சக்தி வாய்ந்தவன். நீ தான் எங்களது தலைவன். தயவு செய்து, இந்த உடலிருந்து நீ எங்களை விட்டுச் செல்ல வேண்டாம்' என்று வேண்டிக் கொண்டன.
'பிராணன் என்ற உயிர் மூச்சுத்தான், பேச்சு, பார்வை, கேட்டல், நினைத்தல் ஆகியவைகளைக் காட்டிலும் மிகவும் சிறந்தது!' என்று உடலின் மற்ற எல்லா உறுப்புகளும் ஒப்புக் கொண்டன.
Comments