Posts

Showing posts from September, 2020

மோடியின் சாதனைகளும், உரைகளும்

Image
 

மோடியின் 70-வது வருடப் பிறந்த நாள் – 17 - 09 – 2020 (வியாழக்கிழமை)

Image
  மோடி அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக பதவியில் இருந்து பல அற்புதமான நல்ல திட்டங்களையும், நீண்டகாலம் பெயர் சொல்லும் கட்டுமானப்பணிகளையும், எல்லைப் பாதுகாப்பில் புதிய தீர்க்கமான உத்திகளை மேற்கொண்டு சீனா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அத்துமீறல்களை ராணுவம் – பேச்சு வார்த்தகள் என்று இரு முனைச் சாதுரியத்தால் மக்களின் நன் மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளார். அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்ரேலியா, இஸ்ரேல், எமிரேட், சவுதி அரேபியா போன்ற பல நாடுகள் இந்தியாவின் எல்லையைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. உண்மையிலே சீனாவும், பாகிஸ்தானும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவே கருத இடம் உண்டு. அதற்கு முழு முதற் காரணம் நமது பாரதப்பிரதமர் மோடி அவர்கள் தான் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். இந்தக் கொரோனா காலத்திலும், பிரான்ஸிலிருந்து ரஃபேல் ஐந்து போர்விமானங்கள் இந்தியாவிற்கு வந்து அவைகள் நமது ராணுவ விமானப் படையில் சேர்க்கப்பட்டுவிட்டன. வரும் பனிகாலத்திற்கு ஏற்ற உடைகள், உணவுகள் – போதுமான அளவுக்கு நமது வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. காலம் காலமாக பிஜேபி ...

மத்திய இணை அமைச்சர் ஹர்ஷவர்தனின் தாய் மரணம்.

Image
  மத்திய இணை அமைச்சர் ஹர்ஷவர்தனின் தாய் மரணம். தன் தாயின் கண்களையும், உடலையும் மருத்துவ மனைக்குத் ஆராய்ச்சிக்காக தானம் செய்துள்ளார்.  தாய்க்கு அஞ்சலி செய்யும் விதமாக மலர் வலையமும், அமைச்சர் ஹர்ஷவர்த்தனைப் பாராட்டி ஒரு பூச்செண்டும் வாய்மை அளிக்கிறது. அவரது தாயின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம்.  

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா – கொடியேற்றம் – 06-09-2020 (ஞாயிற்றுக் கிழமை)

Image
  திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா – கொடியேற்றம் – 06-09-2020 (ஞாயிற்றுக் கிழமை) முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா 6-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி முடிவடைகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறும். சுவாமி வீதி உலா நடைபெறாது. விழாவில் பங்கேற்க பக்தர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் 10-ம் திருநாள் தேரோட்டம் நடைபெறாது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முதல் நாள் கொடியேற்றம், 5-ம் திருநாள் குடவரைவாயில் தீபாராதனை, 7 மற்றும் 8-ம் திருவிழா சுவாமி சண்முகர் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் பக்தர்கள் வசதிக்காக வலைதளத்தில் (யூடியூப்) நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. https://youtu.be/MjiiXtXHNVI      என்ற யூ டியூப் முகவரியில் நேரடியாக பார்க்கலாம். முருகன் அருளால் கொரோனா வியாதியிலிருந்து அகில உலகமே முற்றிலும் குணமடைய நாம் வேண்டுகிறோம...

தாவோயிசம் - கன்பூஸியனிசம் – அலசுவோம் வாரீர்!

Image
  வோ சூ – கி.மு 571- 447 – 124 வருடங்கள் – கன்பூஷியஸ் – கி.மு. 557 – 479 – 78 வருடங்கள் Michael Quesada என்பவரின் ப்ளாக்கை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை. மூல க்கட்டுரையை மேலே உள்ளதை சொடுக்கிப் படிக்கவும். தாவோயிசம், கன்பூசியனிசம்   என்ற இரண்டும் கி.மு 6-வது நூற்றாண்டில் உருவாகிய சீனத் தத்துவமாகும்.   தாவோயிசம் என்பது லாவோ சூ என்ற தத்துவ ஞானியாலும், கன்பூசியனிசம் என்பது கோங்க் குய் என்று பிரபலமில்லாத பெயரில் அழைக்கப்படும் மிகவும் பிரபலமான பெயர் கொண்ட கன்பூசியஸ் என்ற தத்துவ ஞானியாலும் ஸ்தாபனம் செய்யப்பட்டது. லாவோ சூவும், கன்பூசியஸும் சமகாலத்தவர்கள். லாவோ சூ கன்பூசியஸுக்கு 14 வயது மூத்தவர்.   முதலில் மூத்தவரான லாவோ சூவைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.     லாவோ சூ என்ற பெயர் ‘வயதான குரு’ அல்லது ‘வயதான பையன்’ என்று பொருள்படும். அவரது வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியவில்லை. ஏன், அவரே ஒரு கற்பனைப் புருஷர் என்று கூட சிலர் நம்புகிறார்கள். அவர் கி.மு. 571 ஆண்டு பிறக்கும் போதே வயதான கிழவராக நரை முடியுடன் மிகுந்த ஞானம் கொண்டவராகப் பிறந்தார் என்று ஒரு கட்ட...

யின் –யாங்க் (Yin Yang) – சீன தத்துவம்

Image
  யின் – யாங்க் தத்துவம் பயங்கரமான குழப்பத்திலிருந்து இந்த பிரபஞ்சம் முதன் முதலில் உருவான போது பிறந்தது என்று சீன இதிகாசம் மற்றும் சீன மதம் ஆகியவைகள் சொல்கிறது.   அந்த குழப்பம் நீங்க பூமியின் மையப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த யின்-யாங்க் என்ற இரு சக்திகள் உருவானதாக நம்பப்படுகிறது. அந்த சிருஷ்டியில், யின்-யாங்க் மூலம் உலகத்தின் முதல் மனிதனான ‘பாங்கு’ என்பவர் – பிரபஞ்ச முட்டையிலிருந்து உருவானார். அத்துடன் ஃபுக்சி, நுவா மற்றும் ஷெனாங் என்ற மூன்று கடவுள்கள் முதல் முதலாக யின்-யாங்க் மூலம் பிறந்தார்கள்.     யின் தத்துவம் தாவேயிசத்தையும், யாங்க் தத்துவம் கன்ஃபூசியசிசத்தையும் முக்கியமாக சார்ந்துள்ளது. தாவேயிசம் தனிமையையும், கன்ஃபூசிசம் சமூக வாழ்க்கையையும் வலியுறுத்துகின்றன.    யின் என்பது உள்சக்தி; யாங்க் என்பது வெளி சக்தி. யின் – யாங்க் சின்னம் டாய் – சி (Tai Chi Symbol) சின்னமாகும். யின் – யாங்க் தத்துவம் ‘புக் அப் சேஞ்சஸ்’ – (The Bokk of Changes) என்ற ராஜா வென் என்பவர் ( King Wen)   ஆக்கிய மிகவும் புராதன சீன கிளாசிகல் நூலில் சொல்லப்பட்டுள்ளது. அது க...