தாயை நேசிப்பது போல் தாய்நாட்டை நேசி
என்னதான் சொந்தநாடு ஆனாலும் ஒரு துறவி அதன்மீது பற்று
வைப்பது சரியல்ல என்று ஒருவர் ஒருமுறை விவேகானந்தரிடம்
கூறினார்.
அதற்கு அவர் பதில் கூறும்போது,
“தன் தாயை ஒரு துறவி எவ்வாறு நேசிக்காமல் இருக்க
முடியாதோ அதுபோலவே தாய்நாட்டை நேசிக்காமலும் இருக்க
முடியாது.
ஒரு துறவிக்குத் தாய்ப்பாசம் இருக்கலாம் என்று சாஸ்திரங்களே கூறுகின்றன.
அதுபோலவே ஒரு துறவிக்குத் தாய்நாட்டுப் பாசம் இருப்பதிலும் தவறில்லை.
உலகத்தவரை நேசிப்பதற்குத் தாய்நாட்டுப் பற்றுத் தடையாக
இருக்க முடியாது” என்று கூறினார்.
Comments