2579-வது கவுதம புத்தரின் வருடப் பிறந்த நாள் – 10-05-2017
புத்தர்
என்றால் ‘உத்தம புருஷர்’ என்றே பொருளாகும்.
சாரநாத்தின்
தர்மச் சக்கரம் தான் புத்தரின் எட்டு வகையான தர்ம சக்கரப் பாதையின் சின்னம். அந்த தர்மச்
சக்கரம் எட்டு குறுக்குச் சட்டங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இது புத்த மதத்தின் முக்கிய
முத்தி அடையும் பாதைகளான எட்டு தர்மங்களைக் குறிக்கின்றன. நேர்மையான பார்வை, நேர்மையான
நோக்கம், நேர்மையான சொல், நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி,
நேர்மையான எண்ணம், நேர்மையான சமாதி – ஆகிய எட்டு அம்ச தர்மப் பாதையும் புத்தர் முதன்
முதலாக சாரநாத்தில் உபதேசித்த முக்கிய புத்தமதக் கொள்கையாகும்.
அன்பு,
வீரம், பொறுமை, சாந்தி, பெருந்தன்மை, நற்குணம், சிரத்தை, மென்மை, தன்னலமற்ற தன்மை,
தன்னடக்கம், தியாகம், சத்தியம், நேர்மை, நீதி, கருணை, அருள், பணிவு, நேர்மை பிறழாதல்,
பரிவு, ஆன்மீக அறிவு, மன்னித்தல், உண்மை, துறவு, நம்பிக்கை
– ஆகிய 24 புத்த தர்மங்களை அசோக சக்கரம் குறிப்பிடுகிறது.
அது
தான் நமது அரசாங்கச் சின்னமாகவும் இருக்கிறது.
புத்தரின்
கொள்கையின் முக்கிய அம்சம் – அஹிம்சை. ஜீவ ஹிம்சை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது
புத்தமதத்தின் ஜீவ நாடியாகும். அவருக்குப் பிறகு தான் ஹிந்து மத யாகத்தில் மிருக பலி
ஒழிந்தது. ‘புத்தரின் அஹிம்சையும், ஆதி சங்கரரின் ஞானமும் தான் இந்தியாவை உன்னத நிலைக்குக்
கொண்டு செல்லும்’ என்று முழங்கியவர் இந்தியத் தாயின் தவப் புதல்வர் சுவாமி விவேகானந்தர்.
புத்தரின்
அருள் வேண்டி வாய்மை அவரது அடி பணிந்து வணங்குகிறது.
Comments