Posts

Showing posts from July, 2014

அசோசியேட் ஜர்னல் லிமிடெட் - நேஷனல் ஹாரால்ட் - யங்க் இந்தியன் - இந்திய நேஷனல் காங்கிரஸ் விவகாரம்

Image
இந்த விவகாரங்களைப் பற்றித் தெரிய பல இருப்பினும் ,  கீழ்க்கண்ட மூன்று முக்கிய கட்டுரைகள் / பேட்டி உதவும் . 1. சட்ட நுணுக்கங்கள் , சட்ட விதிமுறை மீறல்களின் விவரங்கள் , தண்டனை விளக்கங்கள் ஆகியவைகள் இதில் அறியலாம் . - இணைப்பு . 2.   எஸ் . குருமூர்த்தியின் கட்டுரை - அனைத்துச் செயல்களும் ஊழல் மயம் - இணைப்பு 3. மஹாத்மா காந்தியின் செயலாளராக இருந்த எஸ் . கல்யாணம் பேட்டி - இணைப்பு இந்த இணைப்புகளில் சொல்லப்பட்ட விவரங்களின் முக்கியமானவைகளைப் பற்றி எந்தவிதமான உள் நோக்கமும் இன்றி , வாய்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொன்டு இந்த கட்டுரையை எழுதத் துணிந்துள்ளேன் . இது ஏதோ புதிதாக எழுப்பிய குற்றப் பத்திரிகை அல்ல . கடந்த பல வருடங்களாக சுப்பிரமணிய ஸ்வாமியால் வெளிப்படையாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒன்று தான் . ‘ நான் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறேன் . என் மேல் மான நஷ்ட வழக்கோ அல்லது வேறு வழக்கோ காங்கிரஸ் என் மேல் போட்டால் ,   நான் அதன் மூலம் என் குற்றச் சாட்டுகளை ஆதாரத்துடன் கோர்ட்டில் சமர்ப்பிக்க ஏதுவாக இருக்கும் ’ என்று சொன்னாலும் , காங்கிரஸ் , “ தைரியமிருந்தால் , கோர்ட்...

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்து நர்ஸ்கள் மீட்பு

Image
ஐ . எஸ் . ஐ . எஸ் . என்ற - (Islamic State of Iraq and Syria - ISIS)  - சுன்னி இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளின் பிடியில் பல நாட்கள் இருந்த 46 நர்ஸ்களையும் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது மோடியின் பெரும் சாதனை என்று பலராலும் போற்றப்படுகிறது . இது அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகள் , நண்பர்கள் , அயல் நாட்டுத் தூதுவர்கள் , நமது தற்போதைய இந்திய அதிகாரிகள் மற்றும் முந்தைய அதிகாரிகள் , சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஆகியவர்களின் பூரண ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றங்கள் ஆகியவைகளால் இது வெற்றி அடைந்தது என்றாலும் , மோடி அரசின் இந்த அணுகுமுறை அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றது . இது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனையாக உருவெடுத்து விட்ட ஒன்றாகும் .  இந்திய நர்ஸ்களை தீவிரவாதிகள் இராக்கின் சில நகரங்களை ஆக்கிரமித்து , அவைகளைத் தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து , ‘ இஸ்லாமிய இராக் - சிரியா ’ என்று பிரஹடனம் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட இராக் அரசாங்கத்துடன் யுத்தம் செய்ய தயார் நிலையில் இருந்தனர் . ஆகையால் , யாருடன் பேச்சு வார்த்தை...

இரும்புச் சங்கிலியால் யானைபடும் ரண அவஸ்தைகள்

Image
முழுவிவரங்களுக்கு சொடுக்கவும் இணைப்பை மார்கரெட்  ஒயிட்டேக்கர் என்பவர் மிருகங்களின் நடவடிக்கைகளை அறிந்து செயல்படும் முறைகளை பயிற்சியாக யானைப் பாகன்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் வல்லுனர் . யானைகளை இரும்புச் சங்கிலிகளால் கட்டித் துன்புறுத்துவதை அடியோடு தவிர்த்து , யானைகளை கையாளும் வழிமுறைகளை அவர் பயிற்சிமூலம் யானைப் பாகன்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக பங்களூரில் உள்ள பென்னர்கட்டா தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளார் . அதன் காரணமாக , கூடிய சீக்கிரமே 50 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள யானைச் சரணாலயத்தில் , அனைத்து யானைகளும் இரும்புச் சங்கிலியிலிருந்து முற்றிலும் விடுபட்டு , சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப் படப்போவதை அறியும் போது , யானையை விநாயகரின் அம்சமாகக் கும்பிடும் அனைத்து ஹிந்து மக்களுக்கும் ஒரு உவப்பான செய்தியாகும் . மேலே உள்ள படத்தில் உள்ள யானையின் பெயர் சுந்தர் . அந்த யானை முன்பு மஹாராஷ்டராவின் கொல்ஹாபூர் நகரத்திலுள்ள வாராநகர் கோயிலில் மிகவும் கொடூரமாக துன்பப்படுத்தப்பட்டதை அறிந்த ஒரு அன்பர் மும்பை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார் . அதன் காரணமாக இந்...

அரசியல் தியாகி வாஞ்சிநாதன்

Image
(1911ஜூன் 17 சனிக்கிழமையன்று வீரன் வாஞ்சிநாதன் உயிர்த் தியாகம்செய்த 102ம் ஆண்டு நினைவுநாள் ஜூன்17, 2014) மோடி அரசு பதவி ஏற்றபின் தான் , பல நாள் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்று முதன் முறையாக வாஞ்சியின் உருவப்படத்தை ரயில்நிலையத்தில் நிறுவி அஞ்சலி செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்பதை வாய்மை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறது . இதைச் சாத்தியப்படுத்திய மத்திய - மாநில அரசுகளை வாய்மை பாராட்டுகிறது . இனி இந்த அஞ்சலி அரசு விழாவாக நடைபெறும் என்பது வீரவாஞ்சியின் தியாகத்திற்குக் கிடைத்த மரியாதையாகும் . வீர வாஞ்சிநாதனைப் பற்றிய சில முக்கிய செய்திகள் : v மணியாச்சி ரயில்நிலையத்தில் அப்போதைய திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு , அங்கிருந்த கழிப்பறைக்குள் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன் என்ற வீர இளைஞனின் சட்டைப் பையில் இருந்த கடிதம் ஒரு செய்தியைச் சொல்லும். " மிலேச்ச இங்கிலீஷ்காரர்கள் நம் பாரத நாட்டைக் கைப்பற்றியதோடு , நம் இந்துக்களின் சநாதன தர்மத்தை அழிக்கின்றனர். ஒவ்வொரு இந்தியனும் வெள்ளையனை வெளியேற்றி ஸ்வராஜ்யத்தையும் , சநா...

‘அச்சே தின்’ ரயில் - மத்திய பட்ஜெட்கள்

Image
ரயில்வேயின் இன்றைய நிதி நிலையை ரயில்வே மந்திரி டி . வி . சதானந்த கெளடா தமது புதிய பட்ஜெட்டைச் சமர்ப்பிக்கு முன் இப்படி வர்ணிக்கிறார் : ‘ ஒரு பிரயாணிக்கு ஏற்படும் நஷ்டம் ஒரு கிலோ மீட்டருக்கு 10 பைசா வீதமாக 2000-01- ல் இருந்தது . அது  2012-13- ல் 23 பைசாவாக நஷ்டம்   அதிகமாகி விட்டது .  ரயில்வேயின் மொத்த வருவாயில் 94% செலவாகிவிடுகிறது. 6% மட்டுமே மிஞ்சுகிறது . மேலும் , இதுவரை அறிவித்து நடைபெற்று முடிவு பெறாமல் இருக்கும் திட்டங்களின் எண்ணிக்கை : 33. அதில் 4 திட்டங்கள் கடந்த 30 வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டும் , இன்னும் முடிவு பெறாமல் இருக்கிறது . ஆகையால் புதிய திட்டங்களை அறிவிக்காமல் , அறிவிக்கப்பட்ட திட்டங்களைவிரைவில் முடிக்க உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும் . இவைகளுக்கே 5 லட்சம் கோடி வரை செலவாகும் . அதாவது ஆண்டொன்றுக்கு ரூபாய் 50,000 கோடி வரை 10 வருடங்களுக்குத் தேவைப்படும் . இதுவே ஒரு பெரிய சவாலான ஒன்றாகும் .’ இந்த நெருக்கடியான நிதி நிலையிலும் , அந்நிய முதலீடு - பொதுமக்கள் தனியார் பங்களிப்பு மற்றும் மக்களின் ஆதரவு மூலம் ( மோடியின் நான்கு பி - க்கள் ...