பாரதியின் 100-வது நினைவு தினம் – 11 – 09 - 2021












திரு. பி; ஆறுமுகம் என்பவர் எனது இனிய நண்பர்எனது கிட்டிய உறவுக்காரர்என் சக இலக்கிய ரசிகர்என்னைப் போலவே நெல்லை சீமைக்காரர் என்று சொன்னாலும் அது முற்றுப் பெறாது. ஏனென்றால் இவற்றுக் கெல்லாம் சிகரம் வைத்தது போல் அவர் பாரதியின் பரம பக்தர். தமது இரண்டாவது மகளுக்கேபாரதிஎன்று பெயர் சூட்டி பாரதியை ஆராதித்த பக்தர் அவர். ஆகையால் தான் அவர் மூன்று கட்டுரைகளைபாரதி, வஉசி, வாஞ்சி ஆகியவர்களப் பற்றியதுஅனுப்பி உள்ளார். அவைகள் அனைத்தையும் இந்த இதழில் வெளியிட்டு, பாரதிக்கு பி. ஆறுமுகத்துடன் நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.


ஆறுமுகத்தைப் போல் பாரதி என் மனம் கவர்ந்த உன்னத கவிஞன், கட்டுரையாளன், பத்திரிகையாளன், வசன கவிதையாளன், அரசியல் விமர்சகன் என்ற பல திறமைகளுடன் சுதந்திர இயக்கத்தில் உடல் பொருள் ஆவி அத்தனையையும் அர்ப்பணித்த தியாகி.

திருவல்லிக்கேணியில் அதுவும் பாரதி வசித்த துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவிற்கு வெகு சமீபத்தில் உள்ள துளசிங்கப் பெருமாள் சந்தில் ஒண்டிக்க்குடித்தனத்தில் குடியிருந்தோம். பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் பாரதி வசித்த அந்தச் சிவப்புக் கட்டிடத்தைத் தாண்டித் தான் நான் செல்ல வேண்டும். அப்பொழுதெல்லாம் பார்த்தசாரதி கோயில் பின் பக்கத்து நரசிம்யர் ஸ்வாமி கோபுரத்தைஅது பாரதி வீட்டிற்கு சிறிது தள்ளி எதிரே உள்ளதுகும்பிடும் போதெல்லாம் பாரதியை மனதிலே நினைத்து அந்த சிவப்புக் கட்டிடத்திற்கும் ஒரு கும்பிடு போடுவது என் வழக்கம்.

அந்த கட்டிடம் இப்போது பாரதி நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த நினைவகத்தை பி. ஆறுமுகம் அவர்களுடன் சென்று தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். அதன் புகைப்படங்களையும் இங்கு காண்பீர்கள்.

பாரதி தன் சுய சரிதைக் கவிதையில் கடைசிப் பாட்டில் ஆதி சங்கரரின் அத்வைதத்தைச் சொல்லி முடிக்கிறான். இதோ அந்தக் அழகு கவிதை வரிகள்:

சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே;   

    தத்துவமஸி; தத்துவமஸி; நீயே அஃதாம்;

பூமியிலே நீ கடவு ளில்லை யென்று

    புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமி நீ அம்மாயை தன்னை நீக்கி

    ஸதாகாலம்சிவோஹமென்று ஸாதிப்பாயே .







 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017