Posts

Showing posts from April, 2019

திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

Image
திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் நிருபர்: ராஹுல் இப்போது கனவு உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது. அதுவும் குஜராத்திற்குச் சென்றாலே அவரது கனவு விண்ணுலகத்தில் சஞ்சரிக்க அவரது பேச்சும் அதை ஒட்டியே ஓடுகிறது. சமீபத்தில் குஜராத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். ஹிந்தியில் பேசினார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதன் வீடியோவைப் பார்த்து ஊர்ஜிதம் செய்த பிறகு தான் இதை எழுதுகிறேன். ஆகையால் இதன் உண்மைத் தன்மையை ஒருவரும் சந்தேகிக்க வேண்டாம். ‘குஜராத்தில் உள்ள உங்கள் நிலத்தினால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. நான் சந்திரனில் இயந்திரங்களை உழ அனுப்பி வைப்பேன். அங்கு நீங்கள் சந்திரனில் உருளைக்கிழங்கு பயிர் செய்யலாம். நீங்கள் அங்கு பயிர் செய்த உருளைக்கிழக்கை குஜராத்தில் விற்பனை செய்வதற்கு நான் உதவி செய்வேன்.’ என்பது தான் ராஹுலின் பேச்சு. வாசகர்: இது பட்ரோடா குருவின் தாக்கமாக இருக்கலாம். அந்த மா மேதை சமீபத்தில் சொன்னார்: ‘தேர்தல் ஓட்டு இயந்திரம் ஒன்றை என்னிடம் ஒரு வருடம் கொடுங்கள். அதை நான் ஆராய்ந்து அதில் உள்ள குறைகளைக் கண...

நெஞ்சு பொறுக்குதில்லையே!

Image
பெரியார் பாணியில் தார் பூசும் இவர் வெறும் காங்கிரஸ் தொண்டர்  இல்லை. இவர் பெயர் சச்சின் பைலட். இப்போது அவர் வகிக்கும் பதவி  ராஜஸ்தான் ராஜ்யத்தின் துணை முதல் மந்திரி. இந்தியாவின் தற்போதைய பாரதப் பிரதமரை தார் பூசி அவமதிக்கும் இந்த  அநீதியை எங்குபோய் முறையிடுவது. தன் பதவியைத் துறந்து இதை  அந்த மேதாவிசெய்திருக்க வேண்டும். எதற்கும் ஒரு எல்லை வேண்டும்.  அந்த எல்லையை மீறிய இந்த நபர் தண்டிக்கப் படவேண்டியவரே. காலம்  இதற்குப் பதில் சொல்லும்.    

கர்ம யோகி மோடி மீண்டும் தேர்வாக வேண்டும் பாரதப் பிரதமராக!

Image
சமீபத்திய ஒரு பேட்டியில் மோடியிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த சம்ஸ்கிரத ஸ்லோகம் எது என்று கேட்கப்பட்ட போது, “நித்வஹம் காம்யே ராஜ்யம் ந மோக்ஷம் ந ஸ்வர்க்கம் ந புனர்பவம் காம்யே துக்க தப்தனம் ப்ரனிநாமார்தினஷனம்” என்ற இந்த ஸ்லோகம் தான் தனக்குப் பிடித்ததாகச் சொன்னார். அதன் பொருள்: கிரீடம் வேண்டாம். சொர்க்கம் வேண்டாம். மோட்சம் கூட வேண்டாம். துன்பப்படும் அனைத்து ஜீவராசிகளின் கவலைகளைக் களைவதைத்தான் நான் மனதார விரும்புகிறேன். இந்த ஸ்லோகத்தின் படி தான் மோடி அவர்கள் கடந்த 60 மாதங்களாக பாரத தேசத்தை ஒரு கர்ம யோகி போன்று ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் உழைத்துள்ளார். சுத்தம் சுகம் தரும் என்பார்கள். 60 ஆண்டுகளாக கழிப்பறை இல்லாத காரணத்தால் வெட்டவெளியில் மல-ஜலம் கழிக்கும் வேதனையிலிருந்து இந்தியாவை மீட்டவர் மோடி. இதனால் குறிப்பாக பெண்கள் எவ்வளவு ஆனந்த மடைந்தார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஏழையாகப் பிறந்த மோடியால் தான் இதைச் சாதித்துக் காட்ட முடியும். பதவி ஏற்பு உரையிலேயே இதை தமது குறிக்கோள் என்று சொன்னதை முதலில் கிண்டல் செய்தவர்கள் பிறகு இது உலக அளவில் பாராட்டப்பட்டவுடன் மவுனம் ...

விகாரி தமிழ் புத்தாண்டு – 14-04-2019 – ஞாயிற்றுக் கிழமை

Image
விகாரி தமிழ் புத்தாண்டு கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் இந்தியாவில் லோக் சபா தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நிலையான அரசு அமைய எல்லாம் வல்ல இறைவனை வாய்மை வேண்டுகிறது. இந்திய மக்கள் அனைவரின் வீடுகளிலும் சுபீட்சம் நிலை பெற ஆண்டவனை மனம் உருகி வாய்மை பிரார்த்திக்கிறது. உழைப்போம், உயர்வோம் – என்ற தாரக மந்திரம் தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. சோம்பலுக்கு இடம் கொடுக்காமல், நேர்மையைக் கடைப்பிடித்து, தர்மமான வழியினைத் தேர்வு செய்து, நம்மையும் நாட்டையும் உலக அளவில் உன்னத நிலையை அடைய இந்த தமிழ்ப் புத்தாண்டில் உறுதி பூணுவோம்.  

ஸ்ரீராம நவமி – 13-04-2019

Image
ராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி. ஸ்ரீராம நவமி 13-ம் தேதி ஸ்மார்த்த நவமியாகவும், 14-ம் தேதி வைஷ்ணவ நவமியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகத்து மக்களுக்கு நீதி, ஒழுக்கம், தர்மம் ஆகியவைகளை ராமரே பூமியில் பிறப்பெடுத்து மனிதனாக வாழ்ந்து ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். கிருஷ்ண பட்ச நவமி திதியில் ராமர் அவதரித்தார். ராம நாமம் ஹிந்துக்கள் உச்சரிக்கும் உன்னத மந்திரமாகும். ராமரின் திவ்விய திருவடி பணிந்து சகல செளபாக்கியங்களும் அனைவரும் பெற வாய்மை வேண்டுகிறது.