சமத்துவ சிலையாக பிரமாண்ட ராமானுஜர் ஐம்பொன் சிலை திறப்பு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் முச்சிந்தலில் ஸ்ரீராமானுஜருக்கு ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி பிப்ரவரி 5-ம் தேதி 2022 பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை நன்நாளில் திறந்து வைத்தார். 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு 500 டன் எடையில் திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
‘ஓம் நமோ நாராயணா’ என்ற 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீது ஏறி
அனைவருக்கும் போதித்தவர் ராமானுஜர்.
வேதத்தை அழகு
தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலை நாட்டியவர். தீண்டாமையை
ஒழிக்க வித்திட்டவர்.
இவர் வாழ்ந்து
முடிந்து 1000 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி,
அவருக்கு தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில்
இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ராமாநகரில் இந்த ஐம்பொன்னாலான சமத்துவ சிலை
நிறுவப்பட்டுள்ளது.
அதன் சிறப்பு இங்கே பட்டியல் இடம்பட்டுள்ளது.
Comments