Posts

Showing posts from February, 2021

“ ஸர்வே ஸந்து நிராமயா “ – அனுப்பு: எஸ். ஷங்கர்.

Image
  ஸர்வே ஸந்து நிராமயா என்ற சம்ஸ்கிரதத்திற்கு ‘அனைத்து மக்களும் நோயில்லாமல் வாழட்டும்’ என்று பொருள். இப் பூமியில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் ...! இதுவே பாரதத்தின் , பிரதமர் மோடியின்   தாரக மந்திரம் ..! பிரேஸில் , மொராக்கோ , மியான்மார் , பங்களாதேஷ் , சௌதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா   இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்காக   வரிசை கட்டி நிற்பதைப் பார்த்து ஜெர்மனிக்கு தலை சுற்றி வாயடைத்து போய் இருக்கிறது ..! ஜெர்மானிய சான்ஸலர் ஏஞ்சலா மார்க்கல்   வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் மோடியை தொடர்பு கொண்டு தன் கவலையைத் தெரிவித்தார் . அவர் கூறியது " இந்தியாவின் உள்நாட்டு தேவையே பயங்கரமானது . இந்நிலையில் மற்ற நாடுகளின் க்யூ ( வரிசை ) நீண்டு இருக்கிறது . அப்படியிருக்க எங்க நாட்டின் தேவையையும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் தேவையையும் எப்போது பூர்த்தி செய்வீர்கள் ..?" என்று கேட்டிருக்கிறார் " உங்கள் உள்நாட்டு தேவையுடன் எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் " என்று வேண்டிக் கொண்டிருக்கிறார் . மோடியும் க...

தலைசுற்றும் தமிழக அரசியல்

Image
  காமராஜ் தமிழ் நாட்டு காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சராக இருந்து பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உயர்ந்து, பக்தவஸ்தலம் முதல் அமைச்சராக பதவி ஏற்று, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்து, ‘பக்தவத்ஸலம் பத்து லட்சம்’ என்று அபாண்டமாக பழி சுமத்தியது அண்ணா தலைமையில் உள்ள திராவிட கட்சி. அடுத்து வந்த சட்ட சபைத் தேர்தலில் ‘ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு, அடுக்கு மொழி, ஆபாச மொழி என்று அரசியல் மேடைகளை அலோங்கோலப்படுத்தி, காமராஜரையே அவரது விருதுநகர் தொகுதியில் ஒரு சாதாரண சட்டம் படித்த திமுக நபர் – அதுவும் காங்கிரசின் தலைமைப் பதவியில் இருப்பவரை – தோற்கடித்து சரித்திரம் படைத்தது. இதற்கு மூளையாக முதுபெரும் காங்கிரஸ் தலைவர் ராஜாஜி – கொள்ளுக பட்டர் என்று கருணாநிதியால் பட்டம் சூட்டப்பட்டவர் – செயல்பட்டு திமுக அரியணை அமர உதவியது காலத்தின் கோலமாகி அந்த திராவிட ஆட்சி தமிழ் நாட்டில் நிலைபெற்று விட்டது. காங்கிரஸ் கட்சியும் திமுக – அதிமுக – என்று இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்து காங்கிரஸ் தமிழ் நாட்டில் தலை தூக்க முடியாமல் – ஏதோ ஒரு திராவிடக் கட்சியின் தயவி...

துணிந்து தனிந்து போ – பெரியவாளின் அருள் வாக்கு

Image
  மனிதர்கள் பகத்து விட்டுக் காரர்களாக இருந்தாலும், அனாவசியமாகச் சண்டை போட்டு, போலீஸ் – கேஸ் என்று அலையும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக மஹாப் பெரியவாளின் அருள் வாக்கு:   “என் பக்கத்து வீட்டுக்காரனின் தொல்லை தாங்க முடியல. போலீசுக்குப் போறதைத் தவிர வேறு வழி தெரியல ..’” என்று ஒரு பக்தர் சொன்னவுடன், பெரியவா, ‘என்னிடம் ஆலோசனை கேட்க வந்தாயா.. இல்லை அனுமதி கேட்க வந்தாயா?’ என்று கேட்டவுடன், அந்த பக்தர் அதிர்ந்து ‘நீங்கள் சொல்கிறபடிச் செய்யறேன்’ என்றார்.   பெரியவாளின் அறிவுரை: மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பார்கள். பலாப்பழம் போல சிலர் முரடாக தோன்றலாம். ஆனால் மனதிற்குள் நல்லவர்களாக இருப்பார்கள். சண்டையில் ஒருவர் மீது மட்டும் தான் தவறு இருக்கிறதா, மற்றவர் மீது தவறே இல்லையா என்பதை யோசிக்க வேண்டும். இரண்டு பேர்களும் பக்கத்து வீட்டு சொந்த வீட்டில் இருப்பவர்கள் தானே? இருவராலும் வீட்டை மாற்ற முடியாது. ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது தான் நல்லது. ஆளுக்கொரு மாதிரி தானே நம் முகமும் இருக்கிறது. அது போ...

185-வது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாள்

Image
  185-வது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாள்: (ஜனனம்: 17-02-1836 ஜீவசமாதி: 16-08-1886 – தமது 50-வது வயதில்)   காதர் சடோப்பாத்யாய் என்பது தான் ராமகிருஷ்ணரின் சிறுவயதுப் பெயர். ஹூக்ளியில் உள்ள காமர்புகுர் கிராமத்தில் ஒரு அந்தணர் குலத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே கல்யாணம். அவரது மனைவியை காளியின் அம்சமாகவே கருதி வழிபட்டார்.   அவர் கிராமப் பள்ளியில் சம்ஸ்கிருதம் பயில அனுப்பியும் அதில் அவருக்கு நாட்டமில்லை. களிமண்ணில் பல இந்து மதக் கடவுள்களின் சிலைகளைச் செய்து வழிபடுவதில் ஆர்வம் கொண்டார். மேலும் பூஜாரிகள் – முனிவர்கள் ஆகியவர்களிடம் புராண இதிகாச கதைகளை கேட்டு ஆனந்திப்பிப்பார். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்கி தம்மை மறந்த நிலைக்குச் சென்று விடுவார். தக்ஷிணேஸ்வர காளி கோயில் பூஜாரியாகச் சேர்ந்தார். இந்தக் கோயில் ராணி ராஷ்மோனி என்பவரால் 1855 ஆண்டு நிருவப்பட்டதாகும். ராணி கீழ் ஜாதி வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தக் கோயிலுக்கு பூஜாரி கிடைப்பது சிரமமாக இருந்தது. காளி கோயிலுக்கு ராம்குமார் என்பவர் தலைமை பூஜாரியாகவும், ராமகிருஷ்ணர் அவருக்கு உதவியாளராகவும் நியமி...

மாசு போக்கும் மாசி மகம் – 27-02-2021 (சனிக்கிழமை)

Image
  மாசி மாதத்தில் மக நட்சத்திரம் வருவதை தமிழகத்தில் ஹிந்துப் பண்டிகையாக குறிப்பாக கும்பகோணத்தில் உள்ள மஹா மக தெப்பக்குளத்தில் புன்னிய ஸ்நானம் செய்து கொண்டாடுவார்கள். அந்த நாளில் பவுர்ணமியும் சில சமயங்களில் வரும்.   அந்த நன்நாளில் கோயிலிலுள்ள உற்சவ மூர்த்திகள் கோலாகலமாக பக்தர்கள் புடைசூழ குளம் , ஏரி , கடல் , ஆறு ஆகியவைகளில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் . அப்போது பக்தர்களும் அந்த நீரில் புனித நீராடுவார்கள் . அப்படி நீராடுவதால் அவர்களின் பாவங்கள் நீங்கி , புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம் .     ஒவ்வொரு வருடமும் மாசிமகம் வந்தாலும், 12 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மாசி மகம் – மஹா மகமாக வெகு சிறப்பாக கொண்டாடப்படும். சென்ற மஹா மகம் 2016-ம் வருடம் பிப்ரவரி 13-ம் தேதி கொண்ட்டாடப் பட்டது. அடுத்த மஹா மகம் 2028-ல் வருகிறது. அந்த விழா கும்பகோணத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.   மகர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள் என்பது நம்பிக்கை. சூரியன் அரசனாகவும், சந்திரனை அரசியாகவும் சொல்வார்கள். சந்திர அரசி சிம்ம ராசிக்கு மாசி மா...