இரும்புச் சங்கிலியால் யானைபடும் ரண அவஸ்தைகள்
முழுவிவரங்களுக்கு சொடுக்கவும் இணைப்பை
மார்கரெட்
ஒயிட்டேக்கர் என்பவர் மிருகங்களின் நடவடிக்கைகளை
அறிந்து செயல்படும் முறைகளை பயிற்சியாக யானைப் பாகன்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்
வல்லுனர்.
யானைகளை இரும்புச் சங்கிலிகளால் கட்டித் துன்புறுத்துவதை அடியோடு தவிர்த்து,
யானைகளை கையாளும் வழிமுறைகளை அவர் பயிற்சிமூலம் யானைப் பாகன்களுக்குக்
கற்றுக் கொடுப்பதற்காக பங்களூரில் உள்ள பென்னர்கட்டா தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.
அதன் காரணமாக, கூடிய சீக்கிரமே 50 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள யானைச் சரணாலயத்தில், அனைத்து
யானைகளும் இரும்புச் சங்கிலியிலிருந்து முற்றிலும் விடுபட்டு, சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப் படப்போவதை அறியும் போது, யானையை விநாயகரின் அம்சமாகக் கும்பிடும் அனைத்து ஹிந்து மக்களுக்கும் ஒரு உவப்பான
செய்தியாகும்.
மேலே
உள்ள படத்தில் உள்ள யானையின் பெயர் சுந்தர். அந்த யானை முன்பு மஹாராஷ்டராவின்
கொல்ஹாபூர் நகரத்திலுள்ள வாராநகர் கோயிலில் மிகவும் கொடூரமாக துன்பப்படுத்தப்பட்டதை
அறிந்த ஒரு அன்பர் மும்பை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.
அதன் காரணமாக இந்த சுந்தர் யானை, பங்களூரின் பென்னர்கட்டா
யானைச் சரணாலயத்தில் சேர்க்கப்பட்டு,
சிகிட்சை அளிக்கப்பட்டு, முழுமையாக குணமாகி உள்ளது.
இந்த வழக்கில் அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித்,
பமேலா ஆண்டர்சன் ஆகிய பிரபலங்கள் ஆதரவு அளித்தது சுந்தரின் வழக்கில்
மக்கள் மனத்தைச் செலுத்தி, வெற்றியடைய வழிவகுத்ததையும் இங்கு
குறிப்பிட வேண்டும். அந்தச் சரணாலயத்தில் உள்ள 15 யானைகளுக்கும் இந்த இரும்புச் சங்கலியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தத்
தருணத்தில்,
இரும்புச் சங்கிலிகளால் கட்டுண்டு அவதிப்படும் இந்தியாவின் கோவில் யானைகளை
நினைக்காமல் இருக்க முடியாது. அதைப் பற்றிய ஒரு கட்டுரையை ஃரெண்ட்
லைன் என்ற ஆங்கிலப் பத்திரைகையில் நான் படிக்க நேரிட்டது. அதில்
குறிப்பிட்டுள்ள செய்திகள் - படங்களுடன் பிரசுரமாகி இருந்தன.
அவைகள் என் மனத்தை வெகுவாகப் பாதித்தது. அதில்
உள்ள விவரங்களில் முக்கியமானவைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
இந்த
பொறுக்க முடியாத வேதனையால்,
இந்த சுப்பர் ஸ்டார் யானையும் தன் பொறுமையை இழந்து, 10 பேர்களை - அதில் 5 மாவுத்தர்களும்
அடங்கும் - பழிவாங்கி உள்ளது. சமீபத்தில்
27-01-2013 அன்று, 3 பெண்கள் அந்த யானையின் கோபத்திற்குப்
பலியாகிவிட்டனர். மீண்டும், அதே ஆண்டு பிப்ரவரி
மாதம் 7-ம் தேதி, இன்னொரு மாவுத்தனையும்
கொன்று விட்டது இந்த யானை. இதற்குக் காரணம் அந்த யானையின் கால்களில்
உள்ள புண்களில், அந்த மாவுத்தன் அங்குசத்தால் குத்தி துன்புறுத்தியது
தெரியவந்தது. இதனால், யானையின் மற்ற மாவுத்தனை
காட்டிலாகா கைது செய்து வழக்கு தொடங்கி உள்ளது. அப்படிப்பட்ட
யானகளை உடனே யானைகள் சரணாலயங்களில் கொண்டு, காடுகளில் சுதந்திரமாகத்
திரிய விடுவது அவசர அவசியமாகும். ஆனால், பணம் பண்ணுவதையே பிரதானமாகக் கருதும் கோயில் நிர்வாகம் மற்றும் தேவஸ்தானங்கள்
யானைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்பது மிகவும் வேதனையான செய்தியாகும்.
மேலே
உள்ள இரண்டாவது படத்தைப் பார்க்கவும். தகிக்கும் வெய்யிலில்
யானையை நிற்க வைத்திருக்கும் மாவுத்தன், தரையின் உஷ்ணம் அதிகமாக
இருப்பதால், தனக்கு மட்டும் பேப்பரைக் கால்களுக்கு அடியில் போட்டு
அதன் மேலே நிற்கிறான். ஆனால், மிகவும் மிருதுவான
பாதங்களை உடைய யானையோ அந்த வெய்யிலில் காய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறது.
இந்த
நிலை ஒழிய வேண்டு மென்றால்,
கோயில்களில் யானையை வைத்துப் பராமரிப்பதை ஒரே யடியாக தடுத்து நிறுத்த
வேண்டும். சர்க்கஸ் போன்றவற்றில் யானைகளை வைத்து வேடிக்கை காட்டுவது
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அரசாங்கங்கள் இந்த யானைகளின் துயரத்தை நீக்கவும் ஒரு
நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும்.
இதற்கு
மடாதிபதிகளும் ஆவன செய்ய வேண்டும்.
Comments