மோடி-அமித் ஷா இரட்டையர்களின் வெற்றி




தேர்தல் கணிப்புகள் - தேர்தலுக்கு முன்னால் நடத்திய கருத்துக் கணிப்புகளாகட்டும், தேர்தல் நடந்த பிறகு நடத்திய ஓட்டுக் கணிப்புகளாகட்டும் - அனைத்தும் மஹா தவறாகி, பாரதிய ஜனதா கட்சி முக்கியமாக மிகவும் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்திலும், சிறிய மாநிலமான உத்திரகாண்டிலும் ஹிமாலய வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது என்றால் மிகையாகாது.
  
உத்திரகாண்டின் காங்கிரஸ் முந்தைய முதல் மந்திரி ஹரீஷ் ராவத் போட்டி இட்ட ஹார்ட்வார் மற்றும் கிச்சா என்ற இரண்டு தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்து, அங்கு பி.ஜே.பி. அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதுவும் பி.ஜே.பி.யின் மிகப்பெரும் சாதனையாகி விட்டது.

பஞ்சாபில் அகாலிதளம் கூட்டணி ஆட்சியில் இருந்தும், பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை அடைந்தாலும், மற்ற இரண்டு மாநிலங்களான மணிப்பூர் (60 தொகுதிகள்), கோவா (40 தொகுதிகள்) ஆகியவைகளிலும் காங்கிரசுக்கு அடுத்த படியாக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதுவும் முந்தைய மணிப்பூர் சட்ட சபையில் ஒரு தொகுதி கூட இல்லாத பா... 21 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரசின் மெத்தனமான அனுகுமுறையால் மணிப்பூர் - கோவா மாநிலத்திலும் காங்கிரசை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்றிருப்பினும் அங்கும் பா... ஆட்சி பீடத்தில் அமர்ந்து விட்டது. ஆகையால், பஞ்சாப் தவிர்த்து, பாஜகவின் வெற்றி மகத்தானதாகி மோடியின் மத்திய அரசின் கொள்கைகளுக்குக் கிடைத்த - அதுவும் குறிப்பாக உயர்மதிப்பு ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பிற்குக் கிடைத்த - வெற்றி என்று கொள்ள வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

2012 ஆண்டு உ.பி. மாநிலத் தேர்தலில் பி.ஜே.பி.க்கு வெறும் 15% சதவிகித ஓட்டு என்ற நிலை மாறி இந்தத் தேர்தலில் அதன் ஓட்டு சதவிகிதம் 41.4 என்பது கிட்டத் தட்ட லோக்சபாவில் அது பெற்ற 43.6% ஓட்டின் அளவிலேயே இருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.

.பி.தேர்தலில் சமாஜ்வாதி 47 + காங்கிரஸ் 7- ல் மட்டும் வெற்றி அடைந்து படு தோல்வியை அடைந்துள்ளது. அதில் அகிலேஷ் யாதவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இந்த அதிர்ச்சிச் செய்தியை தினத் தந்தி பத்திரிகையிலும், சத்தியம் என்ற தமிழ் டி.வி.சேனலிலும் வெளியிட்டார்கள். ஆனால், மற்ற சேனல்களிலோ அல்லது ஹிந்து போன்ற பத்திரிகையிலோ இந்தச் செய்தி வெளிவரவில்லை. அகிலேஷ் உண்மையிலேயே தோற்றாரா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஏன்? - அவர் வென்றதையும் எந்த பத்திரிகையிலும் வெளியிடப்படவில்லை. அவர் தோற்றது உண்மையாக இருப்பின், இப்படி பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்திருந்தால், அது மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

காங்கிரஸ் 100 + இடங்களில் சமாத்வாதி கட்சியுடன் இணைந்து போட்டி இட்டுச் ஜெயித்த 7 இடங்கள், பி.ஜே.பி.யின் தேசிய ஜனநாயகக்  கூட்டணியின் சார்பில் 11 தொகுதிகளில் மட்டுமே போட்டி இட்டு 9 இடங்களில் வெற்றி பெற்ற அப்னா தால் என்ற ஒரு சிறிய - அதுவும் புதிய மாநிலக் கட்சியை விட 2 இடங்கள் குறைவு என்பது காங்கிரசிற்கு ஏற்பட்ட ஹிமாலய தலை குனிவு என்றால் அது எந்த விதத்திலும் மிகையே இல்லை. மேலும், காங்கிரசின் கோட்டையாக இருந்த ராய்பரேலி - அமேதி இரண்டிலுள்ள தலா 5 இடங்களைக் கொண்ட மொத்த 10 இடங்களில், 6 இடங்களைக் கைப்பற்றி உள்ளது பா... - ராய்பரேலியில் 2 + அமேதியில் 4 (அமேதியில் போட்டி இட்ட 5 தொகுதிகளில் காங்கிரஸ் ஒன்றைக் கூட கைப்பற்ற முடியவில்லை - மீதமுள்ள ஒரு தொகுதியில் சமாத்வாதி கட்சி வேட்பாளர் வென்றுள்ளார்.) பா... 2012 மாநிலத் தேர்தலின் போது, ராய் பரேலி - அமேதி சட்ட மன்ற அனைத்துத் தொகுதிகளிலும் தோற்றுள்ளது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், ராய் பரேலியில் இரண்டு தொகுதிகளிலும் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் பா... தோற்றுள்ளது என்பது காங்கிரசை கதிகலங்க வைத்துள்ளது.

அமேதி தொகுதி ஒன்றில் தான் தலைமறைவாகி - நீதிமன்றத்தால் கைதுசெய்ய பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்ட சமாஜ்வாத கட்சியின் மந்திரி காயத்ரி பிரசாந்த் பிரஜாபதியை பி.ஜே.பி.யின் கரிமா சின்ஹ் தோற்கடித்துள்ளார். நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அகிலேஷ் அந்த மந்திரியை கைது செய்யாவிடினும், குறைந்த பட்சம் அவரை தம் மந்திரி சபையிலிருந்தாவது நீக்கி இருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்ய வில்லை. இது ஜனநாயக வழி முறைக்கும், தர்மத்துக்கும் இழைத்த மிகப் பெரிய அநீதி ஆகும். அதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டி விட்டார்கள். ஆனால், இப்போது பா... ஆட்சியில் அமாராவிட்டாலும், பிராஜாபதி கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளான்.

 கோவாவில் 40 தொகுதிகளிலும் போட்டி இட்ட ஆம் ஆத்மி கட்சி பெற்ற மொத்த ஓட்டுக்கள் வெறும் 57,420 - அது பதிவான ஓட்டுக்களில் 6% ஓட்டுக்களாகும். மேலும், போட்டி இட்ட 40 வேட்பாளர்களில் 39 பேர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கை நேரம் வரை ஆம் ஆத்மி கட்சியினர் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற வெற்றிப் போதையில் குதித்துக் கும்மாளம் போட்டார்கள். அதுவும் பஞ்சாபைப் பொருத்த மட்டில், ஆம் ஆத்மி கட்சிதான் வெல்லும் என்று நினைத்து, வெற்றி விழாவிற்கும் ஏற்பாடு செய்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.

காசியில் அனைத்து எட்டுத் தொகுதியிலும் தாமரைதான் வெற்றிக் கொடி நாட்டி உள்ளது என்பது மோடியிடம் மக்களுக்கு இருக்கும் மோகம் மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இது மோடியின் சுனாமி அலை என்ற பத்திரிகைகள் மதிப்பிட ஆரம்பித்துள்ளன.  

மணிப்பூரில் தேர்தலில் நின்ற இரோம் சர்மிளா புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி போட்டி இட்டதில், அவரே வெறும் 90 ஓட்டுகளே - ஆமாம் 90 ஓட்டுகளே - பெற்று மிகப் பெரிய தோல்வியைத் தழுவி உள்ளார். இது நோட்டா ஓட்டான 143-யை விடக் குறைவாகும். இதனால் வெறுப்படைந்த அவர் அரசியலை விட்டே விலகுவதாக அறிவிப்புச் செய்துள்ளார்.

காங்கிரசின் பஞ்சாப் வெற்றி அதற்குக் கிடைத்த மிகப் பெரும் ஆறுதல் கொடுக்கும் ஒன்றாகும். அதுவும் 2012-ஆண்டு பெற்ற 46 தொகுதிகளிலிருந்து 77 தொகுதிகளைப் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி வாகை சூடி ஆட்சியினைக் கைப்பற்றி உள்ளது. மும்முனைப் போட்டி இருந்தும் காங்கிரசின் வெற்றி மகத்தான ஒன்றாகும். கேப்டன் அமரிந்தர் சிங் பஞ்சாபில் முதல் மந்திரியாகிறார். இந்த வெற்றியில் ராகுலின் பங்கோ அல்லது அவர் நியமித்த அரசியல் வியூகம் அமைக்க களம் இறங்கிய பிரகாஷ் கிஷோரின் பங்கோ இல்லை என்ற கருத்து பஞ்சாப் காங்கிரஸ் கட்சியிலேயே பரவலாக கருதப்படுகிறது. என்றாலும், அமரிந்தர் சிங், ராகுல் - சோனியாவின் நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலின் படி, பஞ்சாப் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன் என்று தமது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

டெல்லியைப் போல் காங்கிரசையும், அகாலி - பி.ஜே.பி.யையும் தோற்கடித்து விடலாம் என்ற ஆம் ஆத்மி கட்சியின் நம்பிக்கை தவிடு பொடியாகி அதன் தலைவர் கெஜ்ரிவாலின் ஆத் ஆத்மி கட்சியை இந்தியாவின் பல மாநிலங்களில் விஸ்தரிக்கும் கனவும், பிரதம மந்திரி பதவி ஆசையும் நிராசையாகி விட்டது.

வெற்றி பெற்ற பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் நல்லாட்சி வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உழைக்க வேண்டும் என்று வாழ்த்துவோமாக.

மோடி - அமித் ஷா - இரட்டையர்களின் அயராத உழைப்புடன் மற்ற மந்திரிகள், தொண்டர்கள் என்று பலரும் பலன் பாராது இரவு பகலாக களப்பணி ஆற்றி உள்ளார்கள். அதே போல் பஞ்சாப் தேர்தல் வெற்றியும் காங்கிரசின் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

      மோடி பி.ஜே.பி.யின் டெல்லி தலைமையகத்தில் தேர்தல் வெற்றி விழாவில் ஆற்றிய உரையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அந்த உரையில், நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தி ஆகும் 2022 ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவாக்கும் தமது செயல் திட்டக் கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வெற்றிகள் இந்தியாவின் கோடானு கோடி மக்களின்புதிய இந்தியாவை அமைக்கும் அவர்களின் அபிலாஷைகளையே காட்டுகிறது. தேர்தல்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம். பல வெற்றிக் கனிகள் நம் மரத்தில் விளைந்துள்ளன. ஒரு கனி மரம் எப்படி கனிகளின் சுமையால் பணிந்து வணங்குமோ, அதைப் போல், இந்த வெற்றியில் நாம் மிகவும் பணிவுடன் இருக்க வேண்டியது நமது கடமையாகும். ஏழைகள் முன்னேற விரும்புகிறார்கள். தங்களுக்கு தகுந்த வாய்ப்புப் பெறவே அவர்கள் விழைகிறார்கள். அது தான் புதிய இந்தியாவின் அடித்தளமாகும். நடுத்தர மக்களின் சுமைகள் குறைக்கப்படவேண்டும். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் ஆகியவர்களின் சக்திகள் தான் இந்தியாவை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும். இந்த வெற்றிகளினால் நமது கடமைகளை மிகவும் பணிவாக இருந்து செயல்படவேண்டிய கட்டாயம் நமக்கு வந்துள்ளது. அதிகாரம் என்பது பதவிகளைப் பற்றியது அன்று. அதிகாரம் பெறுவதை  மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு வாய்ப்பாகவே கருதவேண்டும்.’  

நான் புதிய இந்தியா - என்ற இணைய தள டிவிட்டர் கணக்கில் பலரும் சேர்ந்து மோடியின்புதிய இந்தியாவின் செயல் திட்டங்களுக்கு பலம் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். இதில் அனைத்து கட்சியினருக்கும் மோடி அறைகூவல் விடுத்துள்ளார். இதை மக்களின் இயக்கமாக மாற்ற மோடி விழைகிறார். ஆனால், அதை மற்ற கட்சியினர் ஏற்பார்களா? என்பது சந்தேகம் தான். இருப்பினும், பெருவாரியான மக்கள் பலம் மோடிக்கு இருக்கும் வரை, இந்த புதிய இந்தியா செயல்திட்டம் வெற்றி பெரும்.
உண்மையிலேயேபுதிய இந்தியாஎன்ற கருத்தின் மூல கர்த்தா சுவாமி விவேகானந்தராகும். விவேகானந்தரை மிகவும் மதித்து, போற்றி, வணங்கி, ஆராதிக்கும் மோடி விவேகானந்தரின் கனவுக் கொள்கையை செயல்படுத்த முன் வந்திருப்பது இந்திய மக்களின் பூர்வ புண்ணியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

புதிய இந்தியா மலரட்டும்! புதிய இந்தியா ஓங்கி உயரட்டும்!


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017