Posts

Showing posts from December, 2013

வாகன எரி எண்ணைக்கு மாற்று - இஸ்ரேல் அரசாங்கப் பரிசு!

Image
இடமிருந்து : ஜி . கே . சூர்யபிரகாஷ் , நோபல் பரிசு பெற்ற ஜியார்ஜ் ஏ . ஒலாஹ் , ஒலாஹும் - சூர்யபிரகாஷும் சேர்ந்துள்ள போட்டோ .   ஜி . கே . சூர்யபிரகாஷ் தெற்கு கலிபோர்னியா யுனிவர்சிடியின் வேதியல் பேராசிரியராக இருக்கிறார் . முழு விவரங்களுக்கு மேலே உள்ள மின் வலைத் தொடர்பைக் கிளிக் செய்து படிக்கவும் . உலகப் பொருளாதாரத்தின் ஏற்றத் தாழ்வுகள் - அரேபிய மற்றும் எண்ணை வள நாடுகளின் கைகளில் தான் இருக்கின்றன . அவைகளின் எண்ணைக் குழு நிர்ணயம் செய்யும் பெட்ரோல் விலைகள் உலக வர்த்தகம் - பொருளாதாரம் ஆகியவைகளைப் பாதிக்கும் நிலைதான் காணப்படுகிறது . இயற்கையாகக் கிடைக்கும் எண்ணைக் கிணறுகளின் பெட்ரோலுக்கு மாற்றாக வேறு எந்த வேதிப் பொருளும் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை . ஆனால் , மெதனால் என்ற எரிசாராயப் பொருள் பெட்ரோலுக்கு மாற்றாகச் செய்ய பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன . அந்த மாதிரியான ஆய்வுகளுக்கு ஊக்கம் கொடுத்து , பெட்ரோலுக்கு மாற்றுப் பொருளைக் கண்டு பிடிக்க ஒரு மில்லியன் டாலர் பரிசை ‘ வாகனங்களுக்குப் பயன்படும் மாற்று எரிபொருட்களுக்கான ஆய்வுக் கண்டுபிடிப்புகளுக்கான எரிக் மற்றும் ஷீலா சாம்சன் பிர...

மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய்க் கிரஹப் பயணம்

Image
நவம்பர் மாதம் 7- ம் தேதி செவ்வாய்க் கிழமை செவ்வாய்க் கிரஹத்தை ஆய்வு செய்ய ரூ. 450 கோடி செலவில் 1,350 கிலோ எடைகொண்ட  மங்கள்யான் செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி- 25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய வெற்றியாகும் .  விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை பல கட்டங்களில் அதிகரிக்கும் முயற்சியில் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்து இன்னும் இதேபோல் நான்கு முறை சுற்றுப் பாதை அதிகரிக்கப்பட்டு , சுமார் 300 நாள்களில் 68 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்த பிறகு , மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரஹத்தைச் சுற்றியபடி ஆய்வை மேற்கொள்ளும் . புவி நீள்வட்டப் பாதையில் 27 நாட்கள் பயணம் செய்யும் மங்கள்யான் விண்கலத்தை , இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே , டிசம்பர் 1- ம் தேதி நள்ளிரவு 12.42 மணிக்கு புவி நீள்வட்டப் பாதையில் இருந்து வெளியேற்றி , செவ்வாய் கிரக பாதையை நோக்கிச் செலுத்துவர். அந்த பாதையில் 300 நாட்கள் ப...

இரும்பு மனிதர் வல்லபாய் படேல் பற்றிய சரித்திரச் சான்றுகள்

Image
காட்சி 1: நாள் : 30-04-1948. இடம் : மந்திரிசபைக் கூட்டம் - முக்கிய நபர்கள் : ராஜாஜி , நேரு , பட்டேல் . அன்றைய நிலைமை : ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டு , இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை . நிஜாம் படைகளான ரிஸ்வி - ராஸாகார் அட்டூஷியங்களில் இறங்கி விட்டனர் . ஹைதராபாத் நிஸாம் பாகிஸ்தானுக்கு ஒரு தூதுவரை அனுப்பினார் . லண்டன் பாங்கிலிருந்து அரசாங்கப் பணத்தின் ஒரு பெரும் தொகை பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டது . கூடிய மந்திரிசபை கூட்டத்தில் , இந்த மோசமான நிலைமையை விளக்கி , பட்டேல் சொன்னார் : ‘ ஹைதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்புவதைச் தவிர வேறு மார்க்க மில்லை ’ நேரு தம்முடைய சுயநிலை மறந்து கோபமாக பட்டேலைப்பார்த்துக் கத்தினார் : ‘ நீங்கள் ஒரு முழுமையான சாதிவெறியர் . நான் ஒரு போதும் உங்களது கோரிக்கையை ஏற்க மாட்டேன் .” இதைச் செவியுற்ற வல்லபாய் படேல் தமது காகிதங்களை எடுத்துக் கொண்டு , ஒன்றும் பேசாமல் அறையை விட்டுச் சென்று விட்டார் . ஆதாரம் : எம் . கே . கே . நாயர் , ஐ . ஏ . எஸ் . அதிகாரியின் புத்தகம் : “ The Story of an Era Told without Ill Will ”. காட்ச...

காஷ்மீர் பிறந்த கதை

Image
காஷ்மீர் பள்ளத்தாக்கு முதலில் ஒரு பெரிய ஏரியாக இருந்ததாம் . அதன் பெயர் அப்போது ‘ சாடிசார் ’ என்பதாகும் . புராதனமான இதிகாசங்களில் இந்த விவரங்கள் காணப்படுகின்றன .  காஸ்யப ரிஷி காஸ்யப ரிஷி தமது தபோ வலிமையால் அந்த ஏரியில் உள்ள தண்ணீர் அனைத்தையும் , பல சிற்றாறுகளாக உருமாற்றி , அவைகளை ஜீலம் - இந்து நதிகளுடன் கலக்கும்படிச் செய்தார் . இப்படிச் செய்ததால் , அந்த நிலம் மக்கள் வசிப்பதற்கு ஏதுவாக மாறியது . இதன் காரணமாக காஷ்மீர் என்ற அந்த நிலத்தின் பெயர் காஷ்யப ரிஷியின் ஞாபகார்த்தமாக எழுந்ததாகும் .  தமது தவ வலிமையால் சிவபெருமானை அழைத்து , அந்த பூமியை அவரது அருளால் வாழ்த்தும் படி வேண்டினார் .  சிவ பெருமான் அவரது வேண்டுகோளுக்கு இணைங்கி , அருள் பாளித்த இடம் தான் அமர்நாத் என்று அழைக்கப்படுகிறது . அந்தப் புனிதமான குகையில் சிவ பெருமான் பனி லிங்கமாக இன்றும் காட்சி அளிப்பதாக நம்பப்படுகிறது . ஸ்ரீநகரிலிருந்து வடக்கில் அமர்நாத் 145 கி . மீட்டர் தூரத்தில் உள்ளது . ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் அந்தப் பனி லிங்கத்தை தரிசிக்க அமர்நாத் குக...