சமத்துவ சிலையாக பிரமாண்ட ராமானுஜர் ஐம்பொன் சிலை திறப்பு

 


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் முச்சிந்தலில் ஸ்ரீராமானுஜருக்கு ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி பிப்ரவரி 5-ம் தேதி 2022 பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை நன்நாளில் திறந்து வைத்தார். 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு 500 டன் எடையில் திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 ‘ஓம் நமோ நாராயணா’ என்ற 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீது ஏறி அனைவருக்கும் போதித்தவர் ராமானுஜர்.

வேதத்தை அழகு தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலை நாட்டியவர். தீண்டாமையை ஒழிக்க வித்திட்டவர்.

இவர் வாழ்ந்து முடிந்து 1000 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அவருக்கு தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ராமாநகரில் இந்த  ஐம்பொன்னாலான சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

அதன் சிறப்பு இங்கே பட்டியல் இடம்பட்டுள்ளது.

 * இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 * சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

 * தாமரை மலர் பீடம் மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 * கோயிலுக்குள் 200 கிலோ எடையில் தங்க சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 * 108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே யானைகள் தாங்கி பிடிக்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்மபீடம் (தாமரை) 2 அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது.

 * இந்த 2 அடுக்குகளிலும் 18 சங்கு, 18 சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன.

 * பீடம் 108 அடி, சிலை 108 அடி என 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, உலகின் 2வது மிகப்பெரிய ஐம்பொன் சிலையாகும்.

 * சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்த படியாக ராமானுஜரின் சிலை உயர்ந்த சிலையாக கருதப்படுகிறது.

 * இங்கு செயற்கை நீர் வீழ்ச்சி தூண், ஆன்மிக நூலகம், உணவகம், தியான வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது.

 

 




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017