Posts

Showing posts from November, 2017

நியுசிலாந்து வெளியிட்ட தபால் தலை

Image

தேசிய பத்திரிகை நாள் – 16-11-2017

Image
துக்ளப் பத்திரிகையில் அதன் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி – ‘பத்திரிகை உலகில் நடுநிலை, சுதந்திரம், துணிச்சல் – எது முக்கியம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியதைப் படித்ததின் தாக்கத்தில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகைக்கு சுதந்திரமான சிந்தனை அவசியம். அந்த சிந்தனை கட்டுரையாக வெளியிடுவதற்கு துணிச்சல் அதைவிட அவசியம். இதை விடுத்து, நடுநிலை என்று முடிவெடுத்து பிரச்சனையிலிருந்து ஒதுங்கி இருப்பது மிகவும் கேவலமாகும். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபர் ராம்நாத் கோயங்கா காங்கிரஸ் அபிமானியாக இருந்த சமயம். இருப்பினும், அவர் சுதந்திரமான சிந்தனையுடன், துணிச்சலாக தம் கருத்தை எந்த உயர் பதவியில் இருப்பவர்களிடம் நேரடியாக எந்தவிதமான தயக்கமோ, ஒளிவு மறைவோ இல்லாமல் வெளியிடும் தீரமும் கொண்டவர். 1969-ல் காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி உடைத்த போது, அவரைச் சந்தித்து, ‘நீங்கள் செய்தது மாபெரும் தவறு’ என்று கோயங்கா கூறியதற்கு, இந்திரா காந்தி அவரிடம் ‘நீங்கள் என்னுடைய நண்பரா, எதிரியா?’ என்றதற்கு, ‘அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று பதில் உரைத்துள்ளார். இது தான் சுதந்திரமான ச...

திண்ணைக் கச்சேரி - ராகுல் காந்தியின் நன்மதிப்பு உயர எடுக்கும் முயற்சிகள்

Image
திண்ணைக் கச்சேரியின் மூல கதாநயகன் உயர்திரு ராகுல் காந்தியாகும். அவர் காங்கிரசின் தற்போதைய துணைத் தலைவரும், இன்னும் சில நாட்களில் தமது அன்னை சோனியாவின் காங்கிரஸ் தலைமைப் பதவியை ஏற்கப்போகும் நேரத்தில் குஜராத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. ராகுல் இப்போதெல்லாம் PIDI என்று நாமகரணம் சூட்டப்பட்ட தமது வளர்ப்பு அயல் நாட்டு நாயை தனது – நண்பன், தத்துவஞானி, வழிகாட்டி – யாக ஏற்றுக் கொண்டுள்ள பிறகு, ராகுலின் பேச்சு நாயைப் போல் ‘லொள் லொள்’ என்ற அளவில் கேலிக் கூத்தாகி விட்டது. பப்பு – யுவராஜா – என்ற பெயரில் வலம் வரும் ராகுல் குஜராத் தேர்தல் களத்தில் பேசும் பேச்சிலும் முதிர்ச்சியைக் காண முடியவில்லை. இருப்பினும், வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் ஆகியவர்களின் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்போமாக. பொதுஜனம்: ராகுல் PIDI-ன் பிடியில் எப்போது அகப்பட்டுக் கொண்டு விட்டாரோ, அப்போதே அவர் அரசியல் அரிச்சுவடி கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் என்றே தோன்றுகிறது. “சமீபத்தில் தமது ட்வீட்களை யார் எழுதுகிறார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். என் அபீமான வளர்ப்பு நாயான PIDI தான் எழுதுகிறது. ட்வீ...

ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து

Image
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அஷ்வினி உபாத்யாயா, உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார். அந்த மனுவின் சாராம்சம்: 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜம்மு-காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், யூனியன் பிரதேசம் லட்சத்தீவு – ஆகிய இடங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இது வரை, ஹிந்து மாநிலங்களில், ஹிந்துக்களை சிறுபான்மையினராக பதிவு செய்ய வில்லை. எனவே ஏழு மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களில் வசிக்கும் ஹிந்துக்களை, சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டும். அப்போது தான், அவர்களால் சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை பெற முடியும், இந்த 8 இடங்களிலும், ஹிந்துக்களின் சிறுபான்மை உரிமைகள் அளிக்கப்படாமல், அரசியல் சாசனம் ஆர்டிகிள் 25 லிருந்து 30 வரை உள்ள அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆகையால் தேசிய சிறுபான்மை கமிஷன் சட்டம் பகுதி 2 ( C ) – ன் கீழ் ஹிந்துக்களையும் ‘சிறுபான்மையினர்’ என்று அறிவிக்க உத்தி...

இந்தியாவின் இதயக் குரல்

Image
இங்கிலாந்து பார்லிமெண்ட் சபையில் ஒலித்த இந்தியக் குரல்  இந்திய ராணுவத்தின் இதயக் குரலாகவே ஒலித்து, ஒளிர்ந்தது என்றால் அது மிகையாகாது.  ஒட்டு மொத்த இந்திய தேசிய உணர்வு கொண்ட அத்தனை இந்தியர்களின் இதயக் குரலாக மேஜர் கவுரவ் ஆர்யா நிகழ்த்திய  இங்கிலாந்து பார்லிமெண்ட்டின் உருக்கமான பேச்சு நமது இந்தியாவின் மதிப்பையும், இந்திய ராணுவத்தின் கவுரவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஜம்மூ – காஷ்மீர் இந்தியா உடன் இணைந்தநாள் 26-10-1947 ஆகும். அன்று தான் ஜம்மூ - காஷ்மீர் ‘இந்தியாவுடன் இணைந்த உடன்படிக்கை’யில் மஹாராஜா ஹரி சிங் கை எழுத்திட்டார். அந்தச் சரித்திரமான நாளின் 70-வது வருடத்தை நினைவு கூறும் விதமாக நவம்பர் முதல் வாரத்தில் யு.கே.பார்லிமெண்ட் வளாகத்தில் மூன்றாவது வருடம் கொண்டாடப்பட்டது. அதில் மேஜர் கவுரவ் ஆர்யா – ராணுவ வீரரும், 17-வது குமாயுன் ரிஜிமெண்டில் இந்திய ராணுவப்படையில் பணிபுரிந்தவருமானவரும் – சிறப்புரை ஆற்றினார். அவரது பேச்சைத் தான் “இந்தியாவின் இதயக் குரல்” என்று குறிப்பிட்டோம். அவரது உரையினை இங்கே படிக்கவும். அதன் வீடியோ இணைப்பு இதோ – லிங்க் ஒன...

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 81-வது நினவு நாள் – 18-11-2017

Image

சிவன் அருள் பெற ஏற்றுவோம் கார்த்திகை தீபம்

Image
கார்த்திகை தீபம் - 02-12-2017 கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய நாள் தான் கார்த்திகைத் திருவிழாவாகும். அந்த நாளில் சிவபிரான் சோதிச் சொரூபமாக அனைவருக்கும் காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம். அதை நினைவு கூறும் வகையில் தீபங்களைக் கோயில்களிலும், வீடுகளிலும் ஏற்றி சிவனை வழிபடுவார்கள். சிவ பெருமான் ஜோதிச் சொரூபமாகக் தோன்ற, அவரது அடிமுடியைக் கண்டு பிடிக்க விஷ்ணு வராக உருவமெடுத்து சிவச் ஜோதியின் அடியைக் கண்டு பிடிக்கவும், பிரம்மா அன்னமாக சிவச் ஜோதியின் முடியைக் கண்டு பிடிக்கவும் முயன்று தோல்வியுற்று, சிவனை முழுமுதற்கடவுளாக ஏற்றுக் கொண்ட தினம் தான் திருக்கார்த்திகை தினமாகும். அந்த தினத்தில் விஷ்ணுவும் – பிரம்மாவும் கண்ட சிவச் ஜோதியை அனைவரும் காண அருள் பாளிக்க வேண்டியதின் காரணமாக அந்த திருக்கார்த்திகை நாளில் சிவன் ஜோதிச் சொரூபமாக வணங்குவதற்கு தீப விளக்குகள் ஏற்றி வழிபடும் வழக்கம் தமிழ் மக்களிடம் உண்டானது.   கார்த்திகை   என்பது 27 நட்சத்திரங்களில் மூன்றாவதாக வரும் நட்சத்திரமா...