Posts

Showing posts from September, 2021

பாரதி நினைவுகள்

Image
மஹாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்தது 1882- ம் வருடம் டிசம்பர் மாதம் 11- ம் தேதி அன்று எட்டயபுரத்தில். அவர் தம் பூத உ டலை நீத்தது சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப்பெருமாள் கோயில் வீட்டில் 1921- ம் வருடம் செப்டம்பர் மாதம் 12- ம் தேதி அதிகாலை 1 மணிக்கு. ஆகையால் அந்த உ ன்னதப் புனிதரை நினைவு கூறும் விதத்தான் சில நினைவுச் சிதறல்கள் உ ங்கள் பார்வைக்குச் சமர்ப்பித்து , வாய்மை தன் அஞ்சலியைத் செலுத்துகிறது. v   காந்திமதி நாத பிள்ளையும் , பாரதியும் ஒரே பாடசாலையில் படிப்பவர்கள். ஆனால் பாரதியை எப்படியாவது மட்டம் தட்டவேண்டும் என்பது பிள்ளையின் அபிலாஷை. பாரதி எதேச்சை ¨ யாக பிள்ளையின் வீட்டிற்கு வந்த பொழுது பலர் பிள்ளையுடன் இருந்தனர். பாரதியை பலர் முன்னிலையில் மடக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த பிள்ளை , ' பாரதி சின்னப் பயல் ' என்ற அடியைக் கொடுத்து , அதை வைத்து ஒரு வெண்பா ஒன்றைப் பாடும்படிச் சொன்னார். ' ஆண்டில் இளையவனென் றந்தோ , அகந்தையினால் ஈண்டிங் கிகழ்ந்தென்ன ஏளனஞ்செய் - மாண்பற்ற காரிருள் போலுள்ளத்தான் காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல் ' என்ற வெண்பாவைப் பாரதி...

நூலகம்: சகோதரி சுப்புலட்சுமி

Image
பிராமண ஜாதியில் பிறந்த சகோதரி சுப்புலட்சுமி சிறுவயதிலேயே விதவையாகி விட்டார். அப்போதைய விதவைகள் அதிலும் பிராமணச் சமூதாயத்து விதவைகள் படும் அவஸ்தைகள் சொல்லிடங்கா. ஆனால் , சுப்புலட்சுமியின் பெற்றோர் தம் பெண்ணின் எதிர்காலம் இருட்டாகி விடாமல் , சுப்புலட்சுமியைப் படிக்க வைத்தனர். படித்துப் பட்டம் பெற்று , ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு , பல விதவைகளின் மறுவாழ்விற்கு வித்திட்டவர். மோனிகா ஃபெல்டன் ஆங்கிலத்தில் சுப்புலட்சுமியைப் பேட்டி கண்டு எழுதிய அவரது புத்தகம் , அநுத்தமா என்ற தமிழ் எழுத்தாளரால் மொழி பெயர்க்கப் பட்டு வெளி வந்திருக்கிறது. ரொம்பவும் சுவாரஸ்யமாகவும் , சில சம்பவங்கள் மனதை உ ருக்குபவைகளாகவும் இருக்கின்றன. அவைகளிலிருந்து சில உ ங்கள் பார்வைக்கு வைக்கப் படுகின்றன. 1. உன்னுடைய நீண்ட பெயரைச் சொல்வதற்கு எங்கள் நாக்கு உ ருளாது போலிருக்கிறதே ?' என்றாள் மதர் பாட்ரிக். உன்னை இனி ' சிபில் ' என்று அழைக்கிறோம். இது உ னக்குப் பிடிக்கிறதா ?' என்று கேட்டாள். சுப்புலட்சுமிக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை தான். ஆயின் அந்தக் கான்வென்டில் சேர்ந்து அன்றைக்குத் தான் இரண்டாவது நாள். படிப்ப...