Posts

Showing posts from November, 2023

அண்ணாமலையை ஆதரிப்போம் – அரசு கட்டிலில் அமரவைப்போம்

Image
  காங்கிரஸின் தூய காமராஜரின் ஆட்சி பதவி இழந்து திராவிடர் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து, ஊழல் மலிந்து, தர்மம் சீர்குலைந்து தமிழக மக்கள் இந்த இழிவான ஆட்சிக்கு முடிவு கட்ட ஒரு உத்தமன் வந்து சீர் செய்ய மாட்டானா? என்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக காந்திருந்த தமிழகத்திற்கு தீய தீராவிட மாடல் ஒழியும் காலம் வந்து விட்டது என்று அண்ணாமலை அரசியல் களத்தில் குதித்த பிறகு நம்பிக்கை பிறந்துள்ளது. திராவிடக்கழக வளர்ச்சியை மிகவும் மூர்க்கமாக காங்கிரசைவிட அப்போதையை கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்றோர்கள் கூட்டங்கள் போட்டு எதிர்த்தார்கள். ஆனால் அந்த அவர்களின் கொள்கை வழி எதிர்ப்புகளை தங்களது திராவிடக் கொள்கைகளை பொது மக்கள் மைத்தியில் வைக்காமல், ‘கம்யூனிஸ்ட் ஒரு பாப்பான் கட்சி .. ராமமூர்த்தி ஒரு நொண்டி, ஜீவானந்தம் செவிடு .. “ என்று தனிப்பட்ட முறையில் தர்க்கம் செய்து, அடுக்கு மொழி – ஆபாச மொழி – சபை இங்கிதம் சிறிதும் இல்லாத தாசித்தனமான மேடைப் பேச்சுக்கள் என்று தமிழக அரசியல் 60 ஆண்டுகளுக்கு மேல் விமோசனம் கிடைக்காமல்  தத்தளித்தை இங்கு நினைவு கூறவேண்...

துரோணர் ஏகலைவனுக்கு இழைத்த பெரும் பிழை

Image
1.    துரோணர் ஏகலைவனுக்கு இழைத்த பெரும் பிழை துரோணரின் வாழ்க்கை ஒரு சோகக் கதையாகும். அவரது பிறப்பே விசித்திரமான ஒன்று. அவரது இறப்பும் மிகவும் சோகமான ஒன்றாக அமைந்து விட்டது. அவருக்கு தாயின் கற்பவாசம் இல்லாமலேயே துரோண் என்ற ஒரு பாத்திரத்தில் பிறக்கும் நிலை உண்டாயிற்று.  துரோணரின் தந்தை பெயர் பரத்வாஜ மஹரிஷி. அவர் ஒரு நாள் வழக்கம் போல் கங்கை நதியில் ஸ்நானம் செய்ய தமது சிஷ்யர்களுடன் சென்றார். அப்போது கிரிதாசி என்ற ஒரு பேரழிகியான அப்சரஸ் கங்கை நதியில் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, கட்டுப்படுத்த முடியாத காம உணர்ச்சியின் காரணமாக ஜீவ விந்து வெளிப்பட அதை ஒரு பாத்திரத்தில் பாதுகாத்து அதுவே ஒரு அற்புதக்  குழந்தையாக ஜனித்தது. துரோண் என்றால் பாத்திரம். ஆகையால் அதில் பிறந்ததால் துரோணர் என்று பெயர் பெற்றார். துரோணர் தமது இந்த அசாதாரணப் பிறப்பைப் பற்றி மிகவும் பெருமைப் பட்டு அதை வெளிப்படுத்தி உள்ளார். அதே போல் துரோணரின் இறப்பும் சோகமான ஒன்றாகும். யுத்தகளத்தில் சிரஞ்சீத்துவ வரம் பெற்ற தன் அன்பு மகன் அஸ்வத்தாமன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தவறான செய்தியால் துக்கம் தாங்காமல்  தம...

06 – 11 – 2023 - இன்றைய இனிய சிந்தனை – லட்சியம்

Image
  லட்சியம் இல்லா வாழ்வு சுவை இல்லா உணவிற்குச் சமம். லட்சியம் என்பது உணவுக்கு உப்பு போன்றது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே  – என்பது போல் லட்சியம் இல்லா வாழ்க்கை உப்பில்லா உணவு போல் குப்பையானதாகும். லட்சியம் என்பது உடல், உள்ளம், உயிர் ஆகியவைகளை விண்ணளவு உயர்த்தும் உயர்வானதாக இருக்க வேண்டும். உடலை லட்சியமாகத் தேர்வு செய்தால் விளையாட்டு வீரனாக மிளிர உழைக்க வேண்டும். அதற்கு ஏற்ப தினமும் உடற்பயிற்சி, சத்துள்ள உணவு, சரியான ஓய்வு என்று உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அப்பொழுதான் உலக விளையாட்டு அரங்கில் பல பதங்கங்களை வென்று தனிப்பட்ட முறையில் புகழும், தேசத்திற்கு உயர்வும் கிடைத்து லட்சியம் நிறைவேறி இனிதே வாழ்வைக் கழிக்கலாம். உடல் பேணி நாட்டைக் காக்கும் படை வீரனான வாழ்வையும் தேர்வு செய்து புகழ் பெற்று வாழலாம். உள்ளம் – மனசு ஆகியவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யும் லட்சியம் என்றால் அந்த லட்சியம் உடலின் மூளையுடன் சம்பந்தப்பட்டதாக அமைகிறது. இதன் மூலம், கல்வி கற்று,  பலவகையான புதிய கருவிகளை புதிதாக உருவாக்கி சிறந்த அறிவியல் உலகில் ஒரு பெரிய பிரம்மாவாக புகழ் பெற்று வெற்றிகரமான வாழ்வு...

04 – 11 2023 - இன்றைய இனிய சிந்தனை

Image
சுதந்திரம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. மனிதன் சுவாசம் போன்று மனிதனுக்கு கூடவே அந்த சுதந்திரம் ஒரு கவச அங்கியாக இருக்க வேண்டும். உலக சரித்திரத்தை அலசிப் பார்க்கும் போது மனிதன் இன்னொரு மனிதனின் சுதந்திரத்தைப் பறித்து அவனை அடிமையாக்கி அதன் மூலம் ஒரு பெரும் அடிமைக் கூட்டத்தை உருவாக்கி தன்னை ஒரு பெரும் தலைவனாக அனைவரையும் ஏற்க வைத்து ஒரு பெரிய அரச பரம்பரையை உருவாக்கி கோலோட்சும் நிலை உருவாகி விடுகிறது. இதன் மூலம் மனிதர்களை மிருகங்கள் போல் சந்தைகளில் அடிமைகளாக விற்பதும் – வாங்குவதும் பல நாடுகளில் நடை முறையில் இருந்துள்ளன. அப்படி அடிமைகளாக வாங்குபவர்களை தங்கள் அரண்மனைகளில் சேவகர்களாக வேலை வாங்கினார்கள். அது மட்டுமல்ல. அந்த அடிமைகளை வேடிக்கைப் பொருளாகவும் ஆக்கி அவர்களை விளையாட்டு அரங்கில் நடைபெற வைத்து மனம் மகிந்தனர் அந்த அரச வம்சத்தினர். உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் கொடூர மிருக குணங்களை எழிப்பி அசுரர்களாக உருவெடுத்து அந்தக் கேளிக்கைகளில் சுகம் கண்டவர்கள். இதற்காகவே பெரிய விளையாட்டு மைதானங்களைக் கட்டினார்கள். பசியோடு பல நாட்கள் சிங்கங்களை கூண்டில் அடைத்து வைத்து, பிறக...