முழுப் பழமொழியால் அரசியல் முகமூடி கழலும் அவலம்
முழுப் பழமொழியால் அரசியல் முகமூடி கழலும் அவலம்
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
பாலும் தேனும் உடலுக்குறுதி
வேலும் மயிலும் உயிருக்குறுதி"
(வேலும் மயிலும் வருவதாலோ என்னவோ நாசுக்காக மறைத்து விட்டனர்)
மகாபாரதத்தை எடுத்துக்கொண்டால் ஒரு தாயின் சொல்லை எவ்வாறு மதிக்க வேண்டும்? சகோதரர்களின் சொல்லாடல்களை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும்? குருவின் சொற்களை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆரம்பித்து இறைவனின் சொல்லை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதுமுதல் வாழ்க்கைத் தத்துவங்கள் ஏராளம்!
மேலே உள்ள கட்டுரையில் ஆசிரியர் குறள் பா ஒன்றையும், கணியன்
பூங்குன்றனாரின் பாடல் ஒன்றையும் கருணாநிதிக்கு எதிராக மேற்கோள் காட்டுகிறார். அதில்
குறள் பா ஒரளவுக்கு கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கு ஒத்துப்போனாலும், ‘யாதும் ஊரே யாவரும்
கேளிர்” என்ற பாட்டு எவ்வாறு கருணாநிதியின் கருத்துக்கு மாறானது என்பது விளங்க வில்லை.
அதனை விளக்கவே இது.
குறள் எண்: 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
கருத்து: எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் இயல்பு ஒரே தன்மையானது. வேறுபாடு இல்லை தான். ஆனால், பெருமை – சிறுமை என்ற வேறு பாடுடைய இயல்புகள் அவரவர் செய்யும் தொழில்களால் ஏற்படுத்துகின்றன.
அடுத்து கட்டுரையில் கணியன் பூங்குன்றனாரின்
“யாது ஊரே யாவரும் கேளிர்” என்ற பாட்டு முழுவதும் கீழே பிரசுரமாகி உள்ளது.
இதில் துதி பாடுதல் – பெரியோரை வியத்தல் – கூடாது என்பதை
கருணாநிதி சொல்வதில்லை என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
இவரின் புறநானூற்றுப்
பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும்
இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
முனிவு = வெறுப்பு, கோபம்; தண்துளி = குளிர்ந்த துளி; மல்லல் = மிகுதி, வலிமை, பொலிவு;
புணை = தெப்பம், மிதவை, மூங்கில்;
பொருள்:
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா
மக்களும் எம் உறவினரே
நன்மையும் தீமையும் அடுத்தவரால் வருவதில்லை
அது போல துன்பமும் அதற்கு மருந்தான ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை
சாதல் மற்ற பிறத்தல் அது போல ; வாழ்தல்
இன்பம் எல்லாம் மகிழ்ச்சி இல்லை எப்பொழுதுமே
இரவுக்கு முன் வரும் இனிமையான தென்றலும் கூட மகிழ்ச்சி இல்லை
வானத்தில் மின்னலுடன் வருகின்ற சிறுத்துளி மழைநீர் ஒன்றுசேர்ந்து பெரிய கல்லை கூட
பேராற்று நீர்வழி ஓடி பள்ளத்தில் தள்ளுகிறது அது போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
என்பது போல சான்றோர் பார்வையில் தெளிந்த வண்ணம் ஆகும்
ஆதலினால், பெருமையில்
பெரியோரை வியந்து போற்றுவதும் தவறு அதைவிட
சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் மிகவும் தவறு.
யாதும் ஊரே, யாவரும்
உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல,
அவரவர் செய்த வினைப்பயனாகத் தாமே வருவன என்பதும், உலகியலிலே மக்கள் பெறும் உயர்வு
தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால்,
நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ அன்றித் தீவினை யால் தாழ்வுற்ற
சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந்தோ ராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும்
மேற்கொள்ள மாட்டார்கள் என்பதும் ஆகியவுண்மை களைத் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்த
நிலையில் உலக மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது.
ஆகையால் கருணாநிதியிடம்
குறைகாணும் கருத்தை கட்டுரை ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது தான் எம்
விமரிசனம்.
Comments