Posts

Showing posts from February, 2020

26/11 பம்பாய் தீவிர வாதத்தாக்குதல்

Image
சிறப்புக் கட்டுரை 26/11 பம்பாய் தீவிர வாதத்தாக்குதலில் காங்கிரசின் தேசிய விரோதச் செயல்கள் – ஆக்கம் : வாய்மை நிருபர் பவித்திரன் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் – என்று தான் ருத்திரமாக பொங்கி எழத் தோன்றுகிறது . காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி செய்யும் போது பிஜேபியை ஹிந்து தீவிரவாதக் கட்சியாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய காங்கிரஸ் – முஸ்லீம்கள் 26/11 பம்பாய் பாகிஸ்தான் தீவிரவாதத் தாக்குதல் (2008 -   யு . பி . ஏ 1 ஆட்சியின் போது ) நடைபெறுவதற்கு முன்பே காங்கிரசின் மூத்த தலைவர்கள் – திக்விஜய் சிங்க் , ப . சிதம்பரம் , சிசில் குமார் ஷிண்டே , மணி சங்கர் ஐயர் ஆகியவர்கள் இந்தியாவில் நடக்கும் தீவிரவாதம் பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்களால் மட்டும் நடைபெற வில்லை . ஹிந்துக்களும் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க பல ஜோடிக்கப்பட்ட வழக்குகள் போட்டு பிஜெபியை அரசியல் களத்தில் தோல்வி அடைய முயன்றனர் . அதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவுக் கரம் நீட்டி மக்களை திசை திருப்பி தேர்தலில் வெற்றி பெற த...

அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஹிமாலய வெற்றி

Image
சென்ற 2015- ம் ஆண்டு தேர்தலைப் போல் இந்த 2020 டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் 70 இடங்களில் தனித்துப் போட்டி இட்டு , 62 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது . அதன் வெற்றியின் வாக்கு வித்தியாசமும் அதிகம் . முந்தைய தேர்தலில் அந்தக் கட்சி 67 இடங்களில் வென்றுள்ளது . இப்போது 5 இடங்கள் மட்டும் தான் குறைவு . ஆம் ஆத்மி பெற்ற வாக்கு சதவிகிதமும் அதிகம் – 54%. இது முன்பு பெற்றதை விட வெறும் 0.73% குறைவு . ஆம் ஆத்மி கட்சி 1000 வோட்டுக்கும் கீழே (753 ஒட்டுக்கள் வித்தியாசம் ) ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் பெற்றுள்ளது . மேலும் 5000 ஓட்டு வித்தியாசத்திற்கும் கீழே அது 6 இடங்களில் தான் பெற்றுள்ளது . மற்ற இடங்களில் அதன் ஓட்டு வித்தியாசம் மிக அதிகம் . பி . ஜே . பி . மத்திய அரசில் ஆட்சி செய்தாலும் , பல மத்திய அமைச்சர்கள் – மாநில முதல் மந்திரிகள் டெல்லி அசம்பிளி தேர்தலில் பிரசாரம் செய்தார்கள் . இருப்பினும் அதனால் எந்த பாதிப்பும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்படவில்லை . பிஜேபி லோக் சபாவில் டெல்லியின் அசம்பளி தொகுதியின் ஏழு இடங்களிலும் சென்ற வருடத்தில் தான் வென்றுள்ளது . ஆம் ஆத்மி கட்சிக...

ஸ்ரீநிவாசன் ரிசர்வ் வங்கியின் கவர்னரால் கவுரவிக்கப்படும் விழா

Image
பாங்க் ஆப் பரோடா ( முன்பு விஜயா பாங்க் ) டிஜிடல் ‘ உலகில் வங்கியின் பணி ’ என்ற தலைப்பில் ஹிந்தியில் கட்டுரைப் போட்டி 2018 நடைபெற்றதில் வென்ற ஸ்ரீநிவாசன் கிருஷ்ணன் 2019 வருடம் இந்தியாவின் ரிசர்வ் பாங்க் கவர்னர் ஸ்ரீ ஷாந்திகான் தாஸால் போட்டியில் வெற்றி பெற்ற சர்டிபிகேட் , வெற்றிக் கேடயம் 2019 அன்று வழங்கப்பட்டது . அதன் பிறகு பாங்க் ஆப் பரோடா அகில இந்திய அளவில் ஹிந்தியில்  செமினார் 07-02-2020 அன்று ‘$5 டிரிலியன் கோடியாக ( £ 350 லட்சம் கோடி ) இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்ப்டுத்தும் வழிமுறைகள் ’ என்ற தலைப்பில் ஸ்ரீநிவாசன் கிருஷ்ணன் தனது கட்டுரையை அனுப்பி அதிலும் அவரது கட்டுரை தேர்வாகியது . அதற்கும் ஸ்ரீநிவாசன் கிருஷ்ணனை அந்த செமினாரில் பேச வைத்து , அவருக்கு பரிசு , பாராட்டுப் பத்திரம் கொடுத்துக் கவுரவிக்கப்பட்டுள்ளார் . ஸ்ரீநிவாசன் கிருஷ்ணன் வாய்மை ஆசிரியரின் அக்காவின் மகனாவார் . இது ஸ்ரீநிவாசனுக்குக் கிடைத்த சிறந்த பாராட்டாகும் . . ஸ்ரீநிவாசன் போட்டோக்களில் வலது புரம் நின்று பரிசு வாங்குகிறார் . உட்கார்ந்துள்ள மேடையில...

தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் பிறந்த நாள் – 18-02-2020.

Image
தமிழ் தாத்தா உ . வே . சாமிநாத ஐயர் பிறந்த நாள் –  18-02-2020                  – 165- வது பிறந்த தின வாழ்த்துக்கள் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவரும் தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் , செழுமையையும் அறியச் செய்தவரும் 90- க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்து மட்டுமின்றி  1000-   க் கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் எழுத்தேடுகளையும் சேகரித்த அயராது தமிழுக்குப் பாடுபட்டவர் .   பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்         காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய் , அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் ,    இறப்பின்றித் ...