யாக்யவல்கியரின் விளக்கங்கள்
யாக்யவல்கியரின் விளக்கங்கள்
எழுத்து: ஜயந்திநாதன்
யாக்யவல்கியாவிடம் அடுத்ததாகக் கேள்விகள் கேட்பவர் பெயர் ஆர்த்தபாஹா. அவர் உடம்பிலுள்ள இந்திரியங்களைப் பற்றியும், இந்திரியங்களின் இயக்கம் பற்றியும் கேள்விகள் கேட்கிறார். மனிதனின் இறப்பைப் பற்றியும், இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் கேள்விகள் கேட்டுப் பதில் பெறுகிறார்.
'மனிதனின் இறப்பிற்குப் பிறகு மிஞ்சுவதுதான் என்ன?' என்று கேட்கும் கேள்விக்கு, யாக்யவல்கியர் ஆர்தபாஹாவிடம் சொல்கிறார்: இதைப் பற்றி கூட்டமான சபைகளில் விவாதிக்கக் கூடாது. நாம் ஒரு தனி இடத்தில் சென்று பேசுவோம்.இவ்வாறு சொல்லியபடியே, யாக்யவல்கியர் ஆர்த்தபாஹாவின் கைகளைப் பிடித்தபடி தனி இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். பிறகு சபைக்கு வந்து எல்லோர் முன்னிலையிலும் ரத்தனச் சுருக்கமாக யாக்யவல்கியர் விளக்குகிறார். இனி விளக்கமாக அவர்களின் விவாதத்தைப் பார்ப்போம்.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! மனிதனுக்கு இருக்கும் இந்திரியங்கள் எத்தனை? அந்த இந்திரியங்களின் இயல்புகள் யாவை?
யாக்யவல்கியர்: எட்டு வகையான இந்திரியங்கள். எட்டு வகையான இயல்புகள்.
ஆர்த்தபாஹா: அவைகள் யாவை?
யாக்யவல்கியர்: மூச்சுவிடும் நாசி, பேசும் புலனான வாய், சாப்பிடும் நாக்கு, பார்க்கும் கண்கள், கேட்கும் காதுகள், நினைக்கும் மனது, வேலை செய்யும் கைகள், உணரும் தோல் ஆகியவைகள் தான் எட்டு வகையான இந்திரியங்கள். நாசியை இயக்குவது மணம் - நறுமணம் அல்லது நாற்றம். வாய் பேச இயக்குவது பெயர்களை உச்சரிப்பது. நாக்கை இயக்குவது ருசி. கண்களை இயக்குவது வர்ணங்கள். காதுகளை இயக்குவது சப்தம். மனதை இயக்குவது ஆசை. கைகளை இயக்குவது வேலை. தோலை இயக்குவது ஸ்பரிசம்.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! மனிதனின் இந்த எட்டு புலன்களும், எட்டு புலன் அறிவுகளும் நிரந்தரமில்லை. இவைகள் அனைத்தும் ஒரு நாள் வலிவிழந்து இறக்கத்தான் போகின்றன. ஆகையால், இந்த புலன்களும் அவைகளின் இயக்கங்களும் சாவிற்கு ஒரு நாள் உணவாகத்தான் போகின்றன. அப்படி இருக்கும் போது, சாவையே உணவாகக் கொள்ளும் கடவுள் யார்?
யாக்யவல்கியர்: இந்தக் கேள்விக்குச் சரியான விடை தெரிந்தவர்கள் சாவையே வெற்றி கொண்டவர்கள் ஆவார்கள். அக்னி தேவதைதான் சாவு என்று கொள்வோம். அப்படி என்றால், அந்த சாவான அக்னி தேவதையையே உணவாக உட்கொண்டு சாகடிக்கும் சக்தி கொண்டது தண்ணீர். சாவுக்குச் சாவைக் கொடுப்பது தண்ணீராகும்.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! ஒரு மனிதன் சாகும் பொழுது, அவனது புலன்களும் இறந்தவன் கூடச் செல்கிறதா அல்லது செல்லாமல் மறைகிறதா?
யாக்யவல்கியர்: மனிதன் சாகும் போது அவன் புலன்கள் அவனுடன் ஒன்றி விடுகின்றன. உடம்பு உப்பி, புலன்கள் வலுவிழந்து ஒடுங்கி விடுகின்றன. புலன்கள் எட்டும் இறந்து விடுகின்றன.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! ஒரு மனிதன் இறக்கும் பொழுது, அவனை விட்டு விலகாமல் தனித்து இருப்பது எது?
யாக்யவல்கியர்: இறந்த மனிதனின் பெயரும், புகழும் தான் மிஞ்சி இருப்பது. அது தான் அவனுக்கு நிரந்தரமான ஒன்று. அது தான் அவனுக்கு பரந்த உலகத்தில் உன்னதமான இடத்தை வெற்றி கொள்ள உதவுகிறது.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! ஒரு மனிதன் சாகும் போது, அவனது பேசும் வாய் தீயுடன் கலக்கின்றது. மூக்கு காற்றுடனும், கண்கள் சூரிய ஒளியிலும், மனது சந்திரனிலும், காதுகள் வாயு மண்டலத்திலும், உடல் நிலத்திலும், இருதயம் ஈதரிலும், உடலிலுள்ள ரோமங்கள் மூலிகைச் செடிகளிலும், தலை மரங்களிலும், ரத்தமும், விந்தும் தண்ணீரிலும் கலந்து விடுகின்றன. அப்படி என்றால், அந்த இறந்த மனிதனிடம் மிஞ்சுவதுதான் என்ன? அந்த மனிதன் எங்கே?
யாக்யவல்கியர் இந்தக் கேள்வியைக் கேட்டதும், ஆர்த்தபாஹாவின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு வேண்டினார்: ஆர்த்தபாஹா! இதற்குரிய பதிலை நாம் தனியாக நமக்குள் விவாதிப்போம். கூட்டமான இந்தச் சபையில் விவாதிப்பது உகந்தது அல்ல!
அவர்கள் இருவரும் சபையை விட்டு விலகி ஒரு தனியான இடத்தில் விவாதித்தார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாகச் சபைக்கு வந்து, தங்கள் விவாதத்தின் தீர்ப்பை ஒன்றாகவே சபையில் தெரிவித்தார்கள்.
அவர்கள் ஒன்றாகத் தெரிவித்தது இதுதான்: கர்மா அதாவது வேலை தான் இறந்த மனிதனிடம் மிஞ்சுவது. இறந்த மனிதனின் கர்மா ஒன்று தான் பாராட்டுக்குரியது. ஆகையால், உயிருடன் மனிதன் இருக்கும் பொழுது செய்யும் நல்ல காரியம் தான் அவனை நல்லவனாக்கும். கெட்ட காரியம் செய்தால், அவனைக் கெட்டவானக்கும்.
அதன் பிறகு வேறு கேள்விகள் கேட்காமல், ஆர்த்தபாஹா மவுனமானார்.
எழுத்து: ஜயந்திநாதன்
யாக்யவல்கியாவிடம் அடுத்ததாகக் கேள்விகள் கேட்பவர் பெயர் ஆர்த்தபாஹா. அவர் உடம்பிலுள்ள இந்திரியங்களைப் பற்றியும், இந்திரியங்களின் இயக்கம் பற்றியும் கேள்விகள் கேட்கிறார். மனிதனின் இறப்பைப் பற்றியும், இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் கேள்விகள் கேட்டுப் பதில் பெறுகிறார்.
'மனிதனின் இறப்பிற்குப் பிறகு மிஞ்சுவதுதான் என்ன?' என்று கேட்கும் கேள்விக்கு, யாக்யவல்கியர் ஆர்தபாஹாவிடம் சொல்கிறார்: இதைப் பற்றி கூட்டமான சபைகளில் விவாதிக்கக் கூடாது. நாம் ஒரு தனி இடத்தில் சென்று பேசுவோம்.இவ்வாறு சொல்லியபடியே, யாக்யவல்கியர் ஆர்த்தபாஹாவின் கைகளைப் பிடித்தபடி தனி இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். பிறகு சபைக்கு வந்து எல்லோர் முன்னிலையிலும் ரத்தனச் சுருக்கமாக யாக்யவல்கியர் விளக்குகிறார். இனி விளக்கமாக அவர்களின் விவாதத்தைப் பார்ப்போம்.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! மனிதனுக்கு இருக்கும் இந்திரியங்கள் எத்தனை? அந்த இந்திரியங்களின் இயல்புகள் யாவை?
யாக்யவல்கியர்: எட்டு வகையான இந்திரியங்கள். எட்டு வகையான இயல்புகள்.
ஆர்த்தபாஹா: அவைகள் யாவை?
யாக்யவல்கியர்: மூச்சுவிடும் நாசி, பேசும் புலனான வாய், சாப்பிடும் நாக்கு, பார்க்கும் கண்கள், கேட்கும் காதுகள், நினைக்கும் மனது, வேலை செய்யும் கைகள், உணரும் தோல் ஆகியவைகள் தான் எட்டு வகையான இந்திரியங்கள். நாசியை இயக்குவது மணம் - நறுமணம் அல்லது நாற்றம். வாய் பேச இயக்குவது பெயர்களை உச்சரிப்பது. நாக்கை இயக்குவது ருசி. கண்களை இயக்குவது வர்ணங்கள். காதுகளை இயக்குவது சப்தம். மனதை இயக்குவது ஆசை. கைகளை இயக்குவது வேலை. தோலை இயக்குவது ஸ்பரிசம்.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! மனிதனின் இந்த எட்டு புலன்களும், எட்டு புலன் அறிவுகளும் நிரந்தரமில்லை. இவைகள் அனைத்தும் ஒரு நாள் வலிவிழந்து இறக்கத்தான் போகின்றன. ஆகையால், இந்த புலன்களும் அவைகளின் இயக்கங்களும் சாவிற்கு ஒரு நாள் உணவாகத்தான் போகின்றன. அப்படி இருக்கும் போது, சாவையே உணவாகக் கொள்ளும் கடவுள் யார்?
யாக்யவல்கியர்: இந்தக் கேள்விக்குச் சரியான விடை தெரிந்தவர்கள் சாவையே வெற்றி கொண்டவர்கள் ஆவார்கள். அக்னி தேவதைதான் சாவு என்று கொள்வோம். அப்படி என்றால், அந்த சாவான அக்னி தேவதையையே உணவாக உட்கொண்டு சாகடிக்கும் சக்தி கொண்டது தண்ணீர். சாவுக்குச் சாவைக் கொடுப்பது தண்ணீராகும்.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! ஒரு மனிதன் சாகும் பொழுது, அவனது புலன்களும் இறந்தவன் கூடச் செல்கிறதா அல்லது செல்லாமல் மறைகிறதா?
யாக்யவல்கியர்: மனிதன் சாகும் போது அவன் புலன்கள் அவனுடன் ஒன்றி விடுகின்றன. உடம்பு உப்பி, புலன்கள் வலுவிழந்து ஒடுங்கி விடுகின்றன. புலன்கள் எட்டும் இறந்து விடுகின்றன.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! ஒரு மனிதன் இறக்கும் பொழுது, அவனை விட்டு விலகாமல் தனித்து இருப்பது எது?
யாக்யவல்கியர்: இறந்த மனிதனின் பெயரும், புகழும் தான் மிஞ்சி இருப்பது. அது தான் அவனுக்கு நிரந்தரமான ஒன்று. அது தான் அவனுக்கு பரந்த உலகத்தில் உன்னதமான இடத்தை வெற்றி கொள்ள உதவுகிறது.
ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! ஒரு மனிதன் சாகும் போது, அவனது பேசும் வாய் தீயுடன் கலக்கின்றது. மூக்கு காற்றுடனும், கண்கள் சூரிய ஒளியிலும், மனது சந்திரனிலும், காதுகள் வாயு மண்டலத்திலும், உடல் நிலத்திலும், இருதயம் ஈதரிலும், உடலிலுள்ள ரோமங்கள் மூலிகைச் செடிகளிலும், தலை மரங்களிலும், ரத்தமும், விந்தும் தண்ணீரிலும் கலந்து விடுகின்றன. அப்படி என்றால், அந்த இறந்த மனிதனிடம் மிஞ்சுவதுதான் என்ன? அந்த மனிதன் எங்கே?
யாக்யவல்கியர் இந்தக் கேள்வியைக் கேட்டதும், ஆர்த்தபாஹாவின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு வேண்டினார்: ஆர்த்தபாஹா! இதற்குரிய பதிலை நாம் தனியாக நமக்குள் விவாதிப்போம். கூட்டமான இந்தச் சபையில் விவாதிப்பது உகந்தது அல்ல!
அவர்கள் இருவரும் சபையை விட்டு விலகி ஒரு தனியான இடத்தில் விவாதித்தார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாகச் சபைக்கு வந்து, தங்கள் விவாதத்தின் தீர்ப்பை ஒன்றாகவே சபையில் தெரிவித்தார்கள்.
அவர்கள் ஒன்றாகத் தெரிவித்தது இதுதான்: கர்மா அதாவது வேலை தான் இறந்த மனிதனிடம் மிஞ்சுவது. இறந்த மனிதனின் கர்மா ஒன்று தான் பாராட்டுக்குரியது. ஆகையால், உயிருடன் மனிதன் இருக்கும் பொழுது செய்யும் நல்ல காரியம் தான் அவனை நல்லவனாக்கும். கெட்ட காரியம் செய்தால், அவனைக் கெட்டவானக்கும்.
அதன் பிறகு வேறு கேள்விகள் கேட்காமல், ஆர்த்தபாஹா மவுனமானார்.
Comments