Posts

Showing posts from March, 2020

என் இன்னொரு அம்மா

Image
அம்மாவின் ஸ்தானம் மிகவும் உன்னதமானது. புனிதமானது. தெய்வத்திற்குச் சமமானது. ஆனால், அந்த ஸ்தானத்தைப் பெருவதற்கு, அந்தத் தாய் செய்யும் தியாகம் தான் எத்தனை? அப்படிப்பட்ட உன்னத ஸ்தானத்தை நான் இன்னொரு ஜீவனுக்கு கொடுக்க விழைகிறேன். அந்த ஜீவன் தான் என் மாமியார். ஆம், என் மாமியார் தான் என் இன்னொரு அம்மா. என் இன்னொரு அம்மா துரும்பாக இளைத்து, நடக்கும் பொழுது சிறிது கூனும் விழும். அவர் பேசுவது மிக மெதுவாகத்தான். கண்ணாடி அணிந்து, அவர் ஸ்லோகப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது, எனக்கு மஹா பெரியவாளின் நினப்பு வரும். அது ஏன் என்று என்னால் விளக்க முடியவில்லை. அவரது முகத்தின் தேஜஸ் அப்படி. என் இன்னொரு அம்மா இளவயதிலேயே விதவையாகியவர். அந்த துக்கத்தால், சரியான ஆகாரம் கொள்ளாமல், தன் உடம்பைப் பேணாமல் இருந்து விட்டார். வாழ்க்கையில் அவர் பட்ட துன்பங்கள் அவர் உடல் பூராவும் பரவி உருக்குலைய வைத்து விட்டது. ஆனாலும், தான் பெற்ற இரண்டு ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டிய கடமைகள் தான் அவருக்குப் பலத்தை கொடுத்திருக்க வேண்டும். எனக்குக் கல்யாணம் ஆன பொழுது, அவரது இரண்டு பையன்களும்...

எதிர்ப்பதும், எதிர் கொள்வதும்

Image
எதிர்ப்பதும், எதிர் கொள்வதும் நமது வாழ்வில் நாம் இரண்டு விதமான மன நிலையில் அநேக நேரங்களில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. அவைகளை எதிர்க்கும் மன நிலை (Reaction Mode) என்றும், எதிர்கொள்ளும் மன நிலை (Responsive Mode) என்றும் குறிப்பிடலாம். அந்த இரண்டு மன நிலைகளைப் பற்றி விவரிப்பது தான் இக் கட்டுரையின் நோக்கம். எதிர்க்கும் மன நிலை: முதலில் எதிர்க்கும் மன நிலையைப் பார்ப்போம். இந்த நிலையில் மனத்தில் அழுத்தம் உண்டாவதை மனிதர்கள் உணர்வார்கள். இதில் ஒருவர் கட்டாயத்தின் பளுவின் சக்தியால் தாக்கப்பட்டு, ஒரு தவறான அவசர முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்படும். இதில் எடுக்கும் முடிவில் ஒரு விஷயத்தில் அடங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து, ஒரு தெளிவான பார்வையைப் பெற நாம் தவறி விடுகிறோம். தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளுக்கு ஆளாகி, அவசரப்பட்டு முடிவெடுக்கும் நிலை உண்டாகிறது.  அதனால், நாம் கோபப்பட்டும், கவலைப் பட்டும், வெறுப்படைந்தும் ஆகிய மன நிலையால் துன்பப்பட்டுத் தவிக்க வேண்டி வரும். நாம் எதிர்க்கும் மன நிலையில் இருக்கும் போது, நமது தேர்வு மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் த...

வ.வே. சு. ஐயர்

Image
நூலகம்: நான் கண்ட நால்வர்  எழுத்து: வெ. சாமிநாத சர்மா போன இதழில், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களைப் பற்றிய விபரங்கள் பல அறிந்தோம். இந்த இதழில் திரு. வ.வே.சு. ஐயர் அவர்களைப் பற்றி வெ.சாமிநாத சர்மாவின் பார்வையில் அறியப் போகிறோம். இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால், ஆசிரியர் சாமிநாதன் வ.வே.சு.ஐயருடன் நெருங்கிப் பழகியவர். அவரின் கீழ் உதவி ஆசிரியராகப் பல வருடங்கள் பணிபுரிந்தவர். ஆகையால், விபரங்கள் அனைத்தும் நேரடியான உண்மை நிலவரம் என்பதை அறியலாம். நீண்டு இருப்பினும், படிக்க மிகவும் சுவை உள்ளது என்பதை நீங்கள் உணர்வீர்கள். தவறாமல் படிக்கவும்.      - ஆசிரியர். 1. தேசபக்தன் பத்திரிகைக்கு ஆசிரியராக திரு.வி.கலியாணசுந்தர முதலியாருக்குப் பிறகு பொறுப்பேற்றார். அப்பொழுதுதான் ஐயரை நான் முதல் முதலாகப் பார்த்தேன். கோடிட்ட நெற்றி; அதில் பிறை வடிவமான சந்தனப்பொட்டு; புன்சிரிப்பு தவழும் உதடுகள்; ஒழுங்காகச் சீவிவிடப்பட்ட தலைமயிரும், தாடி மீசையும், கட்டுமஸ்தான சரீரம்; அதை ஒர் உத்தரீயம் மறைத்துக் கொண்டிருந்தது; இடுப்பிலே பஞ்சகச்ச வேஷ்டி; கையிலே ஒரு புத்த...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் குழப்பம் – ஆக்கம்: பவித்ரன்

Image
சூப்பர் ஸ்டார் ரஜனியின் பிரஸ் மீட்டில் பேசியது ஒரு உச்ச கட்ட குழப்பம் என்றால் மிகையாகாது. ‘நான் முதல்வர் பதவியில் அமர மாட்டேன். அதற்கு வேறு திறமைசாலி – 50 வயதுக்கும் குறைவானவர் தேர்வு செய்யப்படுவார்’ என்று கூறுவதைக் கூட பொறுத்துக் கொண்டு விடலாம். ஆனால் கட்சியில் உள்ளவர்களுக்கு பதவி கிடையாது. பதவி ஆசை உள்ளவர்கள் கட்சிக்குத் தேவை இல்லை – என்று ரஜினி கர்ஜிப்பது ‘ரஜினி மக்கள் மன்ற’ உறுப்பினர்களையே ஜகா வாங்க வைக்கும் என்று நினைக்கிறேன். ‘வேலை செய் – ஆனால் கூலி இல்லை’ என்பது அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் சரிப்பட்டு வராது என்பதை ரஜினி உணராமல் இருப்பது மிகவும் வருத்தமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. அவர் ஏதோ ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கிறார். நிஜ உலக – எதார்த்த அரசியல் ஞானம் இல்லாமல் ரஜினியில் மனது குழப்பத்தில் மூழ்கி உள்ளதைத் தான் இது காட்டுகிறது.  ஆன்மீகம் அரசியலில் ஊறுகாயாக தொட்டுக் கொள்ளத்தான் சிறிய அளவில் இருக்க வேண்டும். அதுவே அன்னமாக இலையில் இட்டால், அதை சாப்பிடாமல் தவிர்த்து பட்டினிதான் கிடக்க வேண்டும். ஆன்மீக துண்டை அவரது ‘மக்கள் மன்ற’ ரசிகர்களின் தோள...