Posts

Showing posts from May, 2021

முழுப் பழமொழியால் அரசியல் முகமூடி கழலும் அவலம்

Image
  முழுப் பழமொழியால் அரசியல் முகமூடி கழலும் அவலம் புகழ்பெற்ற பழமொழி ஒன்றை கூறி நண்பர் ஒருவர் அதற்கு விளக்கம் கேட்டிருந்தார் . இந்த பழமொழியின் முதல் இரண்டு வரியை மட்டுமே அறிந்திருந்த அந்த நண்பர் இதற்கு மேலும் இரண்டு வரிகள் உண்டு என்று கூறியதும் வியப்புற்றார் . அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் அடுத்த வரிகளை கூறினால் திருவள்ளுவர் சனாதனி ஆகிவிடுவாரோ என்ற அச்சத்தில் நாசுக்காக அந்த குறிளின் முதல் வரியை வைத்து எவ்வாறு அரசியல் செய்தனரோ அதுபோல கணியன் பூங்குன்றனாரின் " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற முதல் வரியை தூக்கிக்கொண்டு உலா வரும் போராளிகள் அடுத்த வரிகளை கூறுவதில்லை !   இதுபோன்று மறைக்கப்பட்ட திருமாலுக்கு அடிமை செய் என்ற முத்தமிழ் மூதாட்டியின் ஆத்திச்சூடியின் வரிகள் வரை இன்று நம்மிடம் மறைக்கப்பட்டு வருகின்றன .   அவ்வகையில் இந்த நண்பர் என்னிடம் விளக்கம் கேட்ட பழமொழியானது " ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்ற இரு வரிகளுக்கும் த...

மமதா மாதுவின் மஹா பயங்கர கோர தாண்டவம் – வங்காளம் பற்றி எரிகிறது.

Image
  மமதா மாதுவின் மஹா பயங்கர  கோர தாண்டவம் –  வங்காளம் பற்றி எரிகிறது . மமதா மூன்றாவது முறையாக சென்ற 2016 தேர்தலில் பெற்ற இடமான 211 இடங்களை விட 2 இடங்கள் அதிகமாகப் பெற்று 213 இடங்களில் மே 2021 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அது அவருக்கு முழுமையான சந்தோஷத்தைக் கொடுக்க வில்லை என்று தெரிகிறது. அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லாம். ஒன்று: தனது கட்சி அமோக வெற்றி பெற்றாலும் தான் மிகவும் நம்பிக்கையாக இருந்த நந்திகிராமத்தில் பிஜேபியின் வேட்பாளர் சுவேந்து அதிகாரி – அதுவும் தன் கட்சியில் இருந்து கடைசி நேரத்தில் தாவியவர் – தன்னைத் தோற்கடித்தது – குறைந்த 1956 ஓட்டு வித்தியாசமாக இருந்தாலும் – அது பெரிய அதிரடித் தோல்வி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்தத் தோல்வியால் மமதா கவலைப் பட்டாலும், அது அவரது இயல்பான ‘கெரோ  மனநிலை’- யால் பாதிக்கப்பட்டவர் – ஏன் அதையே தமது அயுதமாகவும் – அது மக்களின் உரிமைப் போராட்ட ஆயுதமாகும் என்றும் அதை உபயோகிக்க உபதேசம் செய்வது அரசியல் தலைவர்களின் கடமை என்றும் கொக்கரித்த ‘அடிபட்ட வங்கப் புலி’யாகத் தான் தன்னை அடையாளம் காட்டி வருகிறார். மமதா ஜனநாயக ச...

*சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேப்பிலை, துளசி, மஞ்சள்தூள் வைத்து பூஜை*

Image
  * சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேப்பிலை , துளசி , மஞ்சள்தூள் வைத்து பூஜை * திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது . சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார் . உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள் . அடுத்த பொருள் வேறு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் இந்த பொருள் வைக்கப்பட்டிருக்கும் . இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் . அது நேர்மறையாகவும் இருக்கலாம் , எதிர்மறையாகவும் இருக்கலாம் . இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ப...