பூமித்தாயின் பசுமைப் புரட்சிக் குரல்
பூமித்தாயின் பசுமைப் புரட்சிக் குரல்
ஆக்கம் - எஸ். சங்கரன்.
பூமியின் பசுமை
மரங்கள் காடுகள் மலைகள் !
கோடரி - கொலைவெறி வெடிகள்
பூமிப் பாஞ்சாலையின்
துகிலுரியும் துச்சானக் கூட்டங்கள் !
கைகளை உயர்த்தி
பூமிப் பாஞ்சாலி
கதறுகிறாள் !
கலியுகக் கண்ணன்கள்
நாம் -
கை கொடுப்போமோ ?
காவு கொடுப்போமோ ?
காலம் காத்திருக்காது -
கடந்து விட்டால் -
பூமி பொங்கி எழும் -
பொசிங்கிப்போவோம்!
கலியுகக் கண்ணன்கள்
கை கொடுப்பார்கள் -
பசுமைப் புடவையில்
பூமித்தாய் பூரிப்பாள்.
Comments