Posts

Showing posts from May, 2022

கடன்பட்ட பொருளாதார சிக்கலால் கலவரத் தீயில் பற்றி எரியும் இலங்கை

Image
அனுமன் வாலில் இலங்கை அரசன் ராவணன் தீயை வைத்து தண்டனை கொடுப்பதாக நினைத்துச் செய்தது இலங்கையே தீயில் எரியும் நிலை ஏற்பட்டது என்பது தான் ராமாயணம் சொல்லும் செய்தி. அந்த ராமாயண கால ராவணன் போல் கடந்தகால பல இலங்கை அரசுகள் அபரிமிதமாக கடன் வாங்கி – கடனின் முதல் – வட்டி ஆகியவைகளைக் கட்டவும் மேலும் கடன் வாங்கி அந்தக் கடன் தீயில் திவாலாகும் நிலைக்கு இலங்கையை தள்ளி விட்ட அவலம் தான் இன்றைய நிலையாகும். 1965- ம் ஆம் ஆண்டிலிருந்தே சர்வதேச நாணய நிதியம் ( International Monetary Fund) ஸ்ரீ லங்கை அரசுக்கு 16 தடவை நிதி உதவி செய்துள்ளது. அந்த நிதிகளை அளிக்கும் போதெல்லாம் ஸ்ரீ லங்கை அரசுக்கு ‘ பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்கவும் , நிதிக் கொள்கையை பொருளாதார மேம்பாட்டிற்கு ஏற்ப விதிவகுக்கவும் , அரசு வழங்கும் உணவு மான்யத்தைக் கட்டுப்படுத்தவும் , ஸ்ரீலங்கா நாணய மதிப்பைக் குறைத்து அதன் மூலம் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தவும் ’ என்று அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் $78.70 கோடி அளவில் கொரானாவின் பாதிப்பிலிருந்து மீளமட்டும் தனியாக சென்ற ஆகஸ்ட் மாதத்தில்  கடன் வாங்கி உள்ளது ஸ்ரீலங்கா அரசு. 2022 வருடத்தில் இலங்கை...

ஸ்ரீ ரமண மஹரிஷியின் அருள் வாக்கு

Image
  குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார் . எனினும் ஒவ்வொருவரும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடைய வேண்டும் . ரமணர் முக்தி அடையும் கால கட்டத்தில் பக்தர்கள் கதறி அழுதனர் . அப்போது “ நான் எங்கு போக முடியும் . நான் இங்கு தான் இருக்கிறேன் ” என்பது தான் ரமணரின் இறுதிப் பொன் மொழி .    

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகளின் அருளுரை

Image
  “ ஸ்ரத்தை” என்கிற சப்தத்திற்கு நிஷ்க்ருஷ்டமான (தெளிவான) அர்த்தத்தை சங்கரபகவத்பாதாள் விவேகசூடாமணியில் கூறியிருக்கிறார். சாஸ்த்ரஸ்ய   குருவாக்யஸ்ய   ஸத்யபுத்த்யா   வதாரண   I ஸா ச்ரத்தா   கதிதா   ஸத்பிர்யயா வஸ்தூபலப்யதே    II அதாவது சாஸ்திரத்திலும் ஆசார்யாளுடைய வாக்கியத்திலும் மிகவும் பிராமாண்ய புத்தி (உண்மை என்கிற எண்ணம்) இருந்தால் அதற்குத்தான் “ஸ்ரத்தை” என்று பெயர்.   “சாஸ்திரத்தில் இப்படி இருக்கிறது.   அது அப்படித்தான் நடக்கும்” என்ற தீர்மானம் இருக்க வேண்டும்.   அநேக ஜனங்கள் ,   “ சாஸ்திரத்தில் கூறியபடி எல்லாவற்றையும் செய்தோம்.   ஆனால் , அதில் சொல்லப்பட்ட காரியம் மட்டும் ஒன்றும் ஆகவில்லை” என்று குறை கூறுவார்கள்.   இதற்குக் காரணம் அவர்களிடம் ஸ்ரத்தை இருக்கவில்லை என்பதேயாகும்.   “சாஸ்திரத்தில் என்னவோ இருக்கின்றது.   செய்தால் என்ன ஆகுமோ தெரியாது.   செய்து தான் பார்ப்போம்” என்ற எண்ணம் தான் அநேகம் ஜனங்களுக்கு இருக்கிறது.   “சாஸ்திரத்தில் இப்படி நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ...

மஹா பெரியவாள் ஜெயந்தி – 13 – 06 – 2022 – திங்கட் கிழமை அனுஷ நக்ஷத்திரம்

Image
  ‘ மகா பெரியவா’ என்று பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68- வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 129- வது ஜயந்தி தினம் இந்த வருடம்   ஜுன் மாதம் 13- ம் தேதி   கொண்டாடப் பட இருக்கிறது . மகா பெரியவா மயிலாப்பூரில் குடிகொண்டிருக்கும் கற்பகாம்பாள் அம்மனைப் பற்றி விளக்கிய அருள் வாக்கு : “ மயிலாப்பூர்ல வசிக்க றவா போன பிறவிகள்ல புண்ணிய ம் செய்தவா . இங்க இருக்கற கற்பகாம்பாள் யாரு தெரியுமா ? கற்பக விருட்சம். தேவலோகத்துல கற்பக விருட்சம்னு ஒரு மரம் இருக்கு. அதுக்கு அடியில நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் ஒடனே குடுத்துடும். அதுபோல இந்த கற்பகாம்பாள் சந்நிதிக்கு முன்னாடி நின்னுண்டு என்ன கேட்டாலும் குடுத்துவா ’ கற்பக விருட்சமான கற்பகாம்பாள் அருள் , மஹா பெரியவா ஆசி அனைவருக்கும் அபரிமிதமாக ஆயுள் பூராவும் பொழிய பிரார்த்திப்போமாக . கற்பகாம்பாள் திருவடிகளே சரணம் , சரணம் , சரணம் .

திருச்செந்தூர் வைகாசி விசாகம் – 12 – 06 – 2022 – ஞாயிற்றுக் கிழமை

Image
  வள்ளி – தெய்வையானை சமேத ஜெயந்தி நாதர் முருக ப் பெருமான் அவதரித்த தினம் வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரம். அன்று முருக ப் பெருமானை வழிபட்டால் , ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே , அன்றைய தினம் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் ஜெயந்திநாதரை முன்னிலைப் படுத்தி வழிபடும் திருவிழாவாகும். வைகாசி வசந்தத் திருவிழா 10 நாட்கள்  கோலாகலமாக நடைபெறும். அந்த 10 நாட்களிலும் தினமும் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி , கிரிவல உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும். 10- வது நாளில் இரவு 6 மணிக்கு முனிக்குமாரர்களுக்கு சுவாமி ஜெயந்திநாதர் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறும். மேலும் வைகாசி விசாகம் வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் வருவதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய திருக்கோயில் கருவறையில் தண்ணீர் நிறைப்பி , இறைவனுக்கு உஷ்ண சாந்தி வழிபாடான உற்சவமும் நடைபெறும். ஜெயந்திநாதரின் பரிபூர்ண அருள் வாய்மை அன்பர்கள...

திருச்சூர் பூரம் - 10 – 05 – 2022 – செவ்வாய்க் கிழமை

Image
  திரிச்சூர் பூரம் ' எல்லா பூரங்களின் பூரம் ' என்றழைக்கப்படுகிறது. ஆகையால்  திருச்சூர் பூரம் திருவிழா கேராளாவின் திருச்சூரில் கோயில் கொண்டிருக்கும் வடக்கு நாதர் ஸ்வாமியை மையமாகக் கொண்டு நடத்தப்படும் பெரிய விழாவாகும். இந்த விழாவில் கேரளாவில் உள்ள 10 கோயில்களின் உற்சவ விக்ரகங்கள் அந்தந்த கோயில்களின் யானைகளில் அரோகணித்து வடக்கு நாதர் கோயிலுக்கு மேளதாளத்துடன் வந்து கலந்து கொள்ளும். அந்த யானைகள் தங்கமுலாம் பூசப்பட்ட பளபளக்கும்அலங்கார முகப்புப் படாரம் , காதுகள் – முதுகு தும்பிக்கை ஆகியவைகளில் அலங்கார கோலங்கள் என்று அந்த கோயில் யானைகள் ஒவ்வொன்றும் அற்புதமா கக்  காட்சி அளிக்கும். அந்த யானைமேல் அமர்ந்துள்ளவர்கள் பல வர்ண கொடைகளைப் பிடித்துக் கொண்டு வருவார்கள்.  திருவம்பாடி மற்றும் பாரமேற்காவு கோயில்களின் யானைகளின் பக்களிப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது. இதஞ்சிதாரா மேளம் அந்த விழாவின் சிறப்பு அம்சமாகும். மேலும் திருச்சூர் பூர விழாவின் வாணவேடிக்கைகள் உலகப் பிரசித்தமாகும். யானை அணிவகுப்பில் நடக்கும் வண்ண வண்ண குடைகளின் காட்சிகளும் ப...