ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து



பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அஷ்வினி உபாத்யாயா, உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவின் சாராம்சம்:

2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜம்மு-காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், யூனியன் பிரதேசம் லட்சத்தீவு – ஆகிய இடங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர்.

இது வரை, ஹிந்து மாநிலங்களில், ஹிந்துக்களை சிறுபான்மையினராக பதிவு செய்ய வில்லை. எனவே ஏழு மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களில் வசிக்கும் ஹிந்துக்களை, சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டும். அப்போது தான், அவர்களால் சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை பெற முடியும்,

இந்த 8 இடங்களிலும், ஹிந்துக்களின் சிறுபான்மை உரிமைகள் அளிக்கப்படாமல், அரசியல் சாசனம் ஆர்டிகிள் 25 லிருந்து 30 வரை உள்ள அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆகையால் தேசிய சிறுபான்மை கமிஷன் சட்டம் பகுதி 2 ( C ) – ன் கீழ் ஹிந்துக்களையும் ‘சிறுபான்மையினர்’ என்று அறிவிக்க உத்திரவிட வேண்டும்.
மேலும், முஸ்லீம், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், பார்சீக்கள் – ஆகியவர்களை மட்டும் மத்திய அரசாங்கம் 23-10-1993 அன்று ‘சிறுபான்மையினர்’ என்று அறிவித்து, ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள 8 இடங்களையும் புறக்கணித்து, ஹிந்துக்களுக்கு அநீதி இழைத்துள்ளது.

முஸ்லீம்கள் பெறும்பான்மையினராக உள்ள காஷ்மீரில், 753 கல்வி உதவித் தொகையில் 717 கல்வி உதவித் தொகையும் பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்டு, ஒரு ஹிந்துவுக்கும் கல்வி மான்யம் அளிக்காமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு 23-10-1993-ல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் ஆணையில் ஹிந்துக்களை ‘சிறுபான்மையினராக’ அறிவிக்காததைக் காரணம் காட்டுகிறார்கள். இந்த அநீதியை உச்ச நீதிமன்றம் தலையிட்டு, நீதி வழங்க வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த உச்சமன்ற நீதிபதிகள் மனுதாரரை தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் முறையிடும்படி அறிவுறுத்தியது.
கிருஸ்துவர்கள் மிசோராம், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய இடங்களில் பெரும்பான்மையினர். அதே போல் சீக்கியர்கள் பஞ்சாபில் பெரும்பான்மையினர். இருப்பினும் அவர்களை இந்தியா முழுவதும் சிறுபான்மையினர் என்றே சட்டம் சொல்கிறது. அந்த நிலையைத் தான் ஹிந்துக்கள் அந்த 8 இடங்களில் கேட்கிறார்கள்.

சிறுபான்மைக் கமிஷன் நியாயம் வழங்கும் என்று நம்புவோமாக.




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017