யு.என். வளாகத்தில் காந்தி அமைதி பூங்கா திறப்பு விழா
யு.என். வளாகத்தில் காந்தி
அமைதி பூங்கா திறப்பு விழா
Epitomising
Bapu’s message of living in peace and harmony with the planet, PM @narendramodiand other
leaders jointly inaugurated solar panels atop @UNHeadquarters
& the Gandhi Peace Park in New York. A stamp on Mahatma Gandhi was released
by the UN on the occasion.
மஹாத்மா காந்தியின்
150-வது பிறந்த நாளையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள
காந்தி சூரிய மின் சக்தி பூங்கா மற்றும் நியூயார்க் பல்கலையில், 150 மரங்கள் நடும்
அமைதி பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல நாட்டுத்
தலைவர்கள் பங்கேற்றனர்.
ஐ.நா. தலைமையகக் கூரையின்
மீது ஐ.நா.வில்
உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளின் சார்பில் 193 சூரிய மின் சக்தி
தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு
7 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதன்
மூலம் ஐ.நா. தலைமையகத்தில்,
50 கி.லோ. வாட் மின்சாரம்
உற்பத்தி செய்யப்படும்.
நியூயார்க் பல்கலை
வளாகத்தில் அமைக்கப்படும், காந்தி அமைதி பூங்காவில் 150 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
மக்கள் தங்களுக்ககு
விருப்பமானவர்கள் பெயரில், இந்த மரங்களை நடும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
உலகில் அமைதியும்,
சுற்றுச் சூழல் மாசற்ற நிலையும் அமைய இந்தியாவின் வழிகாட்டலை மோடி நிகழ்த்திக் காட்டியது
பாரத மக்களை மகிழ்ச்சியும் மேன்மையும் அடைய வைக்கும்.
Comments