Posts

Showing posts from June, 2009

பண், அச்சு, காவடி

பண், அச்சு, காவடி பண், அச்சு, காவடி இந்த மூன்றையும் வள்ளுவர் தம் மூன்று குறட்பாக்களில் எவ்வாறு உபயோகிக்கிறார் என்பது தான் இச் சிறு கட்டுரையின் நோக்கம். முதலில் பண் என்ற பொருளைப் பார்ப்போம். பண் என்றால் இசையோடு அதாவது ராகத்தோடு பாடுவதாகும். அந்த இசைக்கு அழகூட்ட இசைக் கருவிகளும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பாடப்படும் பாடல்கள் காதுக்கு இனிமையாக சிறந்த சங்கீதமாக அமையும். அபபடி இல்லாமல் பண்ணானது பாடலுக்குப் பொருத்தமாக இருக்காவிட்டால், அதனால் சங்கீதமே கெட்டுவிடும். இந்த அவல நிலையை எடுத்துக் காட்ட 'கண்ணோட்டம் இல்லாத கண்' போல் அந்தச் சங்கீதம் இருக்கும் என்கிறார் வள்ளுவர். கண்களுக்கு அழகு கனிவு. அதாவது அன்பாக அருளுடன் கருணை உள்ளத்துடன் நோக்குதல். அதுதான் கண்ணோட்டம் என்று வள்ளுவர் குறிக்கிறார். பண் கண்ணோட்டத்திற்கும், கண்களை பாட்டிற்கும் உபமானமாக வள்ளுவர் தருகிறார். கோபத்தோடு ஒருவன் பார்ப்பானாகில், அது கண்களின் அழகையே கெடுத்து, அந்த மனிதனை கொடியவனாகத் தான் சிந்திரிக்கும். அவனை அண்டுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். கோபப்படும் பொழுது கண்கள் சிவப்பாகிவிடுவதை நாம் பார்க...

தவத்தின் தரம்

தவத்தின் தரம் தவம், தவத்தின் குணம் இவைகளை அற்புதமாக விவரிக்க இரண்டு உபமானங்களை வள்ளுவர் உபயோகிக்கிறார். அவைகள் தான் இவைகள்: 1. சுடச் சுடத் தீயில் வாட்டிய தங்கத்தின் ஒளி அது தீயின் ஜ்வாலையையும், சுடும் நேரத்தையும் பொறுத்திருக்கும் என்பதை தவத்திற்கு பொருத்தி விளக்குகிறார். 2. சிவந்த குன்றிமணியின் மூக்கில் உள்ள கருமையை தவத்தின் கருமையாக்கி விடுகிறார். துறவுக்குத் தவம் வேண்டும். தவம் என்றால் என்ன? உடலை வருத்தி உணவைச் சுருக்கி, காற்று, பனி, வெயில், மழை இவைகளால் உடலை வருத்தி உள்ளத்தின் தீய எண்ணங்களைப் பொசுக்கித் தூயதாக்கி ஞானச் சுடராகத் திகழும் நிலைதான் தவம். அது தான் துறவியின் உன்னத நிலை. துறவி தன் உடலைத் துன்பத்தால் சுடச் சுடச் தான் பாபம் நீங்கி ஞானம் பிறக்கும் என்கிறார் வள்ளுவர். அதைச் சொல்லும் பொழுது தங்கத்தை உபமானமாகச் காட்டுகிறார். பொன்னை அதாவது தங்கத்தை உருக்க உருக்கத் தான் -அதாவது வள்ளுவர் வாக்கில் சொல்வதானால், பொன்னை சுடச் சுடத் தான், பொன்னில் உள்ள அழுக்குப் போய் தக தக வென்று தங்கம் ஒளிவிடும். அழுக்கான தீய எண்ணங்கள் தீயின் ஜ்வாலையில் பொசுக்கி ஞானம் பெற்ற தூய துறவும் அந்த...

திருக்குறளில் உபமானங்கள்

திருக்குறளில் உபமானங்கள் உபமானங்கள் என்பது ஒரு பொருளைப் புரியவைப்பதற்கு மிகவும் சிறந்த அணியாகும். அணி அதை அணிபவர்களுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாகும். அதே போல் தான் பாடல்களில் கையாளப்படும் உவமை அணிகள் அந்தப் பாடல்களுக்கு அழகையும், பொருட் தெளிவையும் அளிக்கும் ஆபரணங்களாக அமைகின்றன. திருக்குறளில் பல உபமானங்கள் கையாளப் பட்டாலும், அவைகளில் சிலவற்றைத் தொடர்ந்து கட்டுரைகளில் எழுத உத்தேசித்துள்ளேன். உடலில் உயிர் உள்ளே இருக்கிறது. அந்த உடலின் நிழல் வெளிச்சம் இருக்கும் இடங்களிலெல்லாம் வெளியே தெரியும் படி இருக்கும். ஒருவன் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அது மற்றவர்களைத் தானே தாக்கும் என்று ஒருவரும் தவறாகக் கருதக் கூடாது என்கிறார் வள்ளுவர். மற்றவர்களைத் தாக்குமோ அல்லது தாக்தாதோ! ஆனால், அந்தத் தீவினையின் கெடுதல் தீவினையைத் தூண்டியவர்களை விடாது தாக்கும் என்று போதிக்கிறார் வள்ளுவர். 'அந்தக் கெடுதல் தொடர்ந்து தாக்கும்' என்பதை ஒரு உபமானத்தால் விளக்குகிறார். ஒருவனின் நிழல் நீண்டு நெடிதாகப் போனாலும் இறுதியில் அந்த மனிதனை விடாது அவனது காலடியில் வந்து தங்கிவிட...

வள்ளுவர் பார்வையில் இறைவன்

வள்ளுவர் பார்வையில் இறைவன் டாக்டர் எஸ். ஜெயபாரதி என்ற அன்பர் திருக்குறளைப் பற்றி மிகவும் அழகாகவும், தெளிவாகவும் சொன்ன வார்த்தைகள் இதோ: இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். என்றாலும் திருவள்ளுவரை, தெய்வப் புலவர் என்று தான் நாம் அவரை இறைவன் ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம். ஆகையால் அவரது சொற்கள் அனைத்தும் சொர்ணமயம். சொக்கத் தங்கம். திருக்குறளை தமிழ் மறை என்று சொல்லி, அதை வேதத்திற்கு இணையாக வைத்துப் போற்றுகிறோம். ஆகையால், திருவள்ளுவர் மனிதனாக இருந்து திருக்குறளை எழுதினாலும், அவரது வாசகங்கள் எல்லாம் தெய்வமணம் பெற்றவைகள் என்று கொள்வதில் தவறில்லை. ஆகையால் ஜெயபாரதி சொன்னதில் ஒரு திருத்தம் தேவை: மனிதனுக்காக திருக்குறள் சொன்னதாக இருப்பினும், சொன்ன திருவள்ளுவர் தன்னை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொண்டு எழுதி இருக்கிறார் என்று கொள்வது தான் சாலச் சிறந்தது. இறைவனை - அதாவது பரம்பொருளை வள்ளுவர் கீழ்க்கண்ட சொற்களில் குறிப்பிடுகிறார்: 1. 'இறைவன்' என்ற சொல் 7 குறட்பாக்களில் குறிப...

தவம்

தவம் துறவறத்தின் மூலமே தவத்தில் தான் இருக்கிறது. தவம் என்றால் என்ன? மனத்தை அடக்குதல்தான் தவம். மனத்தை எப்பொழுதும் தாக்கும் சக்திபெற்றவைகள் தான் ஐம்பொறிகளான கண்கள், காதுகள், மூக்கு, வாய், ஸ்பரிசம் ஆகியவைகள். அப்படி என்றால் ஐம்பொறிகளையும் அடக்குவது எவ்வாறு? பலவிதமான விரதங்களை மேற்கொள்ள வேண்டும். உண்டி சுருக்கல், வெயில்-மழை-பனி-நீர் இவைகளில் நின்று உடலை வருத்தி, அதனால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்து, பிற உயிர்களைக் காத்து வாழ்வதன் மூலம் ஐம்பொறிகளை அடக்க முடியும். இந்தச் செயல்களால் மனமும் அடங்கி, தவத்தின் முழுப் பலனும் கிட்டும். பார்வதி தேவியே தவம் செய்துதான், பரமசிவனைப் பர்த்தாவாக அடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆகையால், தவம் துறவிகளின் திறவு கோளாகும். வள்ளுவரின் பார்வையில், தவம் என்பதின் குணாதிசயங்கள் யாவை? என்பதைப் பார்ப்போம். எல்லோரும் துறவிகளாக முடியாது. முற்பிறவியில் தவம் செய்தவர்களே இப்பிறவியில் துறவிகளாக முடியும். ஆகையால், அறிவுடையோர்கள் முடிந்தமட்டில் மனிதப் பிறவி எடுத்தவுடனேயே முடிந்த மட்டும் தவம் செய்ய முயல வேண்டும்.தனக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக்...

இரத்தல் இனிது

இரத்தல் இனிது எழுத்து: பவித்திரன். குறிப்பு: வள்ளுவர் முரண்பாடான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார் என்று தெய்வப்புலவரை நமது நிருபர் அவமதிப்பதாகத் தோன்றும். ஆனால், எந்த ஒரு இலக்கியத்தையும் எப்பொழுது வேண்டுமானாலும் எந்தவித பயமுமின்றி ஆராயும் தீரம் இருந்தால்தான் அந்த மொழியும் செழித்து வளரும். தமிழைப் பொருத்த அளவில், ஆங்கில இலக்கியத்தைப் போல் ஆழ்ந்த ஆராயும் சூழ்நிலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் வாழ்த்துரைதான் உண்டு. ஆய்வுரை அறவே இல்லை என்ற நிலைதான் இன்றும் நிலவுகிறது. பல மதிப்புரைகள் எல்லாம் வாழ்த்துரையாகத் தான் இருக்கின்றன. இந்த நிலை மாறினால்தான் இலக்கியம் நின்று நிலைத்திருக்கும். 'ஆகாய விமானமா? எங்கள் மூதாதையர்களுக்கு முன்பே தெரியும். புஷ்பக விமானம் தான் ஆகாய விமானத்தின் முன்னோடி!' என்று திண்ணை வேதாந்தம் மறைந்து, ஆகாய விமானத்தை முதலிலேயே கண்டுபிடித்திருந்தால் அது நமக்குப் பெருமை. வெறும் கற்பனை உலகத்தில் மட்டும் சஞ்சரிப்பதால் நாட்டுக்கோ, வளர்சிக்கோ எந்தவிதத்திலும் உதவிபுரியாது. பரந்த உள்ளம், விரிந்த உலகப் பார்வை, சீர்தூக்கி ஆய்வு செய்யும் திறன் - இவைகள் அனைத்த...

யாக்யவல்கியரின் விளக்கங்கள்

யாக்யவல்கியரின் விளக்கங்கள் ஜனகர் சபையில் உள்ள உசஸ்தா என்ற ரிஷி யாக்யவல்கியரிடம் சில கேள்விகள் கேட்கிறார். இவர் காக்கிராவின் புத்திரர். ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உயிர் மூச்சு. அதைப் பற்றிய மிகவும் நுணுக்கமான விளக்கத்தைக் கேட்டு உசஸ்தா அறிகிறார். மேலும் அறிவிற்கு எளிதில் பிடிபடாத தத்துமான பரப்பிரம்மத்தைப் பற்றியும், எல்லா உயிர்களின் ஆதார சுருதியாக குடியிருக்கும் ஆத்மாவைப் பற்றியும் விளக்கம் கேட்டு அறிகிறார். உசஸ்தா: யாக்யவல்கியரே! பிரம்மத்தைப் பற்றி நேரடியாக, தெளிவான விளக்கம் தேவை. அத்துடன் எல்லாரிடமும் குடிகொண்டிருக்கும் ஆத்மாவைப் பற்றிய விளக்கமும் சொல்ல வேண்டும். யாக்யவல்கியர்: எங்கும் பரவி நிறைந்துள்ளது எதுவோ அதுதான் பரப்பிரம்மம். எல்லோர் உடம்பிலும் குடிகொண்டிருக்கும் 'வஸ்து'தான் ஆத்மா. உசஸ்தா: எல்லோரிடம் குடிகொண்டிருக்கும் 'வஸ்து'வான ஆத்மாவைப் பற்றித் தெரிய விழைகிறேன். யாக்யவல்கியர்: உடலில் இருக்கும் உயிரின் மூலக் கூறுதான் ஆத்மா. உயிரின் ஆதார சுருதிதான் மூச்சுக் காற்று. ஒவ்வொரு ஜீவனும் சுவாசிக்கும் காற்றுத்தான் இந்த உலகில் உயிர் வாழும...

உயிரின் பயணம்

உயிரின் பயணம் குறிப்பு: உபநிஷத்திலேயே மிகவும் பெரியதும், அதிகமான அதிலும் புரிவதற்கு மிகவும் கடினமான தத்துவமும் அடங்கியது பிரஹாரண்ய உபநிஷதமாகும். இதில் யக்யவல்க்கியரின் தத்துவ விளக்கம் மிகவும் முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றது. ஜனக மஹாராஜாவுக்கு பரமார்த்த தத்துவம் பலபடியாக விவரமாக விளக்கிச் சொல்லப் பட்டிருக்கிறது. மேலும் பல ரிஷிகளின் கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை அளிக்கும் விதமாகவும் பல தத்துவங்கள் எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக, கார்க்கி என்ற ஒரு பெண் ரிஷியின் கேள்விகளுக்கு யக்யவல்க்கியரின் பதில்கள் மிகவும் பிரபலமானவைகள். இவைகளில் உள்ளவைகளில் சிலவற்றை வாய்மை மற்றும் இ-டச் இதழ்களின் மூலம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உயிர் உடலிருந்து எங்கு, எப்படிச் செல்லுகிறது என்பது இந்த உபநிஷத்தில் விளக்கப் பட்டிருக்கிறது. அதைப் பற்றிய விளக்கம் தான் இக்கட்டுரை. - ஆசிரியர். ஒரு மனிதன் இறக்கும் தறுவாயில் இருக்கிறான். அவனது உயிர் உடலை விட்டுப் பிரிந்து, வெளியில் வருகிறது. அவனுடைய உயிர் காற்றை அடைகிறது. 'மனித உயிரே! நீ இன்னும் மேலே போக வேண்டியது அவசியம். அதற்கு அனுகூலமா...

ஓம் என்ற பிரணவத்தின் பிரகாச ஒளி நிலை

ஓம் என்ற பிரணவத்தின் பிரகாச ஒளி நிலை முன்னுரை: உபநிட நூலிலேயே மிகப் பெரிய நூல் பிரஹதாரண்ய உபநிஷத்தாகும். 'பெரிய காடு' என்பதுதான் அதன் பொருள். அதாவது ரிஷிகள் காட்டில் இருந்து ஓதிய தத்துவ உபதேசக் காவியம் என்று கொள்ள வேண்டும். அதைப் படித்துப் புரிவதற்கும், மிகவும் நிசப்தமான மனித சஞ்சாரமற்ற பெரிய காடு மாதிரியான இடம் தகுந்தது என்று கூடக் கொள்ளலாம். உருவகக் கருத்துக்கள், உன்னதமான உபதேசங்கள், மனிதன் கடைத்தேறுவதற்குரிய தீர்க்கமான வழிகள், தியானத்தின் நன்மைகள், இறப்பில்லாப் பிறவிக்கு வழிகாட்டல் அத்தனையும் இந்த உபநிடத்தில் உண்டு. இவைகள் எல்லாம் பல நூற்றாண்டுக்கு முன்பே ரிஷிகளால் சொல்லப்பட்டவைகள் என்பதை மறக்கலாகாது. அவைகள் இந்த விஞ்ஞான உலகத்தாராலும் பெரிதும் மதிக்கப்பட்டு, பின்பற்றப்படுவதைப் பார்க்கும் பொழுது, இந்தியாவின் இந்து கலாச்சாரம் எவ்வளவு உயர்ந்தது என்பது தெளிவாகிறது.தேவர்-அசுர போராட்டம் என்பது நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடக்கும் போராட்டமாகும். மனித இந்திரியங்கள் அசுரத்தனமாக கெட்டவைகளால் ஆட்கொள்ளப் பட்டு, சீரழிக்கப்படும் பொழுது, மனிதனின் உயிர்மூச்சு ஓம் என்ற பிரணவ மந்திரத்...

உயிர்மூச்சு உயர்ந்தது

உயிர்மூச்சு உயர்ந்தது குறிப்பு: நமது உபநிடத்தில் பல உயர்ந்த கருத்துக்களைப் புரிய வைப்பதற்கு பலவிதமான சம்பவக் கதைகளையும், உருவகக் கதைகளையும் ஆங்காங்கே பரவலாகச் சொல்லி இருக்கிறார்கள். அவைகளை என் பாணியில் சுவை குன்றாது உங்களுக்குத் தொடர்ந்து அளிக்க முன் வந்துள்ளேன். உபநிடதக் கருத்தை முக்கிய கருவாகக் கொண்டு நான் எழுத விழைவதால், இது உபநிடத்தை ஒட்டியதாக இருந்தாலும், விளக்கம் குறித்துச் சில பல அதில் இல்லாத ஆனால் பொருத்தமான கருத்துக்களையும் சொல்ல விழைகிறேன். சுவையுடன், சுலபமாகப் புரியும் தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோள். உடம்பில் உள்ள உறுப்புக்களில் உயிர் மூச்சுதான் புராதனமானதும், மிகச் சிறந்ததுமாகும். ஆனால், பேசும் தன்மை கொண்ட வாயுவும் மிகச் சிறந்தது தான். தீர்க்கமான பார்வைகொண்ட கண்களும் சிறந்தது தான். கேட்கும் திறன் கொண்ட காதுகளும் சிறந்த செல்வத்தைப் போல் ஆகும். நினைக்கும் திறன் கொண்ட மனது 'தான் தான் எல்லோருக்கும் வழிகாட்டும் குரு' என்று நினைத்து, தான் தான் சிறந்த மனிதனின் உறுப்பு என்றது. உடம்பிலுள்ள வாய், கண்கள், காதுகள், மனம், உயிர் மூச்சு இவைகள்...

யாக்யவல்கியரின் விளக்கங்கள்

யாக்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன் யாக்யவல்கியாவிடம் அடுத்ததாகக் கேள்விகள் கேட்பவர் பெயர் ஆர்த்தபாஹா. அவர் உடம்பிலுள்ள இந்திரியங்களைப் பற்றியும், இந்திரியங்களின் இயக்கம் பற்றியும் கேள்விகள் கேட்கிறார். மனிதனின் இறப்பைப் பற்றியும், இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் கேள்விகள் கேட்டுப் பதில் பெறுகிறார். 'மனிதனின் இறப்பிற்குப் பிறகு மிஞ்சுவதுதான் என்ன?' என்று கேட்கும் கேள்விக்கு, யாக்யவல்கியர் ஆர்தபாஹாவிடம் சொல்கிறார்: இதைப் பற்றி கூட்டமான சபைகளில் விவாதிக்கக் கூடாது. நாம் ஒரு தனி இடத்தில் சென்று பேசுவோம்.இவ்வாறு சொல்லியபடியே, யாக்யவல்கியர் ஆர்த்தபாஹாவின் கைகளைப் பிடித்தபடி தனி இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். பிறகு சபைக்கு வந்து எல்லோர் முன்னிலையிலும் ரத்தனச் சுருக்கமாக யாக்யவல்கியர் விளக்குகிறார். இனி விளக்கமாக அவர்களின் விவாதத்தைப் பார்ப்போம். ஆர்த்தபாஹா: யாக்யவல்கியரே! மனிதனுக்கு இருக்கும் இந்திரியங்கள் எத்தனை? அந்த இந்திரியங்களின் இயல்புகள் யாவை? யாக்யவல்கியர்: எட்டு வகையான இந்திரியங்கள். எட்டு வகையான இயல்புகள். ஆர்த்தபாஹா: அவைகள் ...

யாக்யவல்கியரின் விளக்கங்கள்

யாக்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன் ஜனகர் சபையின் தலைமைக் குரு அஸ்வாலாவின் கேள்விகளுக்கு யாக்யவல்கியர் விளக்கமளிக்கிறார். ஜனகர் சபையில் அவர்தான் முதன் முதலில் யாக்யவல்கியரைக் கேள்விகள் கேட்கிறார். அவர் எட்டு செய்யுள்களில் கேள்விகள் கேட்கிறார். முதல் கேள்வி: யாக்யவல்கியரே! எதையுமே மரணம் விட்டு வைப்பதில்லை. யாகம் செய்பவர்கள் யாகத்தால் மரணத்தை வெல்லலாம் என்று கருதுகிறார்கள். அவர்கள் எதைக் கொண்டு மரணத்தை வெற்றி கொள்கிறார்கள்? யாக்யவல்கியர்: யாகத்தீயை வளர்த்து மந்திரங்களை உச்சாடணம் செய்து, மந்திரமே தீயாகவும், தீயே உத்தமான குருவாகவும் உருவெடுக்கிறது. அந்தத் தீதான் விடுதலை. அந்த விடுதலைதான் முக்தி. இரண்டாம் கேள்வி: இரவும் பகலும் மாறி மாறி வருகிறது. அனைவரும் இதனால் பாதிக்கப் படுகிறோம். யாகம் செய்பவர் எதைக் கொண்டு இரவு-பகல் என்ற தளைகளை உடைத்து எறிகிறார்கள்? யாக்யவல்கியர்: இரவு-பகல் என்பது காலம் காட்டும் கருவி. அதை நிர்ணயிப்பது சூரியன். சூரியன் தான் யாக கர்த்தாவின் கண்கள். எல்லாம் பிறப்பதும், வளர்வதும், பிறகு இறப்பதும் இரவு-பகல் போல் இவ்வுலகில் நடைக்கின்றன. சூரியனை அடைந்துவி...

யாக்யவல்கியரின் விளக்கங்கள்

யாக்யவல்கியரின் விளக்கங்கள்எழுத்து: ஜயந்திநாதன் மஹா பாரத்தில் பகவத்கீதைக்குப் பிறகு வாழ்க்கைக்கு உபயோகமான எந்தக் காலத்திற்கும் ஏற்ற மிகவும் உயர்ந்த தத்துவங்கள், கருத்துக்கள், நீதிகள் ஆகியவைகளைக் குறள்போல் மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகும் சொன்ன சருக்கம் 'யக்ஷனின் கேள்விகளுக்கு யுதிஷ்டிரர் சொல்லிய பதில்களைச்' சொல்ல வேண்டும். தனது நான்கு சகோதரர்களும் ஒரு தடாகக் கரையிலே இறந்து கிடப்பதைப் பார்த்தும் மனம் தளராமல் தர்மத்தை யக்ஷனின் கேள்விகளுக்குப் பதில்களாகத் தெரிவித்தார் தருமர். யக்ஷனே தர்மதேவதையாக வந்தாகச் சொல்லப் படுகிறது. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் பொழுது, ஒரு பிராமணனின் ஆச்ரமத்திலிருந்த ஹோமம் செய்ய அக்னி மூட்டுவதற்கான ஆரணிக் கட்டைகளை ஒரு கலைமான் தன் கொம்புகளில் மாட்டிக் கொண்டு, காற்றைப் போல் ஓடியது. இதைப் பார்த்த அந்த பிராமண சந்நியாசி பாண்டவர்களிடம் அந்த ஆரணிக்கட்டைகளை மீட்டுக் கொடுக்க வேண்டினான். ஆனால், அந்த மான் மாயமாய் மறைந்து விட்டது. மானைப் பிடிக்க கானகத்தில் ஓடி அலைந்த பாண்டவர்களுக்குக் களைப்பும் தாகமாகவும் இருந்தது. தண்ணீர் தடாகத்தைத் தேடி ஒவ்வொருவராக வந்த...