10-12-2019 – அன்று கார்த்திகை தீபத் திருவிழா
10-12-2019 – செவ்வாய்க்கிழமை - கார்த்திகை 24, விகாரி வருடம் அன்று கார்த்திகை தீபத் திருவிழா
தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும்
மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும்,
கார்த்திகை என்றும்
வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக
மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம்
கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை
விழா
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை
தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும்.
பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து
"சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான்
சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.
இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.
கார்த்திகை விழாவை குமராலாய தீபம், விஷ்ணுவாலய
தீபம் சர்வாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.
·
குமராலய
தீபம்:முருகன்
ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
·
விஷ்ணுவாலய
தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை
மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
·
சர்வாலய
தீபம்:ஏனைய
இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும்.
கார்த்திகை மாதத்து
முழுமதி திதி.
ஐதீகம்
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள்
போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும்
முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல்
சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள்
இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று
விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத்
தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
திருவண்ணாமலை
கார்த்திகை விளக்கீடு
காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை
மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக,நெருப்பு
மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம்
ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை
மீது தீபம் ஏற்ற செம்பு,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட
கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.
இக்கொப்பரையை
1668-ல் பிரதானிவேங்கடபதி ஐயர்
என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார்.பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை
தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும்.
இக்கொப்பரையை மலை மீது
வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர்.
இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ
மேற்பட்ட நெய்யும்,10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.
விரதம்
இருக்கும் முறை
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர
நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு
கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று
தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை
அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம்
என்பது ஐதீகம்.
வீடுகளை
அலங்கரிக்கும் முறை
பௌர்ணமி நிலவு
கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் அகல்களில்
விளக்கேற்றி வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.
வாய்மை அன்பர்கள் அவர்களது நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் திருவண்ணாமலை உறை இறைவன் – இறைவி அருள் பரிபூர்ணமாகக் கிடைக்க மனதாரப் பிரார்த்திக்கிறோம். கார்த்திகையில் ஏற்றப்பட்ட தீப ஜோதி வரும் நாட்களில் ஒளிவிட்டுப் பிரகாசித்து வழிகாட்ட வேண்டுகிறோம்.
Comments