Posts

Showing posts from August, 2022

அணிமாறி முதலவர் பதவி சுகம் காணும் அரசியல் பச்சோந்தி நிதிஷ் குமார்

Image
பீஹார் மாகாணத்தின் கருப்பு தினம் – 10 – 08 – 2022 – ஏனென்றால் அன்று தான் தன் பதவியையும் , தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து – குறிப்பாக பிஜேபியின் உறவை உதறித் தள்ளி , ‘ ஊழல் கிருமிகள்’ என்று லல்லு – தேசஸ்வி பிரசாத் யாதவ் ஆகியவர்களை ஊழல்வாதிகளாக வெளிப்படையாக குற்றம் சாட்டியதுடன் , சிபிஐ பாட்னா ஓட்டலில் லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது “லல்லு – மனைவி ராப்ரி தேவி – இரு மகன்கள் தேசஸ்வி & தேஸ் பிரதாப் (இருவரும் நிதிஷ் அரசில் மந்திரிகளாக இருக்கும் தருணத்தில்) ரயில்வே ஹோட்டல் ஒதிக்கீட்டில் லஞ்சமாக பாட்னாவின் முக்கியமான இடத்தில் உள்ள மூன்று ஏக்கர் நிலம் மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிய ஒரு நிறுவனத்தில் லல்லு மற்றும் மனைவி – மகன்கள் பங்குதாரர்கள்” என்று பகிரங்கமாக அறிக்கையே விட்ட மிஸ்டர் கிளீன் நிதிஷ் தானே ஊழல் கிருமி என்று பட்டம் சூட்டிய லல்லுவின் இளைய மகனுடன் இணைந்து நிதீஷ் மீண்டும் 8- வது முறையாக பீஹார் முதல் மந்திரியாகவும் , தேசஸ்வி துணை முதல் மந்திரியாகவும் அந்த ஆகஸ்ட் 10- ல் பதவி ஏற்றுள்ளனர். 19 – 10 – 1994 அன்று நிதிஷ் குமார் – பீஹாரை லல்லுவிடமிருந்து காப்பாற்றும் கொள்கையுடன் சாமதா என்ற க...

விநாயக சதுர்த்தி – 31 – 08 - 2022

Image
விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்நாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் சதுர்த்தி திதி விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தது என்றாலும் , ஆவணி மாத சுக்ல பக்க்ஷ சதுர்த்தி திதி மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தியை "விநாயகர் சதுர்த்தி" என்று இந்து மதத்தினர் கொண்டாடுவது வழக்கம். பக்தர்கள் துயரைப் போக்கும் விநாயகர் , சிவபெருமான் மற்றும் தேவி பார்வதியின் மூத்த மகன் ஆவார். அவரை போற்றும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விக்ன விநாயகரை – துன்பங்களைத் துடைக்கும் கடவுளான விநாயகரை வீதியில் வைத்து பெரும் விழாவாக – அதன் மூலம் மக்களை ஒன்று திரட்டி , ஹிந்து பண்டிகையில் விநாயகர் பக்தியுடன் தேச பக்தியை மஹாராஷ்டிர மக்களிடையே ஊட்டியவர் தேசபக்தர் திகலக் மஹாராஜ் ஆவார்கள் . இதை அவர் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்திலேயே செய்து காட்டி வெற்றியும் கண்டவர் . அந்த அவரது இந்த வீதி விநாயகர் வழிபாடு இப்போது இந்தியா...

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - 19-08-2022

Image
  ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - 19-08-2022 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19- ம்தேதி கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி அவரது 5249 – வது பிறந்த தினக் கொண்டாட்டமாகும் . மஹா விஷ்ணுவின் 10 அவதாரங்களில்   9- வது அவதாரம் தான் கிருஷ்ணாவதாரம் . அவரது அந்த அவதாரம் கிருஷ்ண ஜெயந்தி , ஜன்மாஷ்டமி , கோகுலாக்ஷமி என்று கொண்டாடப்படுகிறது . மதுராவில் வசுதேவர் - தேவகிக்கு எட்டாவது மகனாக கிருஷ்ணன் பிறந்தார் ஆனால் அரக்கனான அவரது தாய்மாமன் கம்சனிடம் இருந்து கிருஷ்ணனை காக்க   கோகுலத்தில் நந்தகோபன்- யசோதை தம்பதியினர் அவரை வளர்த்தனர். சிறு வயதில் கிருஷ்ண மிகவும் குறும்பு செய்பவராகவும் , வெண்ணெய் திருடி உண்பவராகவும் , வளர்ந்த உடன் கோபியருடன் கொஞ்சி விளையாடுபவராகவும் பல லீலைகள் செய்து கோகுலத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். பின் மதுரா சென்று அங்கே கொடுங்கோல் ஆட்சி செய்த கம்சனை கொன்று மக்களை காப்பாற்றினார். அதனால் கிருஷ்ணன் பிறந்த தினத்தை மக்கள் மிகவும் சிறப்பாக தங்கள் வீட்டில் கிருஷ்ணனுக்கு பிடித்த அவல் , முறுக்கு , வெண்ணெய் போன்ற பலகாரங்கள் வைத்து வாசல் படியில் இருந்து பூஜை அறை...