Posts

Showing posts from January, 2021

மத்திய அரசின் 3 விவசாய புதிய சட்டங்கள் – எதிர்த்துப் போராடும் பஞ்சாப் விவசாயிகள் – ஆக்கம்: பவித்திரன்

Image
  கடந்த 50 நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து தொய்வில்லாமல் அதே சமயத்தில் சாத்வீகமாக விவசாயிகள் சங்கத்தினர் போரட்டம் நடத்துகிறார்கள். விவசாயிகள் பலர் தங்கள் மனைவிமார்களுடன் போராட்டக் களத்தில் உள்ளார்கள். பலரின் குழந்தைகளும் போராட்டக் களத்தில் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடுகிறார்கள். ‘மத்திய அரசே! 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்’ என்பது தான் தங்களது ஒரு வரிக் கோரிக்கை என்று போராடும் விவசாயிகள் சொல்கிறார்கள். ‘போராடும் விவசாயிகளே! 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அதில் உள்ள ஷரத்துகளில் காணும் குறைகளை நீக்க நாங்கள் தயார்’ என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ‘மத்திய அரசே! பேச்சு, பேச்சு, பேச்சு ! என்ன தான் இந்த 50 நாட்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? ஏன் இதற்கு ஒரு முடிவு வரவில்லை ? நாங்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட களம் இறங்குகிறோம். அதற்கு முதல் படியாக போராடும் விவசாயிகளின் நம்மிக்கையைப் பெற, உங்கள் 3 வேளாண் சட்டங்களையும் முடிவு காணும் வரை நிறுத்தி வைக்கிறோம். இது நாங்கள் துணிந்து எடுக்கும் மிகவும் அசாதாரணமான செயலாகும். வேளாண் சட்டங்களில் உள்ள க...

உச்சநீதி மன்றத்தின் உச்ச கட்ட தலையீடு

Image
  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஏ.போப்டே கோர்ட்டில் கோபமாக உதிர்த்த வாசகங்கள் மற்றும் பார்லிமெண்டின் இரு சபைகளில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் புதிய சட்டங்கள் செயல் படாமல் நிறுத்தி வைத்த உத்திரவு ஆகியவைகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகும் என்று தான் கருதுகிறோம்.   தலைமை நீதிபதி, மத்திய அரசு, போராடும் விவசாயிகள் சங்கங்கள் ஆகியவைகளின் கருத்துக்களைத் தொகுத்துள்ளோம். இறுதியாக நீதிதேவதையின் அறைகூவலோடு தலயங்கம் முடிகிறது. வாய்மை வாசகர்கள் இவைகளைப் பற்றிச் சிந்திக்கவே இந்த தலையங்கம்.                         -    ஆசிரியர்.   உச்சமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டே: மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை போதுமான ஆலோசனைகள் செய்யாமல் நிறைவேற்றியதால் அதை எதிர்த்து விவசாயிகள் போராடுகிறார்கள். பல மாநிலங்கள் மத்திய அரசை எதிர்த்து பொங்கி எழுந்துள்ளனர். இது தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   போராட்டம் மாத...

பாரத தேசத்தின் தவப் புதல்வன் ஸ்வாமி விவேகானந்தரின் 158-வது வருடப் பிறந்த நாள் – 12 – 01- 2021

Image
  பாரத தேசத்தின் தவப் புதல்வன் ஸ்வாமி விவேகானந்தரின் 158-வது வருடப் பிறந்த நாள் – 12 – 01- 2021 (பிறப்பு: 12 – 01 – 1863;                        இறப்பு: 04 – 07 – 1902) 39-வருடங்களே உயிர்வாழ்ந்த சந்நியாசி உலகம் சுற்றி, ஹிந்து மதத்தின் உன்னதத்தை உலகத்திற்கு உணர்த்தியவர். அத்துடன் சோர்ந்து, பலமிழந்து, அடிமைத் தனமான மன நிலையில் உழன்று வாழும் இந்திய மக்களை – அதிலும் குறிப்பாக இளைஞர்களை ‘விழுமின், எழுமின் ! அன்னை பாரதத்தாயின் தளையினைக் களைய வீரம் கொள்வீர்’ என்று தாய்த் திருநாட்டின் அடிமைத் துயரத்தைத் துடைக்க முரசு கொட்டி முழங்கிய வீரனவன். ‘பலமே வாழ்வு, பலவீனமே மரணம்’ என்று முழங்கி உறங்கிய பாரத மக்களை எழுப்பி, பலம் பெறச் செய்து, சுதந்திர உணர்வுகளை ஊட்டிய உத்தம வீரரனவன். “நீங்கள் பாரத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரின் நுால்களைப் படியுங்கள். அவரிடத்தில் எல்லாமே ஆக்கபூர்வமானவை, அழிவை நோக்கி எடுத்துச் செல்...

தைப் பொங்கல் – மஹர சங்கராந்தி – 14 - 01 - 2021 ( வியாழக் கிழமை )

Image
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கியநகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல் நாள் உத்தரயணத்தின் துவக்கம். அது ஆனி மாதம் முடிய இருக்கும். பிறகு ஆடி மாதம்முதல் மார்கழி முடிய தட்சிணாயண காலமாகும். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் தை பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. மழைக்குக் காரணமானவன் இந்திரனும், அவனுடைய சகோதரன் உபேந்திரனமுமாகும். மேலும் மழையுடன் வெயிலும் பயிர் விளைவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் உழவு மாடுகளும் உழவர்களுக்கு உறுதுணையாக உழைக்கின்றன.   ஆகையால் தான் இந்த பொங்கலின் போது இந்திரனைப் போகியின் போதும், சூரியனை பொங்கலின் போதும், உழவு மாடுகளை மாட்டுப் பொங்கலின் போதும் தனித்தனியாக முக்கியத்துவம் கொடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள் தமிழக மக்கள்.   பொங்கலில் பால் பொங்கும் போது, ‘பொங்கலோ, பொங்கல்’ என்று குதூகலமாக அனைவரும் ஒன்றாக கோஷிப்பது அனத்து தேவதைகளுக்கும், உழவு மாடுகளுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.   மேலும், பால் பொங்குவதைப் போல், நம...