காயத்ரி ஜெயந்தி – 11 – 06 – 2022 – சனிக்கிழமை

 


காயத்ரி தேவி வேத மாதா என்று போற்றப்படும் தெய்வம். நான்கு வேதங்களின் தெய்வம் தான் காயத்ரி தேவி. அவர் பிரம்ம சொரூபம். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மும் தொழில்களுக்கு அதிபதிகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுளர்களுக்கு தாயாக காயத்ரி தேவி வணங்கப்படுகிறார்.

மேலும் காயத்ரி தேவி வீரத்திற்கு அதிபதியான பார்வதி தேவி, செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஆகியவர்களின் அம்சங்களைக் கொண்டவர்.

அவரது ஜென்ம தினம் இந்த வருடம் சனிக்கிழமை 11-ம் தேதி ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது.

காயத்ரி என்ற சொல் 'கயா' என்பதன் கலவையாகும், இது ஞானத்தின் துதி என்று பொருள்படும். மற்றும் 'திரி' என்பது மூன்று தேவிகளின் ஒருங்கிணைந்த வலிமையைக் குறிக்கிறது.

வேத இலக்கியங்களின்படி, அவர் சூரியனின் ஒளியின் பெண் வடிவமாக சித்தரிக்கப்படுகிறார். ஒளியே ஆன்மாவை ஒளிரச் செய்யும் ஞானத்தைக் குறிக்கிறது. இது வேதகால சூரியக் கடவுளின் மற்றொரு பெயராகும்.  நமது உடல் பஞ்ச மகாபூதம், பிருத்வி, அக்னி, வாயு, ஜல் மற்றும் ஆகாஷ் ஆகிய ஐந்து கூறுகளால் ஆன்மாவால் உருவாக்கப்பட்டது. இந்த ஐந்து கூறுகளும் காயத்ரி தேவியில் ஐந்து முகங்களால் குறிக்கப்படுகின்றன.

 காயத்ரி மந்திரம்:

ஓம் பூர் புவ ஸ்வாஹா,

 தத் சவிதுர் வரேண்யம்,

  பர்கோ தேவஸ்ய தீமஹி,

  தியோ யோந ப்ரச்சோதயாத் ।

 

காயத்ரி மந்திரத்தின் சிறப்பு:

 

ஓம்’ என்பது உலகம் உருவாவதற்கு முன் இருந்த ஆதி ஒலி.

'பூர், புவா மற்றும் ஸ்வாஹா' முறையே உடல், மன மற்றும் ஆன்மீக உலகங்கள்.                                                                              

'தத்' என்பது பரமாத்மாவைக் குறிக்கிறது,

'சவிதுர்' என்பது படைப்பாளர் அல்லது சூரியன்,                                                                                  

 'வாரண்யம்' என்றால் உயர்ந்தது                                                                                                                                              

 'பார்கோ' என்றால் பளபளப்பு மற்றும் தேஜஸ்.

'தேவஸ்யா' என்பது உயர்ந்த கடவுளைக் குறிக்கிறது.

'தீமஹி' என்பது தியானம் செய்வதைக் குறிக்கிறது.

'தீயோ' என்பது புரிதல் மற்றும் புத்திசாலித்தனம்,

'யோ' என்பது யார் என்பதையும், 'நஹ்' என்பது நம்முடையது என்பதையும் குறிக்கின்றன.                                                           

கடைசி வார்த்தையான ‘பிரச்சோதயாத்’ என்பது தெளிவுபடுத்துங்கள் என்ற ஞானச் சொல்.

ஒன்றாக இணைக்கப்பட்டால், காயத்ரி மந்திரம்

"எங்கள் புத்திசாலித்தனத்தையும் புரிதலையும் ஊக்குவிக்கும் மற்றும் வழிநடத்தும் மிக உயர்ந்த படைப்பாளரான உங்களைத் தியானிக்கிறோம், உங்களை வணங்குகிறோம்." என்று பொருள்படும்.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

 காயத்ரி மகிமையைப் பற்றிச் சொன்ன பெரியோர்கள்:

 ஸ்ரீ காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 இந்த மந்திரத்தில் புதைந்துள்ள 22 நற்குணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மந்திரத்தினைச் ஜெபிப்போர்க்களுக்கெல்லாம் எந்த பேதமும் இல்லாமல் அந்த நற்பண்புகள் கிட்டும் என்பது இந்த காயத்திரி மந்திரத்தின் சிறப்பும், மகிமையும் ஆகும்.




 காஞ்சி மஹா பெரியவர் அருள் வாக்கு:

 

சாஸ்திர பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள்

எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

 (த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)

 காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த ஸாரம் காயத்ரீ மஹாமந்திரம்.

காயத்ரீ என்றால், “எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது”என்பது அர்த்தம். 

காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே ! 

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். 

யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. 

வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது, காயத்ரீம் சந்தஸாம் மாதா என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 

24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு ‘த்ரிபதா’ காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. 

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017