Posts

Showing posts from October, 2021

இன்றைய இனிய சிந்தனை:

Image
  ஒவ்வொரு நாளையும் நீங்கள் அறுவடை செய்ததை வைத்து மதிப்பிடாதீர்கள் . நீங்கள் பூமியில் விதைத்த விதைகளைக் கொண்டு   தீர்மானியுங்கள் . ரோபர்ட் லுயிஸ் ஸ்டீபன்ஸன் .      விளக்கம் – எஸ் . சங்கரன் : அறுவடை என்றால் பலனை அடைதல் என்று பொருள் . விளைந்த பயிரை அறுவடை செய்வதற்கு முன் நிலத்தை உழுது , விதைகளை விதைத்து , நீர் பாய்ச்சி , உரம் இட்டு செயல்பட்டால் தான் பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிட்டும் . அறுவடையை விட மீண்டும் மீண்டும் விதைத்து வயலைப் பராபரிப்பதில் தான் ஒருவனின் தொடர் வெற்றி இருக்கிறது . அறுவடையின் பலனை மகசூல் மூலம் தெரிந்து கொள்ளலாம் . மகசூல் அமோகமாக இருக்க விதைகள் அல்லது நாற்றுக்கள் தரமாக இருக்க வேண்டும் . காய்க்கும் மரங்களின் பழக்களைப் பறித்து மட்டும் காலம் கழித்தால் , அந்த மரம் ஒரு சில வருடங்களில் காய்ப்பதை இழந்து பட்டுப் போகும் . ஆகையால் புதிய புதிய மரங்களின் விதைகளையும் , மரக் கன்றுகளையும் நிலத்திலே விதைத்தும் – பதித்தும் தொடர்ந்து பழங்கள் கிடைக்க வழி ச...

திராவிட முன்னேற்றக் கழக ஸ்டாலின் அரசின் ஹிந்து விரோத செயல்கள்

Image
  கோவில் என்பது ஹிந்து மதத்தின் முக்கியமான அம்சம் . ஹிந்துவின் வாழ்வே கோயிலைச் சுற்றித் தான் இருக்கும் . ஆகையால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முது மொழி காலம் காலமாக வழக்கில் உள்ளது . சடங்குகள் , திருவிழாக்கள் அனைத்தும் ஊர்க்கோயிலை மையமாக வைத்துத்தான் நிகழும் . கோயில்கள் பக்தியின் ஊற்றுக் கண்ணாக விளங்கி , ஹிந்து தர்மத்தை நமக்கு போதிக்கிறது . உபன்யாசங்கள் , கலை நிகழ்ச்சிகள் , கல்வி போதிக்கும் கூடங்கள் , சடங்குகள் நேர்த்திக் கடன்கள் ஆகிவைகளை நிகழ்த்தும் இடங்கள் என்று   கோயில்கள் தான் ஹிந்துவின் மையதர்மஸ்தலமாக விளங்கியது . ஆட்சி செய்த அரசர்கள் அனைவரும் கோயில் – குளம் – அன்ன சத்திரம் – சாலை அமைத்தல் போன்ற தர்ம காரியங்களைச் செய்யும் போது முதலில் கோயில் கட்டுவது தான் முக்கியமானதாக முதலிடம் பெறுகிறது . ஆகம விதிகளின்படி கோயில்கள் கட்டி , விக்கிரகச் சிலைகளை உருவாக்கி , அங்கு நித்திய பூஜைகள் முறையாக நடக்க வேதம் பயின்ற பிராமணர்களை நியமித்து , பல நிலங்களை மான்யமாக கோயிலுக்கு அளித்...