Posts

Showing posts from March, 2025

விடியல் அரசு - வீழும் அரசு

Image
  2011, 2016, 2021 ஆண்டுகளில் நடந்த தமிழக தேர்தல்களின் முடிவுகள் இதோ :   2011 தேர்தல் அதிமுக ஜெயலலிதா தலைமையில் நடந்தது . அப்போது கருணாநிதியின் அரசைத் தோற்கடித்து அதிமுக கட்சி மட்டுமே மொத்தமுள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகளில் 150 இடங்கள் + அதன் கூட்டணிக் கட்சிகள் 78 இடங்கள் என்று சரித்திரம் படைத்தது . ஆனால் திமுக 23 இடங்கள் + காங்கிரஸ் 5 இடங்கள் என்று மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது .   2016 ஆண்டு நடந்த அடுத்த தேர்தலிலும் ஜெயலலிதா மீண்டும் அதிமுக 134 இடங்களில் வென்று ( திமுக வென்ற இடங்கள் 89 இடங்கள் மட்டுமே ) அதே ஆண்டு மே 23 - ல் முதல்வரானார் . ஆனால் அவர் உடல் நலக் குறைவால் அதே ஆண்டு டிசம்பர் 5- ல் உயிர் இழக்க வழக்கம் போல் ஓ . பன்னீர் செல்வம் - பிறகு எடப்பாடி கே . பழனிச்சாமி ஆகியவர்கள் முதல்வராகப் பதவி ஏற்று ஆட்சி செய்தாலும் , அந்தக் கட்சி மூன்றாக உடைந்தது . பன்னீர் செல்வம் , எடப்பாடி , தினகரன் என்ற அளவில் அதிமுக பிளவு பட்டது .   அடுத்த 2021 ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா - கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் களமாகும் . அந்தத் தேதலில் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி ...

ஸ்ரீ ராம நவமி - 06 - 04 - 2025

Image
  06 - 04 - 2025 - ஞாயிற்றுக் கிழமை - ஸ்ரீ ராமச் சந்திரபிரபுவின் 7139 - வது வருடப் பிறந்த நாள் கொண்டாட்டம் ஸ்ரீ ராமர் அயோத்தியில் தசரத சக்கரவர்தி - கெளசல்யா ஆகியவர்களுக்கு கி . மு . 5114 வருடம் , ஜனவரி 10-ம் தேதி இரவு 12.30 மணி அளவில் திவ்விய ஜனனம்.   ராம ஜெனபூமியான அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ராமர் கோயிலில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட மஹா கும்பமேளாவில் பங்கேற்ற பல கோடிப் பக்தர்கள் பிரயாக்ராஜில் கங்கை - யமுனை - சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமத்தில் ஸ்நானம் செய்து புதிய அயோத்தியா கோயில் ஸ்ரீராமரை தரிசித்துள்ளனர் .   ஸ்ரீ ராமரின் அருளாசிகள் அனைவருக்கும் கிட்ட வாய்மை பிரார்த்திக்கிறது . 

யக்ஷ பிரஸ்னா - யக்ஷன் கேள்விகள்

Image
  யக்ஷப் பிரஸ்னா என்ற யக்ஷனின் கேள்விகளும் , தர்ம ராஜா யுதிஸ்டிரரின் பதில்களும் மஹாபாரதம் ஆரண்ய பர்வம் 311 - 12  - ல் வருகிறது .   த்வைத வனத்தில் பாஞ்சாலி மற்றும் தமது சகோதரர்களுடன் தர்மர் வசிக்கும் பொழுது பனிரென்று வருடங்கள் முடிந்தும் அஞ்யாத வாசம் ஒரு வருடம் இருக்கும் ஆரம்ப நிலையில் யக்ஷ பிரஸ்னா நேர்ந்தது.   அந்த வனத்தில் வசிக்கும் ஒரு மான் ஆரணி என்ற மரக்  குச்சியையும், மாந்தா என்ற தீ உண்டாக்க கடையும் கீழ்பாக மரப் பாகத்தையும் தன் கொம்புகளில் மாட்டிக் கொண்டு ஓடியது . அவைகள் யாகம் செய்ய அக்னியை உண்டாக்கப் பயன்படுத்தப்படும் கட்டைகளாகும் . அது ஒரு பிராமணனின் உடமையாகும். அந்தப் பிராம்மணன் தர்மபுத்திரர் வசிக்கும் குடிலுக்கு வந்து ' யாகத் தீ மூட்டும் மரக் கட்டைகளை ஒரு மான் எடுத்துக் கொண்டு ஓடி விட்டது . அதை மீட்டுத் தர வேண்டும்' என்று விண்ணப்பித்தான் .   அந்த மானை பிடிக்க தர்மர் தமது சகோதரர்களுடன் செல்ல அவர்கள் களைப்பினால் ஒரு ஆல மர நிழலில் சிறிது இளைப்பாறினர் .   அப்போது தாங்கள் படும் கஷ்டங்களை ஒவ்வொருவரும் சொல்லி விசனப்பட்டார்கள் .   முதல...