Posts

Showing posts from June, 2025

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி விழா சோக விழாவானது

Image
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (( RCB) ஜூன் 3- ல் அமாதாமாத் ஸ்டேடியத்தில் நடந்த கிரிக்கெட் விளையாட்டில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வென்றது. இது பெங்களூர் அணிக்கு பல வருடங்களாக கிடைக்காத வெற்றிக் கோப்பை என்பதால் ஜூன் 3- ல் இருந்தே பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் பங்களூர் தெருக்களில் வெடி வெடித்தும் , இரு சக்கர வாகனங்களில் பலர் வேகமாக வலம் வந்தும் , ஆர்சிபியின் கொடிகளை எந்தியும் அந்த வெற்றியை வெறித்தனமாகக் கொண்டாடினார்கள். ஆர்சிபியும் அந்த வெற்றிக் களிப்பில் அமாதாபாத்திலேயே ஜூன் 3- ல் ' ஜூன் 4- ல் பங்களூரில் வெற்றி விழா நடக்கும் ' என்று ட்வீட் செய்துள்ளது. இந்தச் செய்தியும் பங்களூரில் தொடர்ந்து இடைவிடாமல் தெருக்களில் கொண்டாட்டமாடி குதூகலிக்கச் செய்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை.   இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் , அவரது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகிய இருவர்களும் அந்த வெற்றி பெற்ற கிரிகெட் வீரர்களுக்கு சிறப்பான முறையில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா விதன் செளதா வளாகத்தில்  ஜூன் 3- ல் நடக்கும் என்று அறிவித்து , கிரிக்கட் விளையாட்டு ரசிகர்களுக்கு ட்வீட் மூலம் க...

இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய ஏர் இந்தியா விபத்து

Image
  ஏர் இந்தியா அகமதாபாத்-லண்டன் விமானம் 171 மதியம் 1.38 ஒடு தளத்தில் இருந்து பறக்க, 5 நிமிட த்திலேயே அதாவது 1.43 மணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.   அந்த விமானத்தில் 242 பயணிகள், 12 விமானப் பணியாளர்கள் இருந்துள்ளனர்.   விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியைத் தவிர மற்ற 253 பேர்களும் தீயில் கருகி உருக்குலைந்து உயிர் நீத்துள்ளனர் . 11 ஏ சீட்டில் பயணம் செய்த ஒரு பயணி மட்டும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தது தெய்வ சங்கலபமே .  அந்த விமானம் துரதிஷ்டவசமாக அகமதாபாத்தில் உள்ள ஒரு தங்கும் மருத்துவர் விடுதியில் மோதியதால், அதனால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மெஸ் உதவியாளர்கள் என்று உயிர் இழந்துள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர்.   இந்த விபத்திற்குக் காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.   பைலட் தவறு என்றும் , இயந்திரக கோளாறு என்றும் , பறவை விமானத்தில் இடித்ததால் என்றும் , இயந்திரக் கோளாறு உள்ளது என்று பைலட் குறை சொன்னதை அலட்ச்சியம் செய்த தாகவும் பல கோணங்களில் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர் .  கருப்புப் பெட்டி , வாய்ஸ் ரிகார்டர் - கிடைத்து வி...

மோடி சர்காரின் ரயில் பாதை அமைப்பில் ஒரு ஹிமாலய வெற்றி

Image
22-ம் தேதி மே மாதம் 2025 வருடம்  .........   அன்று ராஜஸ்​தானின் தேஷ்நோக் ரயில் நிலையத்​தில் நாடு முழு​வதும் ரூ. 1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 103 அமிர்த ரயில் நிலையங்​களை பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக திறந்து வைத்தார்.   ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்​கான வசதியை மேம்​படுத்த கடந்த 2023- ம் ஆண்டு ஆகஸ்ட் 6- ம் தேதி அமிர்த ரயில் நிலை​யம் திட்​டம் அறி​முகம் செய்யப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் நாடு முழு​வதும் 1,318 ரயில் நிலை​யங்​களை உலகத் தரத்துக்கு உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது.   இரண்டு ஆண்டுக்களுக்குள்ளாகவே இது வரை 161 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது ஒரு பெரிய சாதனையாகும் . இது தவிர புதிய ரயில் தடங்கள் , புதிய நவீன வசதிகளுடன் கொண்ட ரயில் பெட்டிகள் , ரயில் இன்ஜின்கள் , பயணம் செய்ய பல வசதிகள் என்று ரயில் பயணம் மிகவும் இனிமையானதாக ஆக்கப்பட்டுள்ளது .  முதல் ​கட்​ட​மாக கடந்த 2023- ம் ஆண்​டில் 58 ரயில் நிலை​யங்​கள் உலகத் தரத்தில் மேம்​படுத்​தப்​பட்​டன.   ...

சிங்கிகுளம் அருள் மிகு ஸ்ரீ ஆவுடை அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலய கும்பாவிஷேகம்

Image
  சிங்கிகுளம் அருள் மிகு ஸ்ரீ ஆவுடை அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலய ஜீர்ணோத்தாரண  அஷ்டபந்தன மஹா கும்பாவிஷேகம் நாள்: 08 - 06 - 2025 - ஞாயிற்றுக் கிழமை  திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டம் சிங்கிகுளம் கிராமம் அருள்தரும் ஸ்ரீ ஆவுடை அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு அன்று காலை 04.00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் , வேதிகா அர்ச்சனை வேதபாராயணம் , ஹோமங்கள் , ஸ்பர்ஸாஹுதி ப்ராணபிரதிஷ்டை ,  ரஷாபந்தனம் , பூர்ணாஹீதி , யாத்ராஅனுக்ஞை ,   யாராதானம் , கடயாத்ரா.   07.00 மணிக்கு கும்பம் எழுந்ருளி சுவாமி , அம்பாள் , விமானம் , சன்னதிகள் மற்ற சன்னதிகள் மஹா அபிஷேகமும் , ஆராதானையும் , அர்ச்சனையும் , மஹா தீபாராதனையும் அதனை தொடர்ந்து  அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாலை பிரதோஷ வழிபாடும் அதனை தொடந்து ஸ்ரீஆவுடை அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கல்யாண வைபவம்  வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு அன்னதானமும் வழங்கப்பட்டது. சிங்குளம் கோயிலுடன் அருகில் வரதராஜ...