14 – 07 -2023 – சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்திய தினம்
நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய 3
நாடுகள் மட்டுமே தங்களது விண்கலன்களை இறக்கி ஆய்வு பணிகளை செய்து உள்ளன.
இந்தியாவும் 4-வது நாடாக அந்த வரிசையில் இடம் பிடிக்க
தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி
மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சோமநாத். |
நிலவில் மிக எளிதான பகுதிகளில்தான்
அமெரிக்கா, ரஷியா, சீனா
ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன.
நிலவின் தென் துருவத்தில்தான் அதிக
கனிம வளங்களும், நீர்ச்சத்துக்களும் உள்ளன. எனவே அங்கு
முதல் கட்ட ஆராய்ச்சியை முதல் நாடாக தொடங்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் இஸ்ரோ
விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி
ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ந் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு,
சந்திரயான்-2 விண்கலம் 2019
செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக்
கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி
செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான
ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக
நிலை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த
விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது
ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான்-3
விண்கலத்தை 10 கட்டங்களாக நிலவுக்கு அருகே கொண்டு
செல்ல இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். எனவே சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள்
பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவரை அதன் பயணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூர்
உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து
கண்காணிப்பார்கள்.
40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை
இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அன்று மாலை 5.47 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்கும் என்று
விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். சந்திரயான்-3 விண்கலத்தின்
பயணத்தில் ஏதேனும் மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்தால் மட்டுமே நிலவில் அது தரை
இறங்குவதில் சில மணி நேரம் மாறுபடலாம். எனவே திட்டமிட்டபடி அனைத்தையும் வெற்றிகரமாக
நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.
சந்திரயான்-3
விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே
ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும்
அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த திட்டம் வெற்றி அடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன்
உள்ளனர். இதன் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா
ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.
Comments