காசி கோவில் வளாகம் விரிவாக்க திட்டம்
இந்தத் திட்ட்த்திற்கு மோடி அவர்கள் 08 – 03 – 2019 அன்று தான் காசியில் அடிக்கல் நாட்டினார் . இது கொரோனா கால கட்டமாகும் . இருப்பினும் மோடியின் நேரடி மேற்பார்வையில் , யோகி அதித்யனாரின் களப்பளியால் 33 மாதங்களுக்குள் பூர்த்தி ஆகியதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது . வேத காலத்தில் தேவர்களுக்கும் , கடவுளர்களுக்கும் கட்டிடங்கள் கட்டுபவர் தான் விஸ்வகர்மா . அந்த விஸ்வகர்மாவே மறுஜென்மம் எடுத்து மோடி – யோகி ரூபத்தில் செயல்பட்ட மாதிரி இது இருந்தது என்று சொல்வது சாலப்பொருந்தும் . பல இன்னல்களையும் எதிர்கொண்டு எந்தவிதமான வில்லங்கமோ , கோர்ட் கேசோ இன்றி 300 வீடுகளுக்கு மேல் விலைக்கு வாங்கி , அவைகளை இடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்ட 40 அற்புதமான கலை அம்சங்களுடன் விளங்கிய கோயில்களைக் கண்டு வியந்து – அவைகளையும் பழைமை மாறாமல் , புதிப்பித்து தகுந்த இடத்தில் அமைக்கும் பணி என்று திட்டம் இன்னும் விரிவானதாகப் போய் விட்டது . மேலும் பல வசதிகளை ஏற்படுத்த 23 புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன . காசி மா நகரத்தின் பல புராதனக் ...