Posts

Showing posts from July, 2019

கர்நாடக அரசியல் நாடகம்

Image
கர்நாடகாவின் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவிற்கு முன் அதன் அசெம்பளியின் கட்சிகளின் நிலவரம் இது தான்: மொத்த அசெம்பளி மெம்பர்கள்: 224. அதில் பி.ஜே.பி. 105, காங்கிரஸ் 79, ஜேடிஎஸ் 37, பி.எஸ்.பி 1, மற்றவர்கள் 2. காங்கிரசும் – ஜேடிஎஸ் இணைந்து பிஜேபியை ஆட்சி அமைக்க வரவிடாமல் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரினாலும், அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற நிலையில் பிஜேபியின் எடியுரப்பாவை முதன் மந்திரியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்திரவிட்டார். அதை காங்கிரஸ் – ஜேடிஎஸ். எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை இரவோடு இரவாக நாடி, உச்ச நீதிமன்றமும் இன்னும் 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்திரவிட்டவுடன், எடியுரப்பா சட்ட சபையில் ஒரு நீண்ட உரை நிகழ்த்தி நம்பிக்கை ஓட்டு எடுப்பதற்கு முன்பாகவே தமது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதன் பிறகு காங்கிரஸ் – ஜேடிஎஸ். கூட்டணி ஆட்சி எச்.டி.குமாரசாமி முதல்வர் – ஜி. பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். ஆனால் கூட்டணியில் ஒற்றுமை இல்லை. சித்தாராமையாவை காங்கிரஸ் ஒரங்கட்ட நினைப்பதாக ...

சந்திரயான் 2 – பாரத தேச இஸ்ரோவின் விண்ணுயரும் அபார சாதனை

Image
ஜூலை 22 – திங்கட்கிழமை – மதியம் 2.43 – என்பது இந்தியாவின் விண்வெளி ஆய்வின் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். அன்று தான் சந்திரனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 – எம்1 ராக்கெட் ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஸ்தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து சந்திரயான் – 2 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. சந்திரயான் – 2 விண்கலத்தின் மொத்த எடை 3850 கிலோ. அது 23 நாட்கள் குறைந்த பட்சமாக 170 கி.மீ. தூரத்திலும், அதிக பட்சமாக 39,120 கி.மீ. தூரத்திலும் புவி வட்டப்பாதையில் சுற்றி வரும். பின் நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு அந்த சந்திரயான் விண்கலம் மாறும். நிலவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் சந்திரயான் – 2 விண்கலம் இருக்கும் போது, அதிலிருந்து ‘லேண்டர்’ கருவி தனியே பிரிந்து, நிலவை நோக்கிச் செல்லும். அப்போது மணிக்கு 6,000 கி.மீ. வேகத்தில் செல்லும். தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, 48-வது நாளில், புவியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள நிலவின் தென் துருவ பகுதியில் ...

மோடியின் குரு பூர்ணிமாவில் குரு வந்தனம் – 16-07-2019

Image
மோடியின் குரு பூர்ணிமாவில் குரு வந்தனம் – 16-07-2019 த்துவைத மத உடுப்பி பேஜாவர் மட பீடாபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஸ்வேசா தீர்த்த ஸ்வாமிகளை டெல்லியில் உள்ள தமது இல்லத்திற்கு வரவழைத்து தமது குரு வந்தனத்தைச் செலுத்தி உள்ளார் பாதரப் பிரதமர் மோடி அவர்கள். அப்போது இரண்டு போட்டோப் படங்களை வெளியிட்டு, தமது டிவிட்டரில் இப்படி பதிவு செய்துள்ளார்: “குரு பூர்ணிமா என்பது ஒரு சிறப்பு தினம். அந்த சிறப்பு தினம் எனக்கு மேலும் சிறப்பாக அமைந்து விட்டது. இந்தப் புனிதமான குருபூர்ணிமா நாளில், ஸ்ரீ விஸ்வேஸ்வ தீர்த்த ஸ்வாமிகளுடன் நேரம் செலவிட்டதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். அவரின் அமுத மொழிகளையும், கருத்துக்களையும் கேட்டு அறிந்தது ஒரு மிகவும் பவ்வியமான அனுபவங்கள்’ வியாச பூர்ணிமா – புத்த பூர்ணிமா என்ற இந்த புனிதமான நாளில் மோடி அவர்கள் பாரத தேசத்தின் அனைத்து மக்களுக்கும் மேலும் மேலும் பல நன்மைகள் செய்து பரிபூர்ணமான அமைதியையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த ஆண்டவன் அவருக்கு அனைத்து ஆசிகளையும் அருள வேண்டுவோமாக. 

குரு பூர்ணிமா – 16-07-2019 & புத்த பூர்ணிமா – 16-07-2019

Image
குரு பூர்ணிமா – 16-07-2019 குரு பூர்ணிமா என்பது வியாச பூஜையைக் குறிக்கும். அந்த புன்னிய நாள் இந்த வருடம் 16-07-2019 செவ்வாய்க்கிழமை வந்துள்ளது. அந்த நாள் சாந்திரமானப்படி ஆஷாட பெளர்ணமி அன்று வரும். இந்த வருடத்தில் சந்திர கிரஹணமும் சேர்ந்து அந்த வியாசர் பிறந்த நன் நாளில் வந்துள்ளது, வெகு சிறப்பு என்று சொல்லப்படுகிறது. குரு என்ற சொல்லில் கு என்ற எழுத்திற்கு இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்ற எழுத்திற்கு போக்குபவர் என்றும் சம்ஸ்கிரதத்தில் அர்த்தம் சொல்வார்கள். ஆகையால், குருவையும், குருவுக்குக் குருவான மஹா குரு வியாசரையும் வணங்கினால் நமது இருளான அறியாமை அழிந்து, பகவான் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த நன் நாளில் ஒவ்வொரு இந்துவும் கல்விக்கண்களைத் திறந்த தமது குருவை நினைத்து வணங்குவதைக் கடமையாக உபதேசித்துள்ளனர். வியாசர் இந்து மதத்திற்கு மஹா குருவாக – மூல புருஷராக விளங்குகிறார். மஹாபாரத்தை எழுதிய வியாசர் கிருஷ்ண த்வைபாயண வியாசர் என்று புகழப்படுகிறார். ரிஷி பரசாரவிற்கும், அவரது மனைவி மீனவ குலத்தைச் சார்ந்த சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவராவார். குலத்திற்கும் குருஸ்தானத்த...

அத்திவரதர் வந்துவிட்டார் அனுப்பு: மணி முத்துஸ்வாமி & வி.எஸ். சீனிவாசன்

Image
28-ம் தேதி ஜூன் இரவு 12 மணிக்கு பணிகள் துவங்கின ! 12.10 மணிக்கு இரண்டாவது படி தொட்டவுடன் சேர் பகுதி தொடங்கியது , அவற்றை அகற்றி கொண்டே இருந்தோம் ! மணி 2 - 6 வது படி தாண்டியது , வரதரின் பொற்பாதம் தெரிந்தது ! அங்கு இருந்த 70 நபரும் வரதா , வரதா என கோஷம் எழுப்பினோம் ! 2.45 மணிக்கு அழகாய் தெரிந்தது வரதரின் முகம் ! பார்த்ததும் அனைவரும் புல்லரித்தது 3.15 மணிக்கு வரதர் வெளியே எடுக்கப்பட்டு , பக்தர்களுக்கு காட்சி அளித்தார்   கோயில் முழுவதும் CCTV கேமரா உள்ளதால் , வரதர் துணி சுத்தப்பட்டு வசந்த மண்டபம் எடுத்து செல்லப்பட்டார்   அங்கே 4 மணிக்கு திருமஞ்சணம் செய்ய பட்ட பிறவு அனைவரும் வெளியே வந்துவிட்டோம்   என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இது என்று கோயில் பட்டர் ஒருவர் நமக்கு கூறியது . . .  மூன்று நாட்கள் வரதரை புதுப்பித்தல் பணிகள் நடைபெறும் வரும் திங்கள் (01.07.2019) காலை 6 மணி முதல் அனைவரும் வரதரை தரிசனம் செய்யலாம் .

அமர்நாத் புனித பனி லிங்க தரிசன யாத்திரை

Image
புனித அமர்நாத் குகைக் கோயில் கிழக்கு காஷ்மீர் ஹிமாலய மலையில் 3,888 மீட்டர் உயரத்தில் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 141 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.   இயற்கையாக ஒவ்வொரு வருடமும் அந்தக் குகையில் பனிலிங்கம் உருவாகும். அதை ஒரு குறிப்பிட்ட நாட்களில் தான்   முன்பாகவே பதிவு செய்து அனுமதி வாங்கியவர்கள் தான் பனிலிங்கத்தைத் தரிசனம் செய்ய முடியும். ஒவ்வொரு வருடமும் தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கையும் நிச்சயம் செய்யப்படும். சென்ற வருடம் 2.85 லட்சம் பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்த வருடம் அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அமர்நாத் குகையை அடைவதற்கு இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று ஸ்ரீநகரில் இருக்கும் பால்டால் என்ற ஊரிலிருந்து நடைபாதையாக 14 கி.மீ. தூரம் சென்று அமர்நாத் குகையை அடையலாம். இது குறைந்த தூரம் உள்ள பாதை. இரண்டாவது பாதை பஹல்காம் என்ற ஊரிலிருந்து 45 கி.மீ. தூரப் பாதையாகும். இது அதிக தூரம் உள்ள பாதை. இந்த இரண்டு இடங்களிலிருந்தும் ஹெலிக்காப்டர் வசதிகளும் பக்...