Posts

Showing posts from May, 2008

வள்ளுவம்: நடமாடும் பிணங்கள் & சாதலே நன்று

வள்ளுவம் 7: நடமாடும் பிணங்கள் ஆக்கம் : எஸ். சங்கரன். பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளின் செயல்பாட்டில் உச்சகட்ட வெறுப்படையும் பொழுது, 'நீ இருப்பதை விட இறப்பதே மேல்' என்று சொல்வார்கள். 'நீ ஏன் இறக்க வேண்டும்? நாங்களே செத்தொழிகிறோம்!' என்றும் பெற்றோர்கள் சொல்வது உண்டு.ஆனால், உலகத்திற்கே நீதி போதிக்க வந்த வள்ளுவர் இது மாதிரிச் சொல்லி இருந்தால், உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் சொல்லப் போனால், வள்ளுவர் இன்னும் அதீதமான சொற்பிரயோகம் செய்கிறார். 'சில பேர்கள் சில கெட்ட எண்ணங்கள் கொண்டு திரிகிறார்களே! அவர்கள் எல்லாம் நடமாடும் பிணங்கள்!' என்று எரிமலையாகச் சீறுகிறார் வள்ளுவர். தெய்வப் புலவர் வள்ளுவர் இவ்வாறு சீறுகிறார் என்றால், அதில் காரணம் இல்லாமல் இருக்காது. அதுவும், 'இனிய சொற்கள் இருக்கும் பொழுது கடுமையான சொற்களைக் கூறல், கனிகள் இருக்கும் பொழுது காய்களைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்' என்று சொன்ன வள்ளுவரே இப்படிக் கடுமையாகக் கூறி இருந்தால், அது தார்க்குச்சி போட்டு நம்பை விழிக்கச் செய்யத்தான். வள்ளுவரின் இந்த அதீத வெறுப்பு ஆறு குறட்பாக்களில் வெளிப்படுகி...

வள்ளுவம் 6 - கொல்லாமையும் புலால் மறுத்தலும்

வள்ளுவம்: 6 கொல்லாமையும், புலால் மறுத்தலும் ஆக்கம்: எஸ். சங்கரன் வள்ளுவப் பெருந்தகை ஜைனமதத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு சாராரின் கருத்து. அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால், ஜைனமதத்தின் முக்கிய கொள்கையான அஹிம்சை அவருக்குப் பிடித்த கொள்கைகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தான் 'கொல்லாமையும், புலால் மறுத்தலும்' அவர் மனத்திற்குப் பிடித்தவைகளாக இருக்கின்றன. இந்த பரந்த உலகத்தில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றுவரை, புலால் உண்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். சைவ உணவு முறையினை மேற்கொள்பவர்கள் மிகவும் சொற்பம். அதிலும் உலகளவில் பார்த்தால், இந்தியாவில்தான் புலால் புசிக்காதவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். புலால் மறுத்தலும், கொல்லாமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. கொல்லாமை நிகழாவிடில், புலாலும் கிடைக்காது. ஆனால், புலாலுக்காக பிராணிகளைக் கொல்வதைத் தடுப்பது முடியாத ஒன்றாகும் என்பது வள்ளுவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான், அவர் புலாலை மறுக்கச் சொல்கிறார். புலால் உண்பவர்களின் தொகை குறையக் குறைய, கொல்லாமையும் குறையும் என்பது வள்ளுவரின் கருத்த...

வள்ளுவம் - வளைவது வணக்கம் அல்ல

வளைவது வணக்கம் அல்ல ஆக்கம் : எஸ்.சங்கரன் 'வில் வணக்கம்', 'சொல் வணக்கம்' என்றும் 'வில்லேர் உழவர்', 'சொல்லேர் உழவர்' என்றும் பதப்பிரயோகங்களை வள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு வணக்கம் செலுத்துவதில் பல வகைகள் உண்டு. தன்னை விட வயதில் மூத்தவர்களையும், மெத்த படித்த மேதாவிகளையும் வணங்கும் பொழுது, வணங்குபவர் தம் உடம்பை மிகவும் வளைத்து, தன் இருகைகளையும் கூப்பி வணங்குவது வழக்கம். இதில் அவரது செய்கையும், உள்ளமும் இயந்து இயங்கினால், அது வரவேற்கத் தக்கது தான். அப்படி யில்லாமல், அவரது உள்ளம் விஷத்தால் நிரம்பி இருப்பின், அவரது வணக்கம் உண்மையிலேயே வெறுக்கத் தக்க தாகும். அதில் ஆபத்தும் பொதிந்திருக்கும். நாதூராம் கோட்சே மஹாத்தா காந்தியை கைகூப்பி வணங்கினான். பிறகு, தன் கைத் துப்பாக்கியால் மஹாத்தாவைச் சுட்டுக் கொன்று விட்டான். இப்படிப் பட்ட நாதுராம் கோட்சேயின் வணக்கத்தையும், நாம் சந்தித்திருப்போம். ஆனால், அதைத் தெரிந்து கொள்வதுதான் மிகவும் கஷ்டமான ஒன்றாகும். நேருக்கு நேராக எதிப்பவர்கள் நமக்குத் தீங்கு செய்பவர்கள் தான் என்றாலும், மறைமுகமா...

வள்ளுவம் 4 - குலம்

Image
குலம்-வள்ளுவரின் கண்ணோட்டம் ஆக்கியோன்: எஸ். சங்கரன். 'சாதி' என்ற சொல்லே ஒரு வேண்டாத ஒன்றாக இப்போது கருதப்படுகிறது. அதை ஒழிக்க பலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதி, குலம், வர்ணம் ஆகிய வார்த்தைகள் ஒருவர் பிறந்த குடியினைக் குறிக்கும். சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், அந்த சாதியின் பெயரால் அரசியல் கட்சிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 'எங்கள் சாதி ஜனங்கள் முன்னேற இது அவசியம்' என்பது அவர்கள் வாதம். 'எங்கள் சாதி மக்கள் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். படிப்பு, இருப்பிடம், சுகாதரம், வேலை வாய்ப்பு-இவைகளைப் பெற, தனி ஒதிக்கீடு இருந்தால் தான் எங்கள் சாதி மக்கள் முன்னேற முடியும். சுதந்திர இந்தியாவில் எங்களது ஜனத்தொகைக்கு ஏற்ப ஒதிக்கீடு சதவிகிதம் இருக்க வேண்டும்' என்ப்து தான் அவர்களின் கோரிக்கை. 'சாதியை ஒழுக்க வேண்டுமா?' என்ற கேள்வியே இப்போது அர்த்தமற்றதாகப் போய் விட்டது என்றுதான் பலருக்குப் படும். ஆனால், 'சாதியைப் பற்றி வள்ளுவரின் கருத்து என்ன?' என்பதை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். 'சாதிகள் இல்லையடி பாப்பா...

பிச்சை எடுத்து பிழைத்தல்

Image
வள்ளுவம்: 3 பிச்சை எடுத்துப் பிழைத்தல் எழுதியவர் : எஸ். சங்கரன் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவது மிகவும் கேவலமான ஒன்று. ஆனால், தானம் சிறந்தது என்கிறது சாத்திரம். 'ஏற்பது இகழ்ச்சி' என்று சொன்ன ஒளவையார், 'ஐயம் இட்டு உண்' என்று சொல்கிறார். 'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பது கற்பதின் அவசியத்தை வலியுறுத்த, 'மிகவும் கீழான தொழிலான பிச்சைகூட எடுத்தாகினும் படிக்கலாம்; தப்பில்லை' என்ற அளவுக்கு ஒளவைப் பிராட்டியார் சொல்கிறார். பிச்சை போடுவது-அதாவது தானம் செய்வது நல்லது என்றால், அதைப் பெற பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் வேண்டும் என்பதாகிறது. 'பிச்சை எடுப்பது இழிவு; ஆனால், பிச்சை இடுவது தர்மம்' என்ற நிலை முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகப் படும். கஷ்டப்படுவரிடம் கருணை காட்டுவது அவசியமானதால், உதவியின் ஒரு பரிணாமம் தான் பிச்சை என்றாகிறது. இருப்பினும், பிச்சை போடுவது புண்ணியமான காரியமானாலும், பிச்சை எடுப்பது ஒரு கேவலமான தொழில் என்பதில் எந்த வித கருத்து மாறுபாடும் இருக்க முடியாது. 'பிச்சை என்பது ஒரு தொழிலா?' என்ற கேள்வி எழலாம். வள்ளுவருக்கும் ...

வள்ளுவம் 2- மருந்து

Image
மருந்து எழுதியவர்: எஸ். சங்கரன். வள்ளுவர் டாக்டர் இல்லைதான். ஆனால், உள்ளத்தை உயர்த்த எழுதிய நீதி நூலில் உடம்பின் ஆரோக்கியத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர் சொன்ன அறிவுரை இரண்டே இரண்டுதான். ஒன்று: முன் உண்ட உணவு செரித்த பிறகு உண்க. இரண்டு: அளவோடு உண்க. இவைகள் தான் ஆரோக்கியத்திற்கு மருந்து என்கிறார். முதல் அறிவுரையை மூன்று குறட்பாக்களிலும், இரண்டாவது அறிவுரையை முன்று குறட்பாகளிலும் விளக்குகிறார். முன் உண்ட உணவு செரித்த பின் உண்ணுவதற்கு வள்ளுவர் கூறும் காரணங்கள் மூன்று: 1. உடம்பிற்கு நோயே வராது. 2. நீண்ட ஆயுளைக் கொடுக்கும். 3. நன்கு பசித்த பிறகு உண்பது நோய்வராமல் தடுக்கும். அதேபோல், குறைந்த அளவு உண்பவருக்கு இன்பம் நிலைத்து நிற்கும் என்கிறார் வள்ளுவர். எப்படி இன்பம் நிலைத்து நிற்கும் என்பதற்கு உபமானமாக வள்ளுவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதில் தான் சுவை இருக்கிறது. பெரிதுண்பவனிடத்தில் எப்படி நோய் நிற்குமோ அதேபோல் குறைவாக உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்கும் என்கிறார். இன்பம் வேண்டும் என்றால் பசித்துப் புசி, துன்பம் வேண்டும் என்றால் பெரிதுண்...

வள்ளுவம் - 1 . தும்மல்

Image
தும்மல் ஆக்கம்: எஸ். சங்கரன் முன்னுரை : திருவள்ளுவரின் திருக்குறள் தமிழ் படித்த அனைவருக்கும் தெரிந்த நூல். பரிமேளழகர் முதல் பலரும் அந்த நூலைப் பற்றி பலபட ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள் - இனி எழுதுவதற்கு மிச்சமில்லை என்ற அளவிற்கு. இந்த நிலையில் நான் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? என்ற கேள்வி எழுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இருப்பினும், திருக்குறளை ஒரு புதிய கோணத்தில் பார்த்து, ஒரு சில கட்டுரைகளை எழுதத் துணிந்துள்ளேன். அந்த கோணத்தில் எழுதிய முதல் கட்டுரை தான் இது. தும்மினால் யாரோ ஒருவர் உங்களை நினைக்கிறார்கள் என்பது வள்ளுவர் காலத்திற்கு முன்னாலிருந்தே நிலவி வரும் நம்பிக்கை. தும்மினால் அருகிலுள்ளவர்கள் 'நீடுவாழ்க' என்று வாழ்த்தும் வழக்கமும் வள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே இருத்திருக்கிறது.இந்த தும்மல் நம்பிக்கைகளை வைத்து அழகாக மூன்று குறள்களில் சித்திரிக்கிறார் வள்ளுவர். காதலனும், காதலியும் ஒன்றாக இருக்கிறார்கள். காதலனுக்கு தும்மல் வந்து தொலைக்கிறது. 'முதல் தும்மல் தான், க்வலை இல்லை' என்று நினைக்கிறான் காதலன். அவன் எண்ணப்படியே, காதலியும் 'நீவிர் நூறாண்டு வாழ்க...

கவிதைகள் - ஆக்கியோன் - நைத்ருபன்

Image
1. வேண்டுதல் 1. வளைந்த முகம் வாழ்விக்கும் ஓங்காரம் ஒடிந்த தந்தம் ஓங்கு புகழ்பாரதம். 2. அடியெடுத்துக் கொடுக்க அடி பணிந்து அழைக்கிறேன்! ஆணை முகன் சுழி இட்டேன் ஆரம்ப மொழி வேண்டுகிறேன். 3. குட்டித் தொழுது குறுநூலை எழுத முகவுரை அருளி முகமலர வேண்டுகிறேன். 2. எழுதுகோல் 1. வான்புகழ் வள்ளுவன் நீதிக்கோல் பண்புகழ் சிலம்பின் கற்புக்கோல் நாண்புகழ் கம்பராமன் வீரக்கோல் மண்புகழ் மணிமேகலை துறவுக்கோல் எங்கே , எங்கே, எங்கே? 2. எழுத்திலே எழிச்சி எங்கே? எண்ணத்தின் ஏற்றம் எங்கே? தர்மத்தின் தன்மை எங்கே? தர்கத்தின் வெண்மை எங்கே? 3. எழுதுவதெல்லாம் எழுத்து மில்லை; எண்ணுவதெல்லாம் எழுதுவற்கில்லை; எழுதுகோலே எழுந்து கொள்ளாயோ? ஏற்றமிகு புதினம் படைத்துத் தள்ளாயோ? 4. கன்னத்தின் களையிழந்து, காதணியின் ஒளியிழந்து, கண்களிலே கண்ணீரோ, தமிழ்த்தாயே! கலியுகத்தில் காசுக்குப் பலியான எழுதுகோலை, கருத்துமிக்க காவியத்தால் தகர்ப்பேன், தாயே! 3. தர்மம் தர்பையைக் கையிலெடு தர்மத்தைக் காத்துவிடு. 1. தனக்குத் தனம் சேர்த்தால் தர்மத்தில் குறைசேரும் தானத்தைக் கைவிட்டால் தர்மத்தின் ஒளிகுறையும். (தர்பையைக் ...... க...

அவன் ஒரு எழுத்தாளன் - எழுதியவர்: ஜெயந்திநாதன்

சிறுகதை: இரண்டு பேர்கள் மெரினா கடற்கரை ரோடு வழியே அருகருகே நடந்து போய்க்கொண்டிருந்தனர். "நீங்கள் யார்?" என்று ஒருவர் கேட்டார். "நான் ஒரு எழுத்தாளன்" என்று ஒரு பெருமிதத்துடன் மற்றவன் பதிலளித்தான். "உங்கள் கதைகள் எந்த எந்தப் பத்திரிகைகளிலெல்லாம் வந்திருக்கின்றன?" "இதில் தான் மனிதன் தவறிவிடுகின்றான். பத்திரிகைகளில் கதைகள் வந்தால்தான் அவன் எழுத்தாளனா? மிகச் சாதாரணமான கதைகளும் பத்திரிகைகளில் இடம் பெறும் பொழுது, அவர்களெல்லாம் எழுத்தாளராகிவிட முடியுமா? என்னுடைய கதைகளை அவர்கள் பிரசுரிக்கவில்லை என்றால், என் கதையின் மதிப்பு ஒரு போதும் குறையாது. நான் ஒரு எழுத்தாளன்" என்று மிகுந்த உத்வேகத்துடன் சொன்னான். "ஆம். நீங்கள் சொல்வதிலும் உண்மையிருக்கிறது" என்று பதிலளித்தார். நமது எழுத்தாளன் உடனே, "கைகொடும். என்னை நீர் சரியாகப் புரிந்து கொள்ளும் சக்தி பெற்றிருக்கின்றீர். நீர் ஓர் உயர்ந்த ரஸிகர்" என்று அவரது கைகளைப் பிடித்துக் குலுக்கினான். அவருக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. எழுத்தாளனுக்கு உள்ளமெல்லாம் பூரித்தது. "உயர்தரக் கதைகளை...

மணிக்கொடி பிறந்த கதை

Image
மணிக்கொடி பிறக்கக் காரணம் என்ன என்பதை சீனிவாசன் வாயிலாகவே கேட்பது ஒரு சுவை. இதோ அவர் சொல்கிறார்: லண்டனில் ஃப்ரீ பிரஸ் நிருபராக வேலையில் இருந்த பொழுது, என்னைக் கவர்ந்த ஒரு பத்திரிகை தான் அப்ஸர்வர். அதன் மீது எனக்கு ஒரு மோகம் பிறந்தது. காரணம், அதன் பரந்த நோக்கு, கொள்கை திட்பம், செய்திச் செறிவு, கலை ஆர்வம், கட்டுரை வன்மை இவைகளே. அப்ரஸர் ஞாயிறுதோறும் வெளிவரும். அன்று மற்ற தினசரிகள் வெளிவருவதில்லை. ஆகவே அப்ஸர்வருக்குத் தனி மதிப்பு. தமிழில் அத்தகைய ஞாயிறு செய்திப் பத்திரிகையை வெளியிட வேண்டும் என்று ஆசை பிறந்தது. அதுவே மணிக்கொடிக்குக் கரு. அப்பொழுது அதற்கு அந்தப் பெயர் இல்லை. 1930- ல் உப்பு சத்தியாக்கிரகம் தீவிர தேசீய லட்சியங்களை ஆதரிக்கத் தமிழில் பத்திரிகை இல்லை. சொக்கலிங்கம் தமிழ் நாட்டை விட்டு விலகி, காந்தி என்ற காலணா பத்திரிகையை நடத்தி வந்தார். சுதந்திரச் சங்கும் காந்தியுமே காங்கிரஸ் போராட்டத்தை ஆதரித்து வந்த பத்திரிககைகள். பம்பாயில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் உதவிப் பொறுப்பு என்னிடம் இருந்தது. 1933 மார்ச் மாதம் சத்தியாக்கிரகத்தின் வெற்றி. அதே வருடம் டிசம்பரில் லண்டன் வட்ட மேஜை மகாநா...