Posts

Showing posts from August, 2018

வறுமை தேசமான ருவாண்டா இனி சுபீட்சமாகும்

Image
ஆப்ரிக்கா நாடான ருவாண்டாவில் இன்று மோடி பால் ககாமே உருவாக்கிய கிரிங்கா என்கிற வீட்டுக்கு ஒரு பசு என்கிற திட்டத்திற்கு 200 இந்திய பசுக்களை ருவாண்டாவின் புகசெரா மாவட்டத்தில் உள்ள ர்வெரு கிராமத்தில் வாழும் ருவாண்டா மக்களுக்கு இந்தியர்களின் சார்பாக பரிசளித்தார். என்னடா..வறுமையில் வாழும் ஒரு ஆப்பிரிக்கா நாட்டுக்கு இந்தியா பசுக்களை தானமாக வழங்குகிறதே! இது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அடிப்படை அல்லவா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஒரு காலத்தில் ருவாண்டா மக்களை இந்த பசுக்கள் தான் சமுதாயத்தில் உயந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் நிலையை நிர்ணயித்து வந்தது. காலம் காலமாகவே ருவாண்டாவின் இனங்களான துட்சிக்களும் ஹூட்டுக்களும் தவாக்களும் சகோதரர்களாகவே ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களை துட்சிகள் என்றே அழைத்து வந்தார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மக்களை ஹூட்டுக்கள் என்று அழைத்து வந்தார்கள். பண்ணை அடிமைகளாக இருந்தவர்களை தவாக்கள் என்று அழைத்தார்கள். ஒரு வீட்டில் பத்து பசுக்கள் இருந்தால் அவர்களை துட்சுக்கள் என்றார்கள்., அதாவது அவர்கள் சமூகத்தில் உ...

89-வது வயதில் காலமான சோமநாத் சாட்டர்ஜி – 13-08-2018

Image
பிறப்பு: 25-07-1929 – அஸ்ஸாமில் உள்ள டெஸ்பூரின் பிறந்தார். அவர் சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டதாரி. அரசியலில் ஈடுபடுவதற்கு முன் அவர் கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் அட்வகேட்டாகப் பணியாற்றினார். ஜமீந்தார் பரம்பரையில் வந்த ரேணு சவுத்திரியை 1950-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அவரது மகனும் கல்கத்தா உயர் நீதி மன்றத்தின் அட்வகேட். 10 முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர். 2004-ம் ஆண்டு 14வது லோக் சபாவில் அவர் சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வானார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை ஜூலை 2008-ம் வருடம் சி.பி.ஐ.எம். திரும்பப் பெற்றது. ஆனால், வலது சாரி பி.ஜே.பி.யும் எதிர்ப்பதால் கட்சியின் உத்திரவையும் மீறி காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தார். காங்கிரஸ் ஆட்சியும் பிழைத்தது. ஆனால், சோமாநாதை கட்சியை விட்டு 23-07-2008 அன்று விலக்கியது.  ‘சபாநாயகராக அரசியல் சாதனத்தின் படி சோமநாத் செயல்பட்டதாகச் சொன்னாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டம் அதை விட மேலானது’ என்று வங்காள கட்சியின் செயலாளர் பிமன் போஸ் அறிக்கை விட்டார். இது சோமநாத்தை ...

94-வது வயதில் கலைஞர் மறைவு – 07-08-2018

Image
பிறப்பு: 03-06-1924 – திருக்குவளை, நாகப்பட்டினம் இறப்பு: 07-08-2018 – சென்னை பள்ளி வாழ்க்கையிலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டதால், பள்ளியின் இறுதித் தேர்வில் மூன்று முறை எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. அடுத்து எழுதும் வாய்ப்பு இல்லை என்பதால், ‘தொல்லை விட்டது’ என்று நிம்மதியானார். மூன்றாவது முறையும் தோற்ற போது, அதை வீட்டில் சொல்லத் தைரியம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார். ஆனால் சில நண்பர்கள் உதவியால், அவரை வீட்டில் விட்டனர். தேர்வில் தாம் வெற்றி பெற்றதாகவே பெற்றோரிடம் கூறி ஓரிரண்டு ஆண்டுகள் சமாளித்தார். 72 படங்களில் பணியாற்றி உள்ளார். – 1947-லிருந்து 2011 ஆண்டு வரை. தயாரித்த படங்கள் – 25 கலைஞர் ஆனது எப்படி? எம்.ஆர்.ராதாவுக்காக கருணாநிதி எழுதி தந்த நாடகம் தான் தூக்கு மேடை. இது முற்றிலும் பகுத்தறிவு பிரசாரமாக அமைந்தது. இந்த நாடகத்தில் பாண்டியன் வேடத்தில் கருணாநிதி நடித்தார். நாடக விளம்பரத்தில் ‘அறிஞர் கருணாநிதி’ என்று இருந்தது. ‘அறிஞர் பட்டம் அண்ணாவுக்கு மட்டுமே பொருந்தும். அதை எடுத்தால் தான் நடிப்...

அடல் பிஹாரி வாஜ்பாய் அமரரானார்

Image
13 நாட்கள், 13 மாதங்கள், பிறகு 5 ஆண்டுகள் என்று மும்முறை பாரதப் பிரதமராகப் பதவி வகித்தவர். எல்லாம் பல கட்சிகளின் ஆதரவைப் பெற்றுத் தான் அவர் பிரதமராக ஆட்சி செய்தார். தனித்துப் பெரும்பான்மை பெற்றுப் பதவியிலிருந்திருந்தால், அவர் இந்தியாவை மிகப் பெரும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருப்பார்.              தங்க நாற்கரைச் சாலைத் திட்டத்தைப் போல் இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருப்பார். அவரது ஆட்சியில் தான் டெலிபோன் அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்கப் பட்டது. மொரார்ஜீ தேசாய் ஜனதா கட்சியின் ஆட்சியில் வாஜ்பாய் வெளிஉறவு மந்திரியாக யு.என். பொது அசம்பிளியில் முதல் முறையாக ஹிந்தி மொழி உரை(1977), போக்ரன் அணு ஆயுத சோதனை (மே 1998), பாகிஸ்தானுக்கு பஸ் பயணம் (பிப்ரவரி, 1999), லாஹூர் ஒப்பந்தம் (பிப்ரவரி 1999), கார்கில் யுத்தம் (மே – ஜூன் 1999), எதிர்கட்சித் தலைவராக இருப்பினும் பாரதப் பிரதமராக இருந்த பி.வி. ரசிம்ம ராவ் வாஜ்பாயை காஷ்மீர் பிர...