சிவன் அருள் பெற ஏற்றுவோம் கார்த்திகை தீபம்



கார்த்திகை தீபம் - 02-12-2017


கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய நாள் தான் கார்த்திகைத் திருவிழாவாகும். அந்த நாளில் சிவபிரான் சோதிச் சொரூபமாக அனைவருக்கும் காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம். அதை நினைவு கூறும் வகையில் தீபங்களைக் கோயில்களிலும், வீடுகளிலும் ஏற்றி சிவனை வழிபடுவார்கள்.

சிவ பெருமான் ஜோதிச் சொரூபமாகக் தோன்ற, அவரது அடிமுடியைக் கண்டு பிடிக்க விஷ்ணு வராக உருவமெடுத்து சிவச் ஜோதியின் அடியைக் கண்டு பிடிக்கவும், பிரம்மா அன்னமாக சிவச் ஜோதியின் முடியைக் கண்டு பிடிக்கவும் முயன்று தோல்வியுற்று, சிவனை முழுமுதற்கடவுளாக ஏற்றுக் கொண்ட தினம் தான் திருக்கார்த்திகை தினமாகும். அந்த தினத்தில் விஷ்ணுவும் – பிரம்மாவும் கண்ட சிவச் ஜோதியை அனைவரும் காண அருள் பாளிக்க வேண்டியதின் காரணமாக அந்த திருக்கார்த்திகை நாளில் சிவன் ஜோதிச் சொரூபமாக வணங்குவதற்கு தீப விளக்குகள் ஏற்றி வழிபடும் வழக்கம் தமிழ் மக்களிடம் உண்டானது.


 கார்த்திகை என்பது 27 நட்சத்திரங்களில் மூன்றாவதாக வரும் நட்சத்திரமாகும். கார்த்திகை நட்சத்திரம் ஆறு பிரகாசமான நட்சத்திரக் கூட்டமாகும். இதை நாம் விண்ணில் வெறும் கண்ணால் பார்த்து அடையாளம் காணலாம். இந்த ஆறு கார்த்திகை நட்சத்திரக் கூட்டம்  காதில் அணியும் மகரக்குண்டலம் போல காட்சி அளிக்கும். 

சிவன் அருள் கிட்டவும், கார்த்திகை தீபம் போல் அனைவரது வாழ்வு ஒளிரவும் முழுமுதற் கடவுளான சிவனைப் பிரார்த்திப்போமாக. . 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017