26/11 பம்பாய் தீவிர வாதத்தாக்குதல்


சிறப்புக் கட்டுரை
26/11 பம்பாய் தீவிர வாதத்தாக்குதலில் காங்கிரசின் தேசிய விரோதச் செயல்கள்
ஆக்கம்: வாய்மை நிருபர் பவித்திரன்




நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று தான் ருத்திரமாக பொங்கி எழத் தோன்றுகிறது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி செய்யும் போது பிஜேபியை ஹிந்து தீவிரவாதக் கட்சியாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய காங்கிரஸ்முஸ்லீம்கள் 26/11 பம்பாய் பாகிஸ்தான் தீவிரவாதத் தாக்குதல் (2008 -  யு. பி. 1 ஆட்சியின் போது) நடைபெறுவதற்கு முன்பே காங்கிரசின் மூத்த தலைவர்கள்திக்விஜய் சிங்க், . சிதம்பரம், சிசில் குமார் ஷிண்டே, மணி சங்கர் ஐயர் ஆகியவர்கள் இந்தியாவில் நடக்கும் தீவிரவாதம் பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்களால் மட்டும் நடைபெற வில்லை. ஹிந்துக்களும் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க பல ஜோடிக்கப்பட்ட வழக்குகள் போட்டு பிஜெபியை அரசியல் களத்தில் தோல்வி அடைய முயன்றனர். அதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவுக் கரம் நீட்டி மக்களை திசை திருப்பி தேர்தலில் வெற்றி பெற திட்டம் தீட்டப்பட்டது.. ஆனால் அது ஒரு சிறிது ஹிந்துக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் திட்டம் வெற்றி பெற வில்லை. ஆனால் மக்கள் மீண்டும் இரண்டாவது முறை யு.பி.. 2-க்கு வாக்களித்து காங்கிரசை ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். இதனால் காங்கிரஸ் தனது ஹிந்து தீவிரவாதம் என்ற கோஷத்தை எடுத்து முழங்கியது. கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் மக்களிடம்பிஜேபி இந்து தீவிரவாதக் கட்சிஎன்ற பட்டம் சூட்டிப் பரப்பி வந்தனர்.
தற்போது ஓய்வு பெற்ற முன்னாள் பம்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மாரியா என்பவர் ““LET ME SAY IT NOW”  என்ற தலைப்பில் தனது சுய சரிதையை எழுதி சில தின்ங்களுக்கு முன்.வெளியுட்டுள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதார பூர்வமாக இந்த 26/11 மும்பாய் பாகிஸ்தான் தீவிர வாதத்தைப் பற்றி விவரித்துள்ளார்.      





மரியா வெளியிட்ட புத்தகத்தில் பல விஷயங்கள் உள்ளன. ஆனால், இங்கு லக்ஸர்-தைபாஸ் (எல்..டி.) என்ற பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் 26/11/2008 அன்று நடந்த பம்பாய் தீவிரவாத தாக்குதலைஹிந்துக்கள் நடத்தியதுஎன்று காட்டுவதற்கு அந்த எல்..டி. தீவிரவாத இயக்கம் அதற்காக அஜ்மல் காசப்பிற்கு சமீர் தினேஷ் சவுத்ரி என்ற ஹிந்து நாமகரணம் சூட்டப்பட்டு, அவனது மணிக்கட்டில் ஹிந்துக்களின் காவி ரக்ஷையைக் கட்டி அவனை பம்பாயைத் தாக்க அனுப்பி உள்ளார்கள். அது மட்டுமல்ல. அவனுக்கு ஒரு போலியான ஹிந்து பெயரான சாமிர் டினேஷ் சவுத்ரியில் அடையாள அட்டையைத் தயார் செய்து அவனது சட்டையில் வைத்துள்ளனர். அவன் அருனோதயா டிக்ரி அண்ட் பி.ஜி காலேஜி, வேதிர் காம்ப்பிளக்ஸ், தில்குஷுர் நகர், ஹைதராபாத் என்ற கல்லூரில் படித்ததற்கான போலி சான்றிதழுடன், வீட்டு விலாசம் – 254, டீச்சர்ஸ் காலனி, நகரபாவி, பங்களூரு என்பதை அடையாள அட்டையில் காட்டி உள்ளனர். இதே போல் அவனுடன் பம்பாய் தாக்குதலுக்கு வந்த மற்ற 11 தீவிரவாதிகளுக்கும் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு அவர்களும் அவைகளை தங்கள் பைகளில் வைத்துள்ளனர். காசப் உயிரோடு பிடிபடாவிட்டால், காசப்பை சாமிர் தினேஷ் சவுத்ரி என்ற தீவிரவாதியாகச் சித்தரித்து, அப்போதைய காங்கிரஸ் அரசு மீடியாவைக் கூட்டி போட்டோ படம் எடுத்துஅதற்கு ஆதாரமான இந்து அடையாள அட்டை, மணிக்கட்டில் ஹிந்து ரக்ஷை ஆகியவைகளைப் பற்றிஹிந்து தீவிரவாதம்உண்மைதான் என்பதை பிரசாரம் செய்து வெற்றியும் பெற்றிருப்பார்கள். ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த தீவிர வாத காசப் உயிரோடு பிடிபட்டு காங்கிரசின் மிகவும் கீழ்த்தரமானதேசவிரோதமான செயல்கள் வெளிவந்துள்ளன.
காசாப்பை உயிரோடு பிடிக்க உதவிய துக்காராம் கோபால் ஓம்லே என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டரை இந்தியா ஒரு போதும் மறக்கக் கூடாது. பிடிக்க உதவிய அவர் சம்பவ இடத்திலேயே சுடப்பட்டு உயிரழந்தார். காசாப் பின் 11 தீவிரவாத பாகிஸ்தான் கூட்டாளிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் காசாப் ஒருவன் மட்டும் தான் உயிரோடு பிடி பட்டு, அவன் வாக்கு மூலம்போலி அடையாள அட்டைகள் ஆகியவைகள்ஹிந்து தீவிரவாதமாக 26/11 பம்பாய் தாக்குதலை காட்சிப்படுத்தும் பயங்கரமான சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராகேஷ் மாரியா கடந்த 12 வருடங்கள் இந்தப் பெரிய நாசகாரக் கும்பலின் தேசிய விரோதச் செயல்களை மூடி மறைந்துள்ளார். ஒருவேளை மீண்டும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைப் பிடித்திருந்தால், இந்த தேசத் துரோக செயல்கள் வெளியில் தெரிய வாய்ப்பில்லாமல் போய் விடும். இது அவரை நேர்மையான அதிகாரியாக எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும் காலம் கடந்தாவது உண்மையை உரைத்த்தற்கு அரைமனதோடு பாராட்டலாம்.
துக்காராம் கோபால் ஓம்லேயின் நினைவுச் சின்னம். அசோக் சக்ரா விருதும் வழங்கி கொரவிக்கப்பட்டார்.

இதில் 12 போலியான அடையாள அட்டைகளை உருவாக்குவதற்கு உதவியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தகுந்த தண்டனையை வழங்க வேண்டும். இதற்கு இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் வாழும் உள்ளூர் வாசிகளின் உதவி இல்லாமல் இந்த 12 போலி அடையாள அட்டைகளை உருவாக்குவது முடியாது.. பல உண்மைகள் மறைந்திருக்கும் இந்த சதியை மீண்டும் விசாரித்து களை எடுக்க வேண்டியது அவசியஅவசர வேலையாகும்.

2010 ஆண்டுஅதாவது 26/11 பம்பாய் தீவிரவாதத் தாக்குதல் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ‘26/11 ஆர்.எஸ்.எஸ். சதியா?’ என்ற தலைப்பில் ஆஸிஸ் பர்னேஉருது சஹாரா தினசரியின் ஆசிரியர் எழுதிய நூலை திக்விஜய் சிங்க் ஆகியவர்கள் கலந்து கொண்டு வெளியிட்டார்கள். இது எவ்வளவு பெரிய இந்தியாவிற்குச் செய்யும் துரோகம்? ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.


ராஹுல் காந்தி அமெரிக்காவில் அங்குள்ள தூதர்கள் மத்தியில்இந்தியாவில் உள்ளூரில் இருக்கும் ஹிந்துக் குழுக்கள் இஸ்லாம் தீவிரவாத்த்தை விட இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகும்என்று 2007 நடைபெற்ற 2007 தீவிர வாத்த் தாக்குதலைக் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இது ஒரு அப்பட்டமான திசை திருப்பும் கருத்து என்பது இப்போது மிகவும் தெளிவாகி உள்ளது.





உஜ்வால் நிகாம் என்ற இந்த 26/11 தீவிரவாதத் தாக்குதலை விசாரித்த சிறப்பு அரசு வக்கீல் சொன்னது: நாங்கள் 10 போலியாகத் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கோர்ட்டில் சமர்ப்பித்தோம்.  காசப்பையும் சேர்த்து மற்ற 9 அட்டைகளில் ஹிந்துப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.


வாய்மை காங்கிரசின் இந்த தேசவிரோத செயல்களை மிகவும் மூர்க்கமாகக் கண்டிக்கிறது. அதன் காரணமாக திக்விஜய் சிங்க், சிதம்பரம், ஷிண்டே ஆகியவர்களுக்கு சவுக்கடி கொடுத்து, முள் கிரீடம் சூட்டி அவர்களின் தேசத் துரோகச் செயல்களுக்காக வாய்மை தண்டனை கொடுக்கிறது



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017