மணியாட்சி ரயில் நிலையத்தில் வீர வாஞ்சியின் வீர மரணம் – 17-06-1911
பிறப்பு:
1886 – இறப்பு: 17-06-1911
வாழ்ந்த
வருடங்கள்: 25
சுதந்திரப்
போராட்ட போராளி வாஞ்சியின் 108-வது நினைவு தினம்.
பொன்னம்மாள் என்ற இளம் வயது மனைவியையும் நினைத்துப் பார்க்காமல் தியாகம் செய்த வாஞ்சியின் தீரம் இந்திய சுதந்திர ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகள்.
ஆங்கிலேய அதிகாரியை சுட்டு வீழ்த்திய வீரன் வாஞ்சிநாதனின்
சட்டைப் பையில் இருந்ததாக கூறப்படும் கடிதத்தின் வரிகள் இவை:
நாம் ஆங்கிலேயரை துரத்தி தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும்.
எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.
அவன் எங்கள் தேசத்தில் காலைவைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராஸிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.”
Comments