Posts

Showing posts from November, 2014

வள்ளுவம்: வளைவது வணக்கம் அல்ல ஆக்கம்: கரன்சங்க்

'வில் வணக்கம்', 'சொல் வணக்கம்' என்றும் 'வில்லேர் உழவர்', 'சொல்லேர் உழவர்' என்றும் பதப்பிரயோகங்களை வள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு வணக்கம் செலுத்துவதில் பல வகைகள் உண்டு. தன்னை விட வயதில் மூத்தவர்களையும், மெத்த படித்த மேதாவிகளையும் வணங்கும் பொழுது, வணங்குபவர் தம் உடம்பை மிகவும் வளைத்து, தன் இருகைகளையும் கூப்பி வணங்குவது வழக்கம். இதில் அவரது செய்கையும், உள்ளமும் இயந்து இயங்கினால், அது வரவேற்கத் தக்கது தான். அப்படி யில்லாமல், அவரது உள்ளம் விஷத்தால் நிரம்பி இருப்பின், அவரது வணக்கம் உண்மையிலேயே வெறுக்கத் தக்க தாகும். அதில் ஆபத்தும் பொதிந்திருக்கும். நாதூராம் கோட்சே மஹாத்தா காந்தியை கைகூப்பி வணங்கினான். பிறகு, தன் கைத் துப்பாக்கியால் மஹாத்தாவைச் சுட்டுக் கொன்று விட்டான். இப்படிப் பட்ட நாதுராம் கோட்சேயின் வணக்கத்தையும், நாம் சந்தித்திருப்போம். ஆனால், அதைத் தெரிந்து கொள்வதுதான் மிகவும் கஷ்டமான ஒன்றாகும். நேருக்கு நேராக எதிப்பவர்கள் நமக்குத் தீங்கு செய்பவர்கள் தான் என்றாலும், மறைமுகமாக வெளிவேஷதாரியாக நம்மிடம் பழகியே தீங்கு ...

நிழலும், நிஜமும் எழுத்து: கரன்சங்க

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். அதுதான் வாழ்வின் ரசம். அதில்தான் வாழ்வின் சுவையும் அமைந்திருக்கின்றன. கலைகளின் ஆணிவேரே இந்த மாதிரியான தனிப்பட்ட மாற்றங்களில் இருக்கின்றன. இதனால், வேதனையும், வெறுப்பும், அன்பும், அனுதாபமும், கோபமும் மனத்திலே கொழுந்து விட்டு எரியும் தீப்பந்தமாக ஒளிவிட்டுப் பிறகு அணைந்து விடும். இதைத்தான் வாழ்வின் அனுபவம் என்று அழைக்கிறார்கள். அதைச் சில சமயங்களில் புரட்டிப் பார்ப்பதால், நன்மைகளும், பலன்களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எப்போதோ நடந்த நிகழ்ச்சி தான். எனது டைரியைப் புரட்டியபோது என் கண்களில் பட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியதால், இக்கட்டுரை எழுதுகிறேன். 9-2-1957 என்று தெய்தி இடப்பட்டிருக்கிறது. தெய்தியில் ஒரு விசேஷமும் இல்லைதான். நான், என் கல்லூரி நண்பர்கள் இருவருடன், மைலாப்பூரிலுள்ள கல்லூரியிலிருந்து திருவல்லிக்கேணி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்.. என்னுடன் வந்த இருவரில் ஒருவன் மேல் ஒரு சிறுபையன் தெரியாமல் லேசாகப் பட்டுவிட்டான். அவன் கருப்பாக கோமணதாரியாக இருந்தான். அந்த என் நண்பன் தன் சட்டையைத் தட்டிவிட்டுப் பார்த்தான...

ஓடை ஆக்கம்: ஜயந்திநாதன்

உருவகக் கதை: பெரிய தூண்டிலைத் தோளிலே சாத்திக் கொண்டு ஒருவன் மெதுவாக நடந்து வந்தான். அங்கு ஒரு ஓடை ஓடிக்கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் சதுப்பு நிலம். அங்கு மண் புழுவை எடுப்பதற்கு வந்தான். மீனுக்கு ஆகாரமாக தூண்டிலின் கொக்கியிலே புழுவை மாட்டி, மீன் பிடிக்கத்தான்! பல மண் புழுக்கள் நிலத்திலே நெளிந்தன. அவன் மிகுந்த பூரிப்படைந்தான். தன் தோளிலே இருந்த தூண்டிலைப் பக்கத்தில் வைத்து விட்டு, தான் கொண்டு வந்த்ருந்த ஓலைப் பெட்டியில் புழுக்களை கொன்று போட்டான். அந்நிலத்திலுள்ள எல்லாப் புழுக்களும் அவன் பெட்டியிலே செத்துக் கிடந்தன. அவன் எழுந்து ஓடையின் பக்கத்தில் அமர்ந்தான். தூண்டிலின் கொக்கியிலே ஒரு புழுத் துண்டை மாட்டி, அதை ஓடை நீரில் வீசி யெறிந்து விட்டு, கரையிலே உட்கார்ந்து கொண்டான். தூண்டிற் கயிற்றுடன் கட்டப் பட்டிருக்கும் தந்தம் போன்ற நீரில் மிதக்கும் குச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் சென்றது. அவன் தூண்டிலை வெட்டி வெட்டி இழுத்தது தான் மிச்சம். ஒரு மீன் கூட அவனுக்கு அகப்படவில்லை. ஓலைப் பெட்டியில் நிறைந்து செத்துக் கிடந்த புழுக்கள் அவனைப் பார்த்துப் பரிகசிப்பதைப் போல் இரு...

தூய்மை இந்தியா இயக்கம்

Image
காந்தி ஜெயந்தி தினமான 2- ம் தேதி அக்டோபர் மாதம் 2014 அன்று , தூய்மை இந்தியா இயக்கம் என்ற மிகவும் தேவையான , அவசியமான , அவசரமான இயக்கத்தை மக்கள் இயக்கமாக அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகத் தொடங்கி வைத்தார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி . இந்தியாவை வருகிற 2- ம் தேதி அக்டோபர் 2019- க்குள் - அதாவது மஹாத்மா காந்தியின் 150- வது பிறந்த நாளுக்குள் - தூய்மையான நாடாக உருவாக்குவதற்கு இந்திய மக்கள் அனைவரும் ஒத்துழைத்து வெற்றிபெற அறைகூவல் விடுத்து , தாமே முன்னின்று துடைப்பத்தை ஏந்தி குப்பைகளை அகற்றி அந்த இயக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் . இந்த இயக்கத்திற்குத் தேர்வான சின்னத்தை உருவாக்கியவர்களுக்கும் , விளம்பர கவர்ச்சிச் சொற்றொடரை எழுதியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன .  உண்மையிலேயே தேர்வான சின்னம் மிகவும் அழகாகவும் , பொருத்தமாகவும் அமைந்துள்ளதைப் பார்த்து மக்கள் மகிழ்ந்ததைப் பார்க்க முடிந்தது . அந்தச் சின்னம் பொறித்த தொப்பிகளை மக்கள் பரவலாக அணிந்து தூய்மை இந்தியா இயக்கத்தில் கலந்து கொண்டார்கள் . ‘ இந்தச் சின்னம் மஹாத்மா காந்தியே தமது மூக்குக் கண்ணாடி வழியாக நாம் தூய்மை இந்...

மாடிசன் ஸ்கோயர் கார்டன், நியூயார்க்கில் ராஜ்தீப் சர்தேசாயின் அடாவடிச் செயல் - தொடர்பு

ராஜ்தீப் சர்தேசாயை மோடியின் ஆதரவாளர்கள் நியூயார்கில் தாக்கினார்கள் என்று ஹெட்லைன்ஸ் சேனல் மற்றும் என் . டி . டி . வி . சேனல் என்று பலவும் உடனேயே கண்டனம் தெரிவித்தனர் . இது மோடி மோடிசன் சதுக்க ஹாலில் உரையாற்றுவதற்குச் சில மணிகளுக்கு முன் நடந்துள்ளது . பர்க்கா போன்றவர்கள் டிவிட்டரில் இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர் . நடந்த சம்பவத்தின் முழு வீடியோ காட்சியையும் ஒளி பரப்பாமல் , ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஒளிபரப்பி , ராஜ்தீப் தாக்கப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டது . ஆனால் , உண்மையில் , ராஜ்தீப் தான் மோடியின் ஆதரவாளரான மஹேந்தர் ரெட்டி என்பவரின் சட்டையைப் பிடித்து இழுத்து , அடித்துள்ளார் . இந்தப் பகுதி பிறகு தான் வெளியிடப்பட்டது .  இந்தச் சம்பவத்திற்குப் பிறகு , ராஜ்தீப் தனது செய்கைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுள்ளார் . தொடர்பு

குஜராத் 2002 இனக் கலவரம்

Image
குஜராத் 2002 இனக் கலவரம் - என் . டி . டி . வி . மீடியாவின் மோடி வெறுப்பு - வீடியோ தொடர்பு மோடியைத் தரக்குறைவாக மீடியாக்கள் விமரிசிப்பதும் , தூஷணைகள் செய்வதும் , அதி மேதாவிகளாகத் தாங்களே தங்களுக்குப் பட்டம் கொடுத்து வலம் வரும் அத்தகைய மோடியை வெறுக்கும் ‘ சிக்குலர் ’ மற்றும் ‘ காங்கிரஸ் - இடதுசாரி கொள்கையர்கள் ’ ஆகியவர்களை இனம் கண்டு , ஸ்டூடியோவிற்கு அழைத்து மோடி எதிர்ப்புகளை ஒளி - ஒலி பரப்பி , ஆட்சியில் இருக்கும் காங்கிரசின் சலுகைகள் பல பெற்று பத்திரிகைக்கு மிகவும் அவசியமான சுதந்திர எண்ணங்களை காற்றிலே பறக்க விட்டு - ஆனால் , தாங்கள் தான் ‘ மக்களின் பிரதிநிதிகள் ’ என்று வலம் வரும் மூன்று பேர்களை மோடியே விமரிசனம் செய்துள்ளார் . 2002- ம் ஆண்டு நடந்த சம்பவங்களை மோடி 8-4-2014 அன்று தான் வெளியிட்டுள்ளார் . இருப்பினும் , இந்த வீடியோ அப்போதே பரவலாக ஒளிபரப்பப்பட வில்லை என்பதும் உண்மை . அந்த மூன்று ரிபோட்டர்கள் யார் யார் ? மோடியின் ஹிந்திப் பேட்டியின் தமிழ் வடிவம் : குஜராத்தில் நடந்த கலவரத்தை அடக்கி , அமைதியை உடனே நிலை நாட்டுவதில் நான் மிகவும் முயன்...

காங்கிரஸிலிருந்து இந்தியா விடுதலை: ஹரியானா - மஹாராஷ்ரா மாநில தேர்தலில் நிரூபணம்

Image
‘ காங்கிரஸிலிருந்து இந்தியா விடுதலை ’ என்ற கோஷத்தை முன் வைத்து பாரதீய ஜனதா கட்சி முந்தைய லோக்சபா தேர்தலைச் சந்தித்த போது , அது பகல் கனவு என்று தான் பல பத்திரிகைகள் - அரசியல் கட்சிகள் கணித்து , பி . ஜே . பி . யைக் கேலி செய்தன . ஆனால் , அது உண்மையாகி , காங்கிர வெறும் 44 எம் . பி . இடங்களையே பெற்று எதிர் கட்சி அந்தஸ்தையும் இழந்தது . மற்ற பல அரசியல் கட்சிகளும் - அ . இ . அ . தி . மு . க ., திருணாமுல் காங்கிரஸ் , பிஜூ ஜனதா தால் - கட்சிகளைத் தவிர்த்து - ஒரிலக்க எம் . பி . இடங்களையே பெற்று படு தோல்வியைத் தழுவின . சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் - முக்கியமாக பீகார் - உ . பி . மாநிலங்களில் பி . ஜே . பி . தனது முந்தைய வெற்றியினைத் தக்க வைத்துக் கொள்ள வில்லை என்ற நிலையைக் குறிப்பிட்டு , பி . ஜே . பி . யின் மோடி அலை இனி விலை போகாது என்று பல அரசியல் கட்சிகளும் , மீடியா - பத்திரிகைகளும் கொண்டாடினர் . ஆகையால் , மோடி - அமித் ஷா மேஜிக் ஹரியானா - மஹாராஷ்ட்ராவில் பலிக்காது என்று கணித்து செய்திகளைப் பரப்பினார்கள் . ஆனால் , ஹரியானா - மஹாராஷ்ட்டிர ஆகிய மாநிலங்களில் தற்போது நடந்து முடிந்த இ...

மோடியின் சீனாவை வரவேற்கும் மந்திரம்: ‘இஞ்ச் டுவேர்ஸ் மைல்ஸ்’

Image
INCH (India & China) towards MILES (Millennium of Exceptional Synergy) -  அங்குலத்திலிருந்து மைல்களை நோக்கிப் பயணம் என்ற சொல் பிரயோகம் அர்த்த புஷ்டியுள்ளது . இந்த சொல் பிரயோகத்தின் மூலம் , இந்திய - சீன உறவுகளை இந்தியாவும் சீனாவும்   பல காலம் அசாதாரணமான ஒருங்கிணைந்த சக்தியை நோக்கிய பயணம் என்பதாக மோடி விளக்குகிறார் . சீன அதிபர் ஜீ ஜின்பிங் மோடியின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தியா வருவதற்கு முன்பே ஒரு நீண்ட கட்டுரையில் எழுதி உள்ளார் . அதில் மோடியைப் பலபட புகழ்ந்து எழுதி உள்ளார் . அந்த கட்டுரையில் உள்ள சில வாக்கியங்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் . v அவரவர்கள் நாட்டின் தனிப்பட்ட தன்மைகளையும் தாண்டி , சீனா டிராகனும் , இந்திய யானையும் ஒன்றாக சமாதானம் , சமதர்மம் , நீதி ஆகியவைகளைக் காக்கும் . v புதிய மோடி அரசாங்கம் பதவி ஏற்ற பிறகு , சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி ஆகியவைகளில் ஒரு புதிய அலை இந்தியா முழுதும் வேகமாக வீசுகிறது . இந்த அலையால் , இந்திய மக்களின் தன்னம்பிக்கை மிகவும் அதிகமாகப் பொங்கி , இந்தியா தனது வாய்ப்பை அகில உலக அளவில் ஆர்வத்தை அதிகரிக்...