ஸ்வாமியே சரணம்
திரு எஸ். ஷங்கர் சபரிமலை பழைய புகப்படங்களை அனுப்பி உள்ளார். அதில் என்ன விசேஷம் என்று நீங்கள் கேட்கலாம்.
எஸ். ஷங்கர் கடந்த 50 வருடங்கள் – அதாவது 50 தடவைகள் தொடர்ந்து சபரிமலை சென்று வந்துள்ளார். அதில் சுமார் 40 தடவைகள் குருஸ்வாமியாக பலரை மிகவும் ஒழுங்காக விரதம் கடைப்பிடிக்க வைத்து வெற்றிகரமாக மலைஏற்றி ஸ்வாமி தரிசனம் செய்வித்துள்ளது பரிபூர்ண ஐய்யப்ப தெய்வ அருள் இருப்பதால் தான் சாத்தியமாகி உள்ளது. சமீபத்தில் கொரோனாவின் ஆரம்ப நிலையிலும் சபரிமலை சென்று ஸ்வாமி தரிசனம் செய்தும் – செய்வித்தும் உள்ளார். ஆகையால் அவர் அனுப்பி உள்ள கீழே பிரசுரமான படங்களுக்கும் ஒரு சிறப்பு சாந்நித்தியம் உண்டு என்பது தான் சரியான கணிப்பு. ஐயப்பன் அருள் அனைவருக்கும் கிட்ட குருஸ்வாமி ஷங்கருக்கு அனந்த கோடி நன்றிகள்.
வாய்மை ஆசிரியர் & உதவி ஆசிரியை
Comments