Posts

Showing posts from October, 2017

கருப்புப் பண பூதத்தின் விஸ்வரூபம்

Image
(இந்த கட்டுரை 2011 ஆண்டு மார்ச் மாதம் எழுதியது என்பதை வாசகர்கள் மனத்தில் கொண்டு படிக்க வேண்டுகிறேன். தற்போதையை மோடி அரசு இந்தக் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. அதில் வெற்றி அடைந்தால் இந்தியாவில் இருக்கும் கருப்பு முதலைகளுக்குப் பாடமாகவும், இனியும் கருப்புப் பணம் பதுக்குபவர்களுக்கு அச்சமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். காலம் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். - ஆசிரியர்) சுவிட்சர்லாந்து வங்கிகள், லிக்டென்ஸ்டெயின் நாட்டு வங்கிகள், அண்டோரா நாட்டு வங்கிகள், மோனோக்கோ நாட்டு வங்கிகள் தான் நமது இந்தியாவின் கருப்புப் பணம் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய வங்கிகளாகும். மொரிசியஸ் மற்றும் சில ஆசியத் தீவிகளில் உள்ள மற்ற சில வங்கிகளும் உண்டு. இதில் சுவிட்ட்ர்லாந்து வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் மட்டும் 1500 பில்லியன் டாலர். அப்படி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை அந்த வங்கி இந்திய அரசாங்கம் முறையாகக் கேட்டால், கொடுக்கத் தயார் என்று சொல்லியும் நமது மத்திய அரசாங்கம் மெளனம் சாதிக்கிறது. 1500 பில்லியன் டாலர் என்றால் அதன் பரிணாமத்தைப் புர...

Bail Rahul Fail – பெயில் ராகுல் ஃபெயில்

Image
செயற்கை அறிவை ஆராய சமீபத்தில் நார்வே சென்ற பிறகு, அதைப் பற்றி மேலும் அறிய யு.எஸ்.யுனிவர்சிட்டிக்கு விஜயம் செய்து அங்குள்ள பேராசிரியர்கள் – மாணவர்கள் ஆகியவர்களுடன் ‘இந்தியாவின் வயது 70 – முன்னேற தேர்வு செய்யும் பாதை’ என்ற தலைப்பில் பேசி உள்ளார். சமீபத்திய ராகுலின் மனநிலை அவரது பேச்சில் எதிரொலிக்கிறது. ‘குடும்ப அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது. இதற்கு காங்கிரஸ் மட்டும் குடும்ப அரசியல் செய்கிறது என்று இல்லை. முலாம் சிங்கின் கட்சி அகிலேஷைத் தலைவராக்கியது, லல்லு பிரசாத் யாதவ் தம் இரு மகன் களையும் மந்திரிகளாகினார், டி.எம்.கே.வில் கருணாநிதியும் ஸ்டாலினைத் தான் தலைவராக்கி உள்ளார். இதே போல் சினிமா – வியாபாரம் போன்றவற்றிலும் நடக்கிறது’ என்று பகர்ந்த ராகுல் இது இந்தியாவின் கலாச்சாரமப்பா – இது யாராலேயும் தடுக்க முடியாது – என்று வாரிசு அரசியலை ஆதரிப்பதாகத் தெரிகிறது. “இது எவ்வளவு தூரத்திற்கு ஆரோக்கியமான சுதந்திர எண்ணங்களுக்கு வழிவிடும். இது இந்தியாவிற்கு நல்லதா?” என்ற விவாதம் எழத்தான் செய்யும். மேலும் பி.ஜே.பி., கம்யூனிஸ்ட...

தலித் சிறுவனின் தலை குனியவைக்கும் தவறான செயல்

லிம்போதரா என்பது குஜராத் காந்திநகர் அருகில் உள்ள ஒரு கிராமம். அதில் வசிக்கும் 17-வயது தலித்தை உயர் ஜாதியினர் மீசை வைத்துள்ளான் என்பதால், அவனைக் குத்தி உள்ளனர் என்று செய்தி காட்டுத் தீ போல் பரவி அதுவும் பரவலாக எப்போதும் போல் இதற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்? மோடியின் குஜராத்தில் தலித் தாக்கப்படுகிறார்கள் – அவர்களுக்குப் பாதுகாப்பே இல்லை – என்ற அளவில் பல இடது சாரிகள் சாடினார்கள். அந்த தலித் வாலிபனின் முதுகில் பல தையல்கள் போடப் பட்டன என்றும், இதற்கு முன்னாலும் அவன் இதோ போல் தாக்கப்பட்டான் என்றும் அந்த தலித்தின் குடும்பத்தினர் குற்றங்கள் சாட்டினர். அதே கிராமத்தில் இது மூன்றாவது சம்பவத்தால், அங்கு இனக் கலவரத்தைத் தடுக்க போலீஸ் காவல் போடப்பட்டது. இதற்காக குஜராத் அரசின் உள்துறை அமைச்சரைப் பதவி விலகமும் போராட்டம் நடந்தது. ஆனால் 3 நாட்களுக்குப் பிறகு, போலீசுக்கு இந்த சம்பவம் அனைத்தும் போலி என்றும், இது மிகவும் பலம் வாய்ந்த மரபுசாரா இயக்கத்தின் தூண்டுதலின் பேரிலும், விளம்பரம் கிடைக்கும் ஆர்வத்திலும், அந்த தாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட தலித் தெரிவித்தான்.   v   அந்த தாக்...

டெல்லி சுப்ரீம் கோர்டின் பட்டாசு விற்பனைத் தடை உத்திரவு

Image
பவித்திரன் பேட்டி: சமீபத்தில் டெல்லி சுப்ரீம் கோர்டின் பட்டாசு விற்பனைத் தடை உத்திரவு பற்றிய கருத்தினை நமது பல வாசகர்களிடம் கேட்டறிந்தோம். இதில் பங்கேற்றோர் விவரம்: எஸ். கோபாலகிருஷ்ணன், எஸ். ஷங்கர், பி.ஆறுமுகம், வி.எஸ். விஸ்வநாதன், ஹரி கெளசிக், கே.சந்துரு, கமலா கெளசிக், வத்ஸலா சங்கரன், கே.ஷங்கர் ஆகிய 9 பேர்கள். பட்டாசு விற்பனைத் தடை, எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக நியமனம், எல்லாப் பெண்களையும் ஐயப்ப்பன் கோயிலில் அனுமதிப்பது ஆகியவைகளைப் பற்றிய கருத்துக்கள் கேட்கப்பட்டு இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. எல்லோரிடமும் பட்டாசு விற்பனைத் தடை பற்றிக் கேட்டாலும், மற்ற இரண்டு பற்றியும் அனைத்துப் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட வில்லை. ஆகையால் கேட்கப்பட்டவர்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.          பட்டாசு விற்பனைத் தடை: .        1.  சரியான நடவடிக்கை: கோபாலகிருஷ்ணன், ஹரி கெளசிக், கமலா கெளசிக், வத்ஸலா சங்கரன், கே. ஷங்கர் (5)   2.    தவறான நடவடிக்கை: எஸ். ஷங்கர், பி.ஆறுமுக...